tag:blogger.com,1999:blog-24636266952758928782024-03-14T15:35:09.841+05:30பாடினியார்ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-55679831520990892732013-06-01T14:44:00.002+05:302013-06-01T14:44:23.365+05:30எழுத்தும் வாழ்க்கையும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlSXAero7xMk-yQFrqJPf6UTBdXbFLean8MFAVHjlyMCxHrut3x_C0dyjLh3XY1nt_1DnS1B3vdDS9DRmX996FJo3hVrsBWGMqvr674QCb2N-bXPPxUcOmC7fFPUJzrKvyYrTL8WHlWkb/s1600/writer+sujatha+family+2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlSXAero7xMk-yQFrqJPf6UTBdXbFLean8MFAVHjlyMCxHrut3x_C0dyjLh3XY1nt_1DnS1B3vdDS9DRmX996FJo3hVrsBWGMqvr674QCb2N-bXPPxUcOmC7fFPUJzrKvyYrTL8WHlWkb/s1600/writer+sujatha+family+2.jpg" /></a></div>
<br />சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க எடுத்தால் முடித்துவிட்டுத்தான் கீழே வைக்கவிடும். அறிவியல் கட்டுரைகளைக்கூட வாசகனை விறுவிறுப்பாக படிக்க வைக்க அவரால் மட்டுமே முடியும். அவரது எழுத்து என்னை எந்தளவுக்கு ஈர்த்துள்ளது என்பது அவரது இறப்பின்போதுதான் புரிந்தது.<br /><br />எழுத்தாளர் சுஜாதா இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டவுடன் மனம் கலங்கி கண்ணீர் வந்தது. இவரைப்போல பிரபலமான நபர்களது இறப்பின் செய்தி ஒரு செய்தியாகத்தான் தெரியும். அல்லது கொஞ்சம் மன வருத்தம் அடையும். கண்ணீரெல்லாம் வந்தது கிடையாது. ஆனால் சுஜாதாவின் இறப்பின் செய்தி என்னுள் மிகப் பெரிய சோகத்தை ஏற்படுதியது. அந்த சோகம் பல மாதங்கள் நீடித்தது. அப்போதுதான் சுஜாதா அவர்களின் எழுத்து எத்தகைய தாக்கத்தை என்னுள் ஏற்படுதியுள்ளது என்று உணர்ந்தேன்.<br /><br /><br />சுஜாதா மனைவியின் பேட்டி பற்றி சிவராமன் ப்ளசில் படித்தேன். படித்தவுடன் தோன்றியது இத்தனை காலத்துக்குப் பிறகு இந்த அம்மாவுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேல.<br /><br />ஆனால் திருமதி சுஜாதா அவர்களின் இதே வகையான பேட்டி சுஜாதா உயிரோடு இருந்த போதே ஏதோ ஒரு பத்திரிகையில் படித்திருக்கிறேன். இதே மாதிரி திட்டித்தான் எழுதியிருந்தார். அப்போதிலிருந்து எனக்கு ஏனோ திருமதி சுஜாதாவை பிடிக்காமல் போனது. நமது மனதிற்குப் பிடித்த ஒருவரைப்பற்றி தவறான செய்தியை மனது ஏற்கவில்லை. அப்படி சொன்னவரை பிடிக்காமல் போனது. இப்போது வரை பிடிக்காமல்தான் இருந்தது. காரணம் சுஜாதாவைப் பற்றி தவறாக சொன்னதனால்தான்.<br /><br />எனக்கு ஒன்னுதான் புரியல. பேட்டி கொடுத்தது திருமதி சுஜாதா. ஆனா அத பேட்டி எடுத்தவங்களயும் வெளியிட்ட பத்திரிகையையும் ஏன் திட்டறாங்கன்னு புரியல. அவங்க மனசுல உள்ளத அவங்க சொல்றாங்க. புதுகை அப்துல்லா சொல்றாரு அவங்க காலகட்டத்துல இதெல்லாம் சகஜம்னு. அப்டி சகஜமா இருந்தா இந்த அம்மாவுக்கு இப்பவும் அவ்வளவு வலி தரக்கூடிய நிகழ்வா அது இருந்திருக்காதுன்னு நினைக்கிறேன். நிறைய படித்த உலகத்தைப்பற்றி அதிக அளவில் தெரிந்த ஒருவர் ஒரு சராசரி ஆண் மகனைப்போலதான் மனைவியை நடத்த வேண்டுமா என்ன? அப்பறம் படிப்பு என்னத்துக்கு.<br /><br />சுஜாதா அவர்களுக்கும் தனது குணம் தெரிந்திருந்த காரணத்தினால்தான் தனது மனைவி கொடுத்த பத்திரிகை பேட்டியை அவர் தடுக்கவில்லை என்று நினைக்கிறேன். அல்லது அவரையும் மீறி வந்திருக்குமா தெரியவில்லை. ஒவ்வொரு மனிதனுள்ளும் ப்ளசும் இருக்கும் மைனசும் இருக்கும்.<br /><br />திருமதி சுஜாதாவும் சராசரி சமையலரையில் ஒளிந்துள்ள பெண் அல்ல. அவர்களும் பத்திரிகை ஆசிரியராகவெல்லாம் இருந்திருக்கிறார்கள். தெளிவான பெண்தான். அவர்கள் உணர்வுகளை சொல்கிறார்கள். சரி. இவங்க இப்டி சொல்றதுனால சுஜாதாவோட எழுத்தோட பவரெல்லாம் காணாம போயிடுமா என்ன? அவங்க அவங்க உணர்வுகள சொல்றாங்க. அதுக்கு மதிப்புக்கொடுப்போம்.</div>
ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-33182950734531635302013-03-12T13:44:00.001+05:302013-03-12T14:25:30.838+05:30விவேகானந்தர் இந்திய வரலாற்றில் ஒரு வித்தியாசமான இளைஞர் (1863-1902)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h4 style="text-align: left;">
வேதம் புதுமை செய் </h4>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<b style="text-align: left;">கமலாலயன்</b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<b style="text-align: left;"><br /></b></div>
<h2 style="text-align: left;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlIGRczhxmXtBNUjWjbFQi8DR03jF64-y3dcHudYoQ1fk3TqQGvF7uvqI0sUeZFFQXZuAIMAnV1eNcfLs8up_mxgU3Z5y4vd0d37OD_CGSWDx_2VF9Fy52ix2ki0tnOobG5MXehbIazWhi/s1600/vivekanda.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlIGRczhxmXtBNUjWjbFQi8DR03jF64-y3dcHudYoQ1fk3TqQGvF7uvqI0sUeZFFQXZuAIMAnV1eNcfLs8up_mxgU3Z5y4vd0d37OD_CGSWDx_2VF9Fy52ix2ki0tnOobG5MXehbIazWhi/s1600/vivekanda.jpg" /></a></h2>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<br />
உலகம் நமக்கு எண்ணற்ற கொடைகளை ஒவ்வொரு நாளும் வழங்கிக்கொண்டே இருக்கிறது: நீர், காற்று, உணவு, உடைகள், உறைவிடம், மின்சாரம், போக்குவரத்து வசதிகள், கல்வி, கலைகள், இப்படி இந்தப் பட்டியல் முடிவற்று நீளும் ஒன்று, இவற்றையெல்லாம் உலகிடமிருந்து, அதாவது சமுதாயத்திடமிருந்து-நாம் பெறுகிறோம், திரும்பவும் அந்த உலகிற்கு நாம் எதைத் திருப்பித் தந்திருக்கிறோம்? ஒரு தனிநபர் என்ற முறையில் நமது பங்களிப்பு என்ன?<br />
<br />
இந்த கேள்விதான் பலரை ஞானத் தேடலில் ஈடுபடச் செய்திருக்கிறது. தனி நபருக்கு முன்னால் வீசப்படுகிற இக்கேள்வியை இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டிற்கு முன் வீச முடியமா? முடியுமென்றால் இந்த நாட்டின் பதில் என்ன?<br />
<br />
"இந்தியா, உலகிடமிருந்து எவற்றைப் பெற்றுக்கொண்டிருக்கிறதோ, அவற்றுக்கு ஈடாகத் தானும் பலவற்றைக் கொடையளிககும், கடந்த காலத்தில் இந்தியா உலகிற்களித்து வந்திருப்பதைப் போன்றே, இன்றும், இனியும் உலகிற்கு அளிக்கிறது அளிக்கும்!" இதை மிகுந்த நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் உலக நாடுகளின் அவை ஒன்றில் முழங்கியவர் விவேகானந்தர்.<br />
<br />
பகத் சிங்கையும், பாரதியையும் போன்று விவேகானந்தரும் குறுகிய காலமே இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்தவர். மொத்தமே 39 ஆண்டுகள். அவர் போதித்தது வெற்று வேதாந்தமும், சனாதன தர்மங்களும் மட்டுமேயாக இருந்திருக்கும் பட்சத்தில் அவரது இந்த 39 ஆண்டுகால வாழ்க்கை, இந்த உலகப் பெருங்கடலில் கரைந்த பெருங்காயமாய் என்றைக்கோ மணமிழந்து போயிருக்கும். இந்த நாட்டில், சன்னியாசிகளுக்கா பஞ்சம்? ஆனால், விவேகானந்தர் முன் வைத்த வேதாந்தத்தின் தன்மை முற்றிலும் வேறுபட்ட ஒன்று. பசித்த வயிறுகளுக்குத் தேவை, சப்பாத்திகளும் சோறுமே தவிர மதமோ, வேதாந்தமோ ஏன், கடவுளோகூட அல்ல என்று திட்டவட்டமாகச் சொன்னவர் அவர்.<br />
<br />
இன்று, இந்துத்துவ வாதிகள், பகத்சிங்கையே தமது இரகசிய நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற உதவும் திருவுருவங்களுள் ஒன்றாக ஆக்கிவிட முயன்று வருகிற சூழலில், விவேகானந்தரைப் போன்ற சன்னியாசியின் நிலைமை என்ன என்பதை விவரிக்கவே வேண்டியதில்லை. ஆனால், அவர்கள் முன்னிறுத்துகிற விவேகானந்தரையல்ல நாம் காண வேண்டியது. இந்திய வரலாற்றில் மிக ஆழமான தடம் பதித்த ஒரு வீரத் துறவி மட்டுமல்ல. இந்த நாட்டின் கோடானுகோடி மக்கள், வயிற்றுக்குச் சோறும், உடுத்த உடையும், இருக்க இடமும் இன்றி வேதனைப்படுகின்றனரே என்று கண்ணீர் சிந்தியவர் அவர். வாடிய பயிரையும், நீடிய பிணியால் வருந்துகின்றோரையும், ஈடீல் மானிகளான ஏழையரையும் கண்ட போதெல்லாம் வாடித் துயருற்ற நமது வள்ளலாரின் அகில இந்தியப் பதிப்பே விவேகானந்தர்.<br />
<br />
1863-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 12-ம் நாளில் பிறந்தவர் இவர். தாயார் புவனேஸ்வரி தேவியும், தந்தை விஸ்வநாத் தத்தாவும் இவருக்கு வைத்த பெயர் நரேந்திரநாத். 1881-ல் முதன் முறையாக இராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்திக்கிறார். அனைத்து மதங்களையும் சமமானவையாகப் பார்க்கும் 'சர்வமத சமரச'ப் பார்வையுடையவர் இராமகிருஷ்ணர். அத்வைதத்தை, அதாவது கடவுளும்-மனித ஆன்மாவும் வேறுவேறல்ல என்கிற ஓர்மையை எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ-கலாச்சாரத்திற்கோ மட்டும் சொந்தமானதாக்கி விடாதவர்களாக இராமகிருஷ்ணரும், அவரது சீடரான விவேகானந்தரும் இருந்தவர்கள். தனது மதம் எது என்று ஒற்றை வரியில் சொன்னவர் விவேகானந்தர்: "உண்மை ஒன்று மட்டுமே எனது கடவுள்: இந்த ஒட்டுமொத்த உலகமே எனது நாடு"<br />
<br />
சிகாகோவில் நடைபெற்ற உலகளாவிய அனைத்து மதங்களின் மாநாட்டில் அவர் ஆற்றிய உரையையும், அவரது குரு இராமகிருஷ்ணரின் மேல் கொண்டிருந்த பக்தியையும் முன்னிறுத்தி இன்று விசுவஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் அவரை ஓர் 'இந்து முன்னணி வீரராக'ச் சித்தரிக்கின்றன. ஆனால், 1885-ல் அவர் எழுதிய ஒரு கடிதத்தின் வரிகள், அவர் முன் வைத்த கொள்கை எதுவென்று காட்டுகின்றன:<br />
<br />
"இந்த நிமிடத்தில் நான் இந்துயிஸம் குறித்து எந்த ஒரு புத்தகத்தையும் எழுதிக்கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு மதமும் ஒரு வகை வெளிப்பாடு. ஒரே உண்மையை வெளிப்படுத்துகிற ஒரு மொழி. ஒவ்வொருவரிடமும் நாம் அவரவர் சொந்த மொழியில் மட்டுமே பேச வேண்டும். நாம் இந்துயிஸம் பற்றி பின்னால் ஏதாவது ஒரு சமயத்தில் பார்த்துக்கொள்ளலாம். நமது குரு இராமகிருஷ்ணரின் மதம் இந்து மதமென்று ஹிந்துக்கள் வைத்துக்கொல்லட்டும்... மற்றவர்கள் அவரவர் விருப்பப்படி ஏதாவது பெயர் வைத்துக்கொள்ளட்டும். நமது ஆசிரியர் இந்தியாவுக்கு மட்டுமா சொந்தம்? நமது இந்தியாவின் சீர்குலைவிற்கு இத்தகைய குறுகிய அணுகுமுறைகளை ஒழிக்காமலிருக்கும் வரையில் எந்தவித சாதகமான பலனும் கிடைப்பது முடியாத காரியம்." -இதைவிடவும் தெளிவாக வேறொரு கடிதத்தில் "இந்து, கிறிஸ்தவர் என்று வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதெல்லாம் ஒரே உண்மையின் வெவ்வேறு பெயர்கள் மட்டுமே. மனித உயிர்களுக்கிடையே நிலவ வேண்டிய தோழமையுணர்வுக்கு இவை தடைகளே. இவற்றை உடைத்து நொறுக்குவதற்குத்தான் நாம் முதலில் முயற்சி செய்ய வேண்டும்." என்று திருமதி புல் (BULL) என்பவருக்கு எழுதியிருக்கிறார்.<br />
<br />
சர்வ மதங்களின் அவையில், சிகாகோவில் அவர் நிகழ்த்திய பிரிவுபசார உரையின்போது தெள்ளத் தெளிவாக அவர் கூறுவதைக் கேளுங்கள்: "மதங்களுக்கு இடையே ஏற்பட வேண்டிய ஒற்றுமைக்குப் பொதுவான ஓர் அடித்தளம் குறித்து இந்த அவையில் ஏராளமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இன்றைக்கு இந்த உலகில் பின்பற்றப் படுகிற ஏராளமான மதங்களுள் ஏதேனும் ஒன்று மட்டுமே வெற்றி பெற்று தலைமையேற்க வேண்டுமென்றும், மற்றவை அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் என்றும் அப்படி நடந்தால்தான் மதங்களிடையே ஒற்றுமை நிலவுமென்றும் யாராவது இங்கு நம்பியிருக்கும்பட்சத்தில், அவரிடம் நான் சொல்லுவேன்: 'சகோதரா, உன் நம்பிக்கை தவறானது' என்று. கிறிஸ்தவர்களெல்லாரும் இந்துக்களாகிவிட வேண்டுமென நான் விரும்புகிறேனா? கடவுள் அதைத் தடுக்கட்டும்! யாரேனும் ஒரு ஹிந்து அல்லது பெளத்தர் கிறிஸ்தவராகிவிட வேண்டுமென நான் விரும்புகிறேனா? கடவுள் அதைத் தடுக்கட்டும்!"<br />
<br />
அவர் முன் வைத்த இத்தகைய தெளிவான கருத்துக்களையும், வேறுபல முற்போக்கான, மனித நேயமிக்க விமர்சனங்களையும், மெல்ல மெல்ல மக்களின் முன் வைக்காமல் மறைத்துக் கொண்டிருக்கிற இந்துத்துவ அமைப்புகளின் வரிசையில், சமீபகாலமாக இராமகிருஷ்ண மிஷனும் கூட இணைந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அவருடைய வாழ்நாளிலேயேகூட, அவரது கருத்துக்களையும், அவர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணத்தையும் வைதீக இந்துக்களின் அதிகார மையங்கள் ஏற்றுக்கொண்டதில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். பிராமணரல்லாதவரான விவேகானந்தர் எப்படி இந்துமதத்தின் அங்கீகரிக்கப்பட்ட துறவியாக ஏற்கப்பட முடியும் என்று சனாதனிகள் கொந்தளித்திருந்துள்ளனர். கடல் கடந்து அவர் மேற்கொண்ட பயணம் சாஸ்திர விரோதமானதென்றும், அயல்நாட்டிலிருந்தபோது உட்கொண்ட உணவு விஷயங்களிலும் அவர் சாஸ்திர விதிகளைக் கடைப்பிடிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர். இந்த விமர்சனங்களுக்கு அவரது பதில் மிகத் தெளிவானது: "நான் எப்போது வைதீக புராணிக இந்துவாக இருந்திருக்கிறேன்? நமது சாஸ்திர விதிகளைக் கவனமாகப் படித்து ஆராய்ந்து பார்த்தேன். ஆன்மிக விடுதலையும், மதமும் சூத்திரர்களுக்கு அல்ல என்ற உண்மையைக் கண்டறிந்தேன். ஒரு சூத்திரன் உணவு தொடர்பான மற்றும் எல்லா சாஸ்திர விதிகளையும் அனுசரித்து நடப்பதாகவே வைத்துக்கொண்டாலுங்கூட வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டாலும்கூட அவனுக்கு ஒன்றும் பெருமை கிடைத்துவிடப் போவதில்லை. அவையெல்லாம் வீண் முயற்சிகளே. நானொரு சூத்திரன் மிலேச்சன். நான் எதற்காக அந்த சாஸ்திர விதிகள் எல்லாவற்றையும் குறித்து கவலைப்பட வேண்டும்."<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjg4F_qdiGmzyVPmBO8_M_zdKSeZqygpolYod9zwE2Xf4ZS1_5d9IRghCdV4QojM_H-xkLE50eXHUpCfYHuRyO39dLy1pKDBkjlET6SBz1eWMSVi9fUvotRvsqcIQktgeGboTP5xIjgoexG/s1600/vivekanda1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjg4F_qdiGmzyVPmBO8_M_zdKSeZqygpolYod9zwE2Xf4ZS1_5d9IRghCdV4QojM_H-xkLE50eXHUpCfYHuRyO39dLy1pKDBkjlET6SBz1eWMSVi9fUvotRvsqcIQktgeGboTP5xIjgoexG/s1600/vivekanda1.jpg" /></a></div>
<br />
<br />
அவர் மற்ற துறவிகளைப் போல கங்கைக் கரையில், தபோவனங்களில், இமயமலைச் சரிவுகளில் ஆசிரமங்களில் தங்கி 'ஆன்மிக விவாதத்'தில் மூழ்கியிருந்தவரல்ல கடவுளை கங்கைக் கரையில் தேடிக் கொண்டிருக்காதீர்கள்: விளிம்பு நிலை மக்களிடம் சென்று அவர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் கடவுளை அவர்களின் வடிவில் தரிசியுங்கள்' என்றவர் அவர். கிராமங்களுக்குப் போய், படிப்பறிவற்ற ஏழை மக்களுக்கு எழுத்தறிவையும் அடிப்படை அறிவியலையும், புவியியலையும் கற்றுக்கொடுக்க முன் வருமாறும், சிங்கம் போன்று வீறுகொண்டு எழுந்து வருமாறும் ஆயிரமாயிரம் இளம் ஆண்களையும்-பெண்களையும் நோக்கி அறைகூவி அழைத்தவர் விவேகானந்தர்.<br />
<br />
"ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத ஒருதாயின் பசியைத் தீர்க்க ரொட்டித் துண்டைத் தரத் தவறுகிற எந்தக் கடவுளையும் நாம் நம்பத் தயாராயில்லை; அத்தகைய கடவுள்களைத் தூக்கி இந்துமகா சமுத்திரத்தில் போடுங்கள்" என்று முழக்கமிட்டவர் அவர். தனது காலத்திய சனாதன இந்து தர்மம் 'தீண்டாமையின் மதம்'தான் எனக்குறிப்பிட்ட அவர், படித்த இந்துக்களின் மீது வைக்கிற விமர்சனங்கள் இவை! "சாதிப் பிளவுகளின், மூட நம்பிக்கைகளின் கொடிய சக்கரங்களில் சிக்கி சிதைந்து போனவர்கள்; ஒரு துளியளவு தர்மமும் இல்லாத போலித்தனமான கோழைகள்!"<br />
<br />
1880-ம் ஆண்டு தொடங்கி 1893 வரையிலான பதிமூன்றாண்டு காலம், விவேகானந்தர் இந்தியாவின் பல முக்கியமான பகுதிகளில் ஒரு சூறாவளியைப்போன்று அலைந்து திரிந்த காலம், உத்தரப்பிரதேசம், இராஜஸ்தான், குஜராத், மகாராஸ்ட்ரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஹைதராபாத் மற்றும் கேரளா முதலான பகுதிகளில் சுற்றியலைந்தார் அவர். இந்தியாவின் உழைக்கிற மக்களின் வாழ்க்கை அவலங்களை மிக நெருக்கமாகவும், நேரடியாகவும் இந்தப் பயணங்களின் போது அவர் கண்டறிந்திருக்கிறார். கன்னியாகுமரிக்கு 1892-ல் வந்த அவர், அங்கு கடற்கரையிலிருந்து படகில் சென்று சேர வேண்டிய தூரத்திலிருந்த பெரும் கடற் பாறைகளுள் ஒன்றின் மீது அமர்ந்து மூன்று நாட்கள் தொடர்ச்சியாகத் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். மீணடும் அவர் கடற்கரைக்குத் திரும்பியபோது, சிகாகோவில் நடைபெறப் போகிற அனைத்து மதங்களின் பேரவையில் கலந்துகொள்வதற்காகவும், இந்தியாவின் கோடானுகோடி எளிய மக்களுக்கு உதவுமாறு மேற்குலகின் காதுகளுக்கு எட்டும் வகையில் உரத்துப் பேசுவதற்காகவும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதென்று தீர்மானித்திருக்கிறார்; தரித்திரர்களே உங்கள் கடவுள் என்பதே விவேகானந்தர் முன்வைத்த செய்தி. அவரது காலத்தைத் தாண்டி மிக முன்னோக்கிச் சிந்தித்தவர் அவர். இந்தியாவிலிருந்து மிக விரிவான அளவில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட முதல் இந்தியர் அவராகவே இருக்கக்கூடும்.<br />
<br />
பெண்களை அடிமையாக நடத்தி, புறக்கணித்துக் கொண்டிருப்பவர்கள் - அதாவது சமகால இந்தியர்கள், பயங்கரமான பாவிகள் என்றார் அவர். "பலபத்து லட்சம் மக்கள் பசியினாலும், வறுமையினாலும் உழன்று கொண்டிருக்கையில், அவர்களுடைய உழைப்பின் பயனை அறுவடை செய்து படித்துவிட்டு, வளமாக வாழ்ந்தாலும் அவர்களின்பால் கடைக்கண் பார்வையைக்கூடத் திருப்பாமலிருக்கிற ஒவ்வொரு மனிதனையும் நான் துரோகி என்றே கொள்வேன்" என்கிறார் அவர்.<br />
<br />
சிகாகோ உரையின் மூலம் பெரும் புகழ் பெற்றவராக அவர் பல நாடுகளிலும் சுற்றுப் பயணம் செய்து ஏராளமான அறிஞர்கள், பல்வேறு மத நம்பிக்கையாளர்கள் உட்பட வெவ்வேறு விதமான மக்கள் பிரிவினரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். காரணம், அவர் காலத்தில் மிகவும் கலகத்தன்மையுடையவராகவும், மரபுகளை மீறியவராகவும் விவேகானந்தர் இருந்ததே காரணம். 1896, நவம்பர் 1-ம் தேதியன்று அவர் மேரி ஹேலுக்கு எழுதிய கடிதமொன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:<br />
"நான் ஒரு சோஷலிஸ்ட். காரணம் அது மிகச் சரியான அமைப்பு என்று நினைப்பதால் அல்ல. ஒன்றுமில்லாமல் பட்டினி கிடப்பதைவிட அரை ரொட்டித் துண்டு மேல் என்பதே காரணம். மற்ற அமைப்பு முறைகளை நாம் முயன்று பார்த்து அவற்றின் போதாமையையும் உணர்ந்துவிட்டோம். இதையும் முயன்று பார்த்துவிடலாமே!"<br />
<br />
பல சந்தர்ப்பங்களில் கையில் சல்லிக்காசு இல்லாமல் பசியினால் வீடுதோறும் இரந்து திரிய வேண்டிய நிலையும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. களைப்பும், பசியும் மேலிட்ட நேரங்களில், எவராவது ஒரு நல்ல மனிதர் அல்லது மனுஷியின் உதவியுடன் அவர் மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்திருப்பது பல நிகழ்ச்சிகளிலிருந்து தெரிய வருகிறது. சொகுசான அயல்நாட்டு மாளிகை அறைகளில் வசிக்கும் வாய்ப்பும், நல்ல உணவும், புகைத்தல் பழக்கமும் வாய்க்கப்பெற்றவராகவும் இருந்திருக்கிறார் விவேகானந்தர். மிகவும் எதிர்பாராமல், 1902-ம் ஆண்டு ஜுலை 4-ம் தேதி அவரின் மறைவு நிகழ்நதது. தொடர்ந்து அவர் நீண்ட காலம் வாழ்ந்திருக்கும் பட்சத்தில், அளப்பரிய சாதனைகளை அவர் நிகழ்த்தியிருக்கவும் வாய்ப்புண்டு.<br />
<br />
150-வது ஆண்டு நிறைவையொட்டி, விவேகானந்தரின் சிந்தனைகளில் இன்றைக்கும் பொருந்துகிறவை நிறைந்து இருக்கின்றன. அவற்றைச் சரியான விதத்தில் பயின்று, புரிந்துகொண்டு, இன்றைய தேவைகளுக்கேற்ப பிரயோகிப்பதில்தான் நாம் கூர்மையான கவனம் செலுத்த வேண்டும் என்பதே முக்கியம்!<br />
<br />
(நன்றி: அறிவுக்கடலே அருட் புனலே ரா.கணபதி ஞானதீபம்-தொகுதி. ஃப்ரண்ட் லைன் பிப்-8-2013)<br />
<br />
<b>நன்றி : இளைஞர் முழக்கம்</b></div>
ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-8690167356806687862012-09-12T16:05:00.001+05:302012-09-12T16:05:57.277+05:30மிச்சம் மீதி -ஒரு அனுபவக் கணக்கு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /><br />கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால அனுபவக்
கணக்கு. சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த ஒரு சாமானியரின் வாழ்க்கைக் கணக்கு, தாம்
பிறந்தது இந்தியாவிலா பர்மாவிலா என்ற மர்மத்தைத் தேடுகிறது, இரண்டாம் உலகப்
போரின்போது பர்மாவிலிருந்து சிரமமான மலைப்பாதை வழியாக ஜப்பான்காரனின் குண்டு
மழைகளின் நடுவே கால் நடையாக இந்தியா திரும்பிய அனுபவத்தைத் சொல்கிறது. வாழ்க்கையை
அதன் போக்கிலேயே நடத்திச் சென்ற ஒரு பழ கமிஷன் ஏஜென்ட் வியாபாரியின் கதை.
தாத்தாவிடம் கதை கேட்ட பேரனின் படைப்பு.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZZnnj-pb6ovIBV30nKeyqmUEf5OoCbfGhvtiD-h1Z9kJGWHkmojuMrMNpzXLw0icMBhRWDlehxQAW6DM3cJIV2vIguVoIUbnimj1VF84SAHXgv64tOnUJWDbRsu9UjX3klPIvfAltHJUo/s1600/micham+methi.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZZnnj-pb6ovIBV30nKeyqmUEf5OoCbfGhvtiD-h1Z9kJGWHkmojuMrMNpzXLw0icMBhRWDlehxQAW6DM3cJIV2vIguVoIUbnimj1VF84SAHXgv64tOnUJWDbRsu9UjX3klPIvfAltHJUo/s320/micham+methi.JPG" width="218" /></a></div>
<br /></div>
ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-24424576999818807522011-10-04T17:14:00.000+05:302011-10-04T17:14:30.390+05:30உனக்குப் படிக்கத் தெரியாது<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmazuGmheJjoEpfEAqX3kJX4LrUPZ0pqNQGEiKUHP2aGjOm8-N0PVrV8mll97QdZa4wvz7Xe5ZTN7509OzvOHa-QUe9CXWQdfwcX3Py1FPO4ORIDNuQmenNvavPMZCJUdQDWr8MoCVjq-K/s1600/mary+jane.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmazuGmheJjoEpfEAqX3kJX4LrUPZ0pqNQGEiKUHP2aGjOm8-N0PVrV8mll97QdZa4wvz7Xe5ZTN7509OzvOHa-QUe9CXWQdfwcX3Py1FPO4ORIDNuQmenNvavPMZCJUdQDWr8MoCVjq-K/s320/mary+jane.jpg" width="206" /></a></div><br />
<br />
மேரி ஜேன் தூக்கத்திலேயே அலுப்புடன் புரண்டு புரண்டு படுத்தாள். கடினமான கரடுமுரடான படுக்கையின் மீது அவள் தூங்கியதுதான் அலுப்பிற்குக் காரணம். இந்தப் படுக்கை ஒன்றே ஒன்றுதான் அவளிடம் இருந்தது. கடினமான படுக்கைதான் ஒரு கறுப்பினக் குழந்தைக்குப் பொருத்தம். மென்மையான படுக்கைகள் வெள்ளை மனிதர்களுக்கு! என்றிருந்த காலமது.<br />
<br />
என்று துவங்குகிறது இந்த புத்தகம். மேரி ஜேன் சுதந்திரமாகப் பிறந்தவள். பருத்திக்காட்டிற்கு செல்லும் வழியில் முன்னால் ஓடும் மேரியைப் பார்த்து அவளது தந்தை சந்தோஷமடைகிறார். இல்லாவிட்டால் அவளும் தொலைதூரத்தில் உள்ள ஒரு பண்ணையில் உள்ள வெள்ளை குழந்தைக்கு வேலை செய்ய அனுப்பப்பட்டிருப்பாள். அவளது தாயும் தந்தையும் அடிமையாக இருந்தவர்கள். உள்நாட்டுக் கலவரத்தின்போது ஆப்ரஹாம் லிங்கன் வெளியிட்ட "அமெரிக்காவின் தென்பகுதி வாழ் கருப்பின அடிமைகள் யாவரும் சுதந்திர மக்கள்" என்ற பிரகடனத்தால் சுதந்திரம் பெற்றவர்கள். அவர்கள் சுதந்திரம் பெற்றபின் பிறந்தவள் மேரி.<br />
<br />
பருத்திக்காட்டில் குடும்பமே (சிறுவர் முதல் பெரியவர் வரை) தினமும் பாடுபட வேண்டும். அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை ஓட்டியாக வேண்டும். அவளது அம்மா வெள்ளையர்களின் துணியை துவைத்து இஸ்திரி போட்டுக்கொடுத்து சில்லரை செலவுகளை சமாளிப்பாள். கருப்பர்கள் வெள்ளையர்களின் வீட்டிற்குச் செல்வதானால் பின் வழியாகத்தான் செல்ல வேண்டும். அங்கே செல்வதென்றால் மேரி சந்தோஷமாக செல்வாள். பெரிய பெரிய வீடுகள். காற்றோட்டமான ஜன்னல்கள். ஜன்னல்களுக்குக்கூட வெண்மையாக திரைச்சீலைகள். <br />
<br />
மேரி குதித்து ஓடினாள். அம்மா வெள்ளையர் வீட்டின் பின்வாசல் வழியே சென்றாள். பக்கத்தில் வெள்ளையர் குழந்தைகள் விளையாடுவதற்கு சிறிய வீடு இருந்தது. அதற்குள் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு சிறுமி மேரியை அழைத்தாள். மேரி மெல்ல மெல்ல உள்ளே சென்று விளையாடினாள். அப்போது அங்கே இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து பிரித்தாள். உடனே அப்புத்தகம் அவள் கைகளில் இருந்து பிடுங்கப்படுகிறது. "உனக்குப் படிக்கத் தெரியாது" என்று ஒரு சிறுமி சொல்கிறாள்.<br />
<br />
மேரிக்கு அந்தச் செயல் சொல்லொன்னா துயரத்தைத் தருகிறது. அந்த வார்த்தை அவளை படாதபாடு படுத்துகிறது. அப்பாவிடம் கேட்கிறாள் "அப்பா நான் படிக்க வேண்டும்." "மேரி நமக்கெல்லாம் பள்ளிக்கூடம் கிடையாதம்மா" என்கிறார்.<br />
<br />
நாம் ஏன் இப்படி இருக்கிறோம். வெள்ளையர்கள் ஏன் அப்படி சொகுசாக வாழ்கிறார்கள். அவளுள் பலபலக் கேள்விகள். அந்தக் கேள்விகளைத் துறத்திச் சென்று பதிலைக் கண்டடையும் பெண்ணாக மாறுகிறாள்.<br />
<br />
இதைப்படிக்கும்போது நமது நாட்டில் உள்ள தலித் மக்கள் கண் முன்னே வருகிறார்கள். அவர்கள் பட்ட அத்தனை துயரத்தையும் இன்றும் இவர்கள் பட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள். அவர்களாவது வேறு நாட்டில் இருந்து அடிமைகளாக அழைத்துவரப்பட்டவர்கள். ஆனால் தலித் மக்கள் சொந்த நாட்டிலேயே அடிமையாக்கப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.<br />
<br />
மேரி மேக்லியோட் பெத்யூனின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் புத்தகம். மேரியின் சுயசரிதையைப் படித்து தன்னுள் உள்வாங்கி தனது தேர்ந்த நடையில் தந்துள்ளார் நூல் ஆசிரியர் கமலாலயன். ஒரு விறுவிறுப்பான நாவலைப் படிப்பதைப் போல் இருக்கிறது. எழுத்து ஒரு பசுமையான மலைப்பாதையில் பயணம் செய்வதைப்போல, தொண்டைக்குள் வழுக்கிச்செல்லும் இனிப்புப்போல படிக்கப்படிக்க இனிமையாக இருக்கிறது. ஒரு சுயசரிதை விறுவிறுப்பான புத்தகமாகவும் இருக்கும் என்று இதைப்படிக்கும்போது உணர முடிகிறது.<br />
<br />
உனக்குப் படிக்கத் தெரியாது<br />
-கமலாலயன்<br />
<br />
வாசல்<br />
40-D\3, முதல் தெரு,<br />
வசந்தா நகர், மதுரை-625 003.<br />
மொபைல் 91 98421 02133</div>ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-81897356804204189592011-06-13T18:51:00.000+05:302011-06-13T18:51:36.699+05:30நீயா நானா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span class="Apple-style-span">"டேய் ஒம்பொண்டாட்டி பண்றது கொஞ்சங்கூட சரியில்ல சொல்லீட்டேன்."<br />
"என்னம்மா விஷயம்"<br />
"சாயங்காலம் சீக்கிரம் வா, கிருஷ்ணஜெயந்திக்கு எல்லா தயார் பண்ணி வச்சிர்றேன். நீ வந்தவுடனே சாமி கும்புடலாம்னு சொல்றேன் அதுக்கு அவ சொல்றா ஆபீசுல முக்கியமான வேல இருக்கு. அது சீக்கிரம் முடிஞ்சிருச்சுன்னா சீக்கிரம் வர்றேன்னு சொல்றாடா"<br />
ரூமுக்குள் வந்த கணவன் "என்னம்மா சாயங்காலம் சீக்கிரம் வர்றதுதான" என்றான்<br />
"ஏங்க உங்க அம்மா சொல்றாங்க, பிரக்னென்டா இருக்கறவங்க கிருஷ்ணஜெயந்தி கும்புட்டா ஆம்பளப்புள்ள பொறக்குமா, இந்த வார்த்தைக்காகத்தான் நான் அப்டிச்சொன்னேன். ஏன் பொம்பளப்புள்ள பொறந்தா தூக்கி எறிஞ்சுடுவீங்களா?"<br />
<br />
"ஏண்டா குழந்தைக்கு கழுதப்பால் குடுக்கணும்னு சொன்னா ஒம்பொண்டாட்டி கேக்க மாட்டேங்குறாடா."<br />
"ஏங்க டாக்டர்கிட்ட கேட்டேன். வேற எந்த உயிரினமாவது வேற ஒரு உயிரினத்தோட பாலக்குடுக்குதான்னு என்னையே திருப்பிக்கேக்குறாரு. தாய்பால் மட்டும்தான் குடுக்கணுமாம். அதுனாலதான் வேண்டாம்னு சொன்னேன்."<br />
"ஏண்டா கொழந்தைக்கு பால் குடுக்குறாளே தயிர் ஊத்தி திங்காத கொழந்தைக்கு சளி பிடிக்கும்னு சொன்னா கேக்க மாட்டேங்குறாடா"<br />
"டாக்டர் எல்லாமே சாப்புடலாம்னு சொல்லியிருக்காரு. நான் சாப்புறது அப்டியே கொழந்தைக்கு போகாது. குழந்தைக்கு ஜீரணமாகுறமாதிரி பால்தான் போகும்".<br />
"ஏண்டா வாழப்பழம் மாம்பழமெல்லாம் சாப்புட்டா கொழந்தைக்கு சேராது"<br />
"ஏங்க எனக்கு பழம் சாப்புட்டாத்தான் வயிறு பிரச்சன இல்லாம இருக்கும். என்னால பழம் சாப்புடாம இருக்க முடியாது."<br />
"ஏண்டா கொழந்தைக்கு போனிசன் ஊத்தணும். வசம்பு ஊத்தணும். அப்பத்தான் பிள்ள நல்லா வளரும்"<br />
"ஏங்க எந்த டாக்டராவது கிரைப் வாட்டர பிரிஸ்கிரைப் பண்றாங்களா? அப்புறம் இந்த வசம்பப்பத்தி எனக்கு தெரியல. ஆனா அதை கருக்கி கருப்பா குடுக்குறாங்க. கருப்பா இருக்கறது கார்பன்தான, எனக்கு அதக் குடுக்க பயமா இருக்கு அதுனால குடுக்கல"<br />
"ஏண்டா ஐஞ்சாம் மாதம் இட்லி, சாதம், சப்பாத்தியெல்லாம் குடுக்கலாம்னு எங்க அக்கா சொல்றாங்க"<br />
"இங்க பாருங்க ஆறு மாசம் வரைக்கும் வெறும் தாய்ப்பால்தான் குடுக்கணும்னு டாக்டர் சொல்றாரு. அதுக்கு அப்பறம்தான் சாலிட் புட் குடுக்கணுமாம். ஏங்க கொழந்தைக்கு சப்பாத்தியெலலாம் குடுத்தா எப்டி ஜீரணமாகும்"<br />
"ஏண்டா அதுக்குத்தான் போனிசன், வசம்பு எல்லாம் குடுக்கணும்"<br />
"இங்க பாருங்க குழந்த அதுவே ஜீரணிக்கணும். மருந்து குடுத்து ஜீரணிக்க வைக்கக்கூடாது. அது நல்லதில்ல"<br />
கணவன் மெல்ல "ஏ</span>ண்டா<span class="Apple-style-span"> செல்லம் நீதான் அம்மாவ கொஞ்சம் அஜ்ஜஸ் பண்ணி போயிறேன்"<br />
"நான் அஜ்ஜஸ் பண்ணத் தொடங்குனா உங்க அம்மா மாதிரி இன்னொரு அம்மாவா இருப்பேன். என்னோட படிப்பு, எனக்கான அறிவு எல்லாத்தையும் தூக்கி குப்பையிலதான் போடணும்"<br />
</span><br />
<span class="Apple-style-span">கணவன் மனதிற்குள் 'இப்டி புட்பால் மாதிரி மிதிபடுறேனே. அப்பவே ஆதிமூல கிருஷ்ணன்னு ஒரு நல்ல மனுஷன் திருமணம் ஆகாதவங்களுக்கு ஒரு எச்சரிக்கைன்னு எச்சரிச்சாரு. கேட்டனா...'</span></div>ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-43477362670602408422011-04-27T10:41:00.000+05:302011-04-27T10:41:48.524+05:30ரத்னா ஸ்டோர்சும் நானும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
நேற்று தனியாக டிநகர் சென்றிருந்தேன். எப்போதும் வீட்டிலிருந்து யாராவது உடன் வருவார்கள். நேற்று அனைவருக்கும் ஏதோ காரணத்திற்காக வரமுடியாத சூழ்நிலை. சரி நம்மளே போயிட்டு வந்திரலாம்னு போயிட்டேன்.<br />
<br />
வீட்டிற்குத் தேவையான பாத்திரங்கள் கொஞ்சம் வாங்க வேண்டி இருந்தது. ரங்கநாதன் தெருவில் உள்ள ரத்னா ஸ்டோருக்குச் சென்றேன். நாங்க எப்பவும் அங்கேதான் பாத்திரங்கள் வாங்குவோம். கையில் ஒரு கட்டை பேக். வாங்க வேண்டியசாமான்களுக்கான லிஸ்ட். மணிபர்ஸ் எல்லாம் இருந்தன. லிஸ்ட்டைப் பார்த்து ஒவ்வொரு சாமானாக பார்த்து எடுத்துக்கொண்டிருந்தேன். தேவையான அளவு, பார்க்க நன்றாக இருக்கிறதா என்று தேடித்தேடி வாங்கிக்கொண்டிருந்தேன். எனக்கு கடையில் உள்ள ஒரு பெரியவர் உதவி செய்தார். அவரும் நானுமாக தேவையான பொருட்களையெல்லாம் வாங்கி முடித்தாயிற்று. இன்னொரு பொருள் நான்காவது மாடியில்தான் இருக்கிறது என்றார். நானும் நான்காவது மாடிக்குச் சென்றேன். அங்கே பொருளை வாங்கிவிட்டு பர்சைப் பார்த்தேன். கையில் பர்ஸ் இல்லை.<br />
<br />
எங்கேயோ விட்டுவிட்டேன் என்பது புரிந்தது. பாத்திரங்கள் வாங்கிய இடத்தில்தான் விட்டிருக்க வேண்டும். நான்காவது மாடிக்கு வரும்போதே கையில் பர்ஸ் இல்லை என்பதை உணர்ந்தேன். உடனே கீழ் தளத்திற்குச் சென்றேன். அந்தப் பெரியவரைப் பார்த்து என்னுடைய பர்ஸ் தொலைந்துவிட்டது என்றேன். அவரும் நானும் நாங்கள் பாத்திரங்கள் எடுத்த இடத்தில் எல்லாம் தேடினோம். கிடைக்கவில்லை. பெரியவர் தேடும்போதே சொல்லிக்கொண்டே வந்தார் "ஏம்மா பர்செல்லாம் பத்திரமா வச்சிக்க வேண்டாமா? இங்க எவ்வளவுபேர் வந்துபோற எடம். எங்கயாவது விழுந்திருந்தா யார் எடுத்தாங்கன்னு தெரியும். இவ்வளவு பேர் வந்துபோற எடத்துல பர்ஸ் விழுந்திருந்தா அங்கயே இருக்குமா? பாத்து வச்சுக்க வேண்டாமா" என்று திட்டிக்கொண்டே வந்தார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKUr80GXbayaIPeL5ohNfylDRMqgl8dAmNESUla0ld9gFQall5rfEVMl0g4Q2Vyj_1nlbfKc_87AEto08HGaW4s8W1lOPBj3VUf5kdKyHRjAa3dzt6BKTIVijv-datn3QIgQIDUpfr6rGB/s1600/ranganathan-street-tnagar-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="243" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKUr80GXbayaIPeL5ohNfylDRMqgl8dAmNESUla0ld9gFQall5rfEVMl0g4Q2Vyj_1nlbfKc_87AEto08HGaW4s8W1lOPBj3VUf5kdKyHRjAa3dzt6BKTIVijv-datn3QIgQIDUpfr6rGB/s320/ranganathan-street-tnagar-1.jpg" width="320" /></a></div><br />
<br />
அவர் சொல்வது உண்மைதானே. நான் கவனமாக இருந்திருக்க வேண்டும். தவறு என்னுடையதே. பர்சைத் தொலைத்த குற்ற உணர்ச்சி ஒரு பக்கம், வாங்கிய பாத்திரங்களுக்கு கொடுக்க காசு இல்லை. இதை வாங்க இன்னொரு முறை வரவேண்டும் என்றெல்லாம் மனதில் ஓடியது. இதையெல்லாம்விட முக்கிய பிரச்சனை பஸ்சுக்கு கையில் காசு இல்லை. சரி ஒரு ஆட்டோ பிடித்துப் போய் வீட்டில் இருந்து காசு எடுத்துக்கொடுத்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன். பர்சு தொலைத்தது ஒரு பக்கமுன்னா ஆட்டோ செலவு ஒரு பக்கமான்னு ஓடியது. சரி என்ன பண்றது தப்பு பண்ணியாச்சு தண்டனை அனுபவிச்சுத்தானே ஆகணும்.<br />
<br />
திரும்பவும் அடுத்த ரவுண்டு வரத் துவங்கினோம். பில்லை வாங்கிக்கொண்டு பாத்திரங்கள் கொடுக்கும் பகுதியில் இருந்த ஒருவரிடமும் பர்சு தொலைந்த விஷயத்தை சொன்னோம். அவர் அங்கு வேலை செய்யும் மற்றவர்களிடமும் கேட்கச் சொன்னார். இன்னும் ஒருவரும் எங்களுடன் சேர்ந்து தேடினார். அங்குள்ளவர்களிடமும் கேட்டுக்கொண்டே தேடினோம். ம்ஹும் எங்கும் இல்லை. பெரியவர் சொன்னார் நாலாவது மாடியில ஒருமுறை பாத்திருங்க என்றார். சரி அங்க ஒருமுறை பாத்துட்டு வீடுபோய்ச் சேர வேண்டியதுதான்னு கெளம்பி லிஃப்டு இருக்கும் இடத்தின் அருகே சென்றேன். "இங்க வாங்க" என்று பெரியவர் அழைத்தார். "கேஷ் கவுண்டர்ல ஒரு பர்சு இருக்காம். உங்களுதா பாருங்க" என்றார். கேஷ் கவுண்டர் சென்றேன். அங்கே இருந்தவர் உங்க பர்சு அடையாளம் சொல்லுங்க என்றார். என் பர்சு அடையாளத்தைச் சொன்னதும் என் பர்சை எடுத்து என் கையில் கொடுத்தார். அந்த நிமிடம் எப்படி இருந்திருக்கும் சொல்லுங்கள். என் கண்களில் கண்ணீர் அது பாட்டுக்கு வந்துகொண்டிருக்கிறது. வாய் அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொண்டிருந்தது. எங்க கடையில வேலை பாக்குறவங்க கையில கெடச்சா கஷ்டமருக்கு கெடச்சுரும். வேற யாராவது எடுத்துருந்தா எங்களால ஒன்னும் செய்ய முடியாது என்றார் பெரியவர். அங்காடித் தெரு படத்தில் வரும் ஒரு வசனம் ஞாபத்திற்கு வந்தது யானை இருக்கும் காட்டில்தான் எறும்பும் இருக்கிறது. ஊழல் பேர்வழிகள் இருக்கும் நாட்டில்தான் இவர்களைப்போன்றவர்களும் இருக்கிறார்கள்.<br />
<br />
கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை எடுத்து தன் பையில் போட்டுக்கொள்வதையே பார்த்துப்பார்த்து நொந்து போயிந்து கண்களுக்கு இந்த மனிதர்களைப் பார்த்ததும் கண்கணில் தாரைதாரையாக நீர் ஓடியது. அடுத்த நாள் செலவுகளை சமாளிக்க அவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் போராட்டம் நடந்துகொண்டு இருக்கும். ஆனாலும் அடுத்தவர்கள் காசுக்கு ஆசைப்படாமல் இருக்கும் இந்த மனிதர்களால்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.<br />
<br />
இது நடந்தவுடன் இன்னொரு நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வந்தது. நாங்கள் சென்னை வந்த புதிது. எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் குடும்பத்தினரும் எங்கள் குடும்பத்தினரும் கோல்டன் பீச் சென்றோம். அங்கே ஒவ்வொரு இடமாக பார்த்துக்கொண்டு வந்து கொண்டிருந்தோம். ஒரு இடத்தில் ஊஞ்சள் இருந்தது. பிள்ளைகள் ஆடத் தொடங்கிவிட்டார்கள். நாங்கள் அருகே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தோம். பிள்ளைகள் விளையாடி முடித்ததும் கிளம்பிவிட்டோம். தமிழ்ச்செல்வன் அமர்ந்திருந்த இடத்திலேயே பர்சை வைத்துவிட்டு வந்துவிட்டார். நாங்கள் ஒரு பத்து நிமிடநேரம் நடந்திருப்போம். அவருக்கு பர்ஸ் மிஸ்சானது தெரிந்துவிட்டது. வந்தவழியே திரும்பி பார்த்துக்கொண்டே சென்றோம். எங்கே அவர் பர்சை வைத்தாரோ அதே இடத்தில் அப்படியே இருந்து. எவ்வளவுபேர் வந்துபோகின்ற இடம்.<br />
<br />
நேற்று இன்னொரு சந்தோஷமான நிகழ்ச்சி. ரொம்ப வருஷத்திற்குப் பிறகு வேலூர் கலைச்செல்வியைப் பார்த்தேன். அவங்க பர்சேஸ் முடித்து திரும்பிக்கொண்டிருந்தார்கள். நான் அப்போதுதான் உள்ளே நுழைந்தேன். எதிர் எதிரே பார்த்துக்கொண்டதும் சந்தோஷம் பொங்கியது. ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டோம். 7ம் தேதி திவ்யா கல்யாணத்துல மீதிய பேசலாம்னு சொன்னார். கல்யாணத்துக்கு ஆனந்த், பப்லு எல்லாம் வர்ராங்களாம் என்றார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு அறிவொளி இயக்கம் டீம் ஒன்னு கூடப்போகுதுன்னு நினைக்கிறேன்.</div>ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-51403679492601478222011-03-08T14:51:00.000+05:302011-03-08T14:51:22.794+05:30மகப்பேறு வரமா? சாபமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">மகளிர் தினத்திற்காக<br />
<br />
ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் ஒரு குழந்தையாவது பெற்றெடுக்க வேண்டும் என்று விரும்புவாள். பிள்ளை இல்லா பெண்கள் வாழ்நாளெல்லாம் தனக்கு ஒரு பிள்ளை இல்லையே என்ற ஏக்கத்திலேயே வாழ்வார்கள்.<br />
<br />
அப்படி ஆசையுடன் குழந்தை உருவானபின் பெண்களுக்கு ஏற்படும் உடல்சார்ந்த சிரமங்கள் ஏராளம். ஆனால் பெண் அது அத்தனையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டாள். கர்பத்தினால் உண்டாகும் சந்தோஷம் மட்டுமே அவளிடம் எப்போதும் நிலைத்திருக்கும்.<br />
<br />
முதல் இரண்டு மாதங்களுக்கு எந்த மாற்றமும் தெரியாது. மூன்றாவது மாதத்தில் இருந்து மசக்கை என்ற வாந்தி மயக்கம் தொடங்கும். சிலருக்கு வாந்தி மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். சிலருக்கு குழந்தை நின்றதிலிருந்து பிறக்கும்வரை வாந்தி இருக்கும். வாந்தி கம்மியாக இருப்பவர்களுக்கும் ஐந்து மாதம் வரை சில வாசனைகளை முகர நேரிட்டால் குமட்டும். ஐந்து ஆறு மாத்திற்கு மேல் முதுகு வலி, இடுப்பு வலி, தொடை வலி எல்லாம் வரும். ஏனென்றால் சுமையை சதா சர்வ நேரமும் சுமந்துகொண்டே இருப்பதால் வரும் வலிகள். குழந்தை பிறக்கும் நேரம் வரும் வலி அம்மம்மா அதை சொல்லி முடியாது. பொருக்க முடியாத வலியாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு பெண்ணும் அந்த வலியை அனுபவித்தே பிள்ளையை பெற்றெடுக்கிறாள். முதல் பிரசவத்திற்கு அதிக நேரம் வலி இருக்கும். சிலருக்கு ஒரு நாள் முழுக்கக்கூட வலி இருக்கும். குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது வலி இருக்கும். இரண்டாவது மூன்றாவது டெலிவரி என்றால் வலியின் நேரம் இரண்டிலிருந்து நான்கு மணி நேரம் வரையே இருக்கும். இது சாதாரண பிரசவத்திற்கு அதாவது சுகப்பிரசவம் என்பார்களே அவர்களுக்கு.<br />
<br />
சிலருக்கு குழந்தை உருவான பின் பிரஷர், சுகர் போன்றவை வரும். சிலருக்கு அபார்ஷன் ஆகிக்கொண்டே இருக்கும். அம்மா அப்பா நெகடிவ் பாசிட்டிவ் ரத்தங்களாக இருந்தால் குழந்தை உருவானாலும் அம்மாவின் ரத்தமாக இருந்தால் ஒன்றும் ஆகாது. அப்பாவின் ரத்தமாக இருந்தால் அபார்ஷன் ஆகிக்கொண்டே இருக்கும். அதற்கு ஊசி போட்டு டிரீட்மென்ட் கொடுத்து சரியாக பிறக்க வைக்கிறார்கள். எனக்குத் தெரிந்த பெண் ஒருவருக்கு குழந்தை உருவானதிலிருந்து ரத்தப்போக்கு இருந்துகொண்டே இருந்தது. என்னவென்று பார்த்தால், குழந்தைக்கு அம்மாவிடமிருந்து உணவு, காற்று, ரத்தம் அதைத்தையும் எடுத்துச் செல்ல ப்ளாசண்டா எனப்படும் தொப்புள்கொடி இருக்கும். இந்தக் குழந்தை அந்த ப்ளாசண்டாவில் மிதித்து மிதித்து குழந்தைக்குப் போக வேண்டிய ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்திருக்கிறது. குழந்தை வளர்ச்சி அடையவில்லை. அந்தக்குழந்தையை அபார்ஷன் செய்துவிட்டார்கள். இன்னும் ஸ்கேனில் குழந்தை வளர்ச்சி சரியில்லை என்று தெரிந்தால் அபார்ஷன் செய்துவிடுவார்கள். அபார்ஷன்களும் குழந்தை பிறப்பிற்கு சமமானவை. பெண்களுக்கு இப்படி எத்தனையெத்தனையோ சிரமங்கள்.<br />
<br />
சிலருக்கு ஏழாம் மாதம் எட்டாம் மாத்திலேயே குழந்தை பிறந்துவிடும். அதன் பிறகு அந்த குழந்தையை வளர்க்க அவர்கள் அதிக சிரத்தை எடுத்தாக வேண்டும். <br />
<br />
குழந்தை பிறக்கும்போது முதலில் கை, கால் வந்தால் சிரமம், குழந்தை வயிற்றுக்குள்ளேயே மலம் கழித்துவிட்டாலும் சிரமம். இன்னும் கொடி சுற்றிக்கொள்ளுதல் போன்ற நிறைய காரணங்களுக்காக ஆபரேஷன் செய்கிறார்கள். சில மருத்துவமனைகளில் நார்மல் டெலிவரியையே ஆபரேஷன் கேஸாக்கிவிடுவதும் உண்டு. நார்மல் டெலிவரிக்கு ஒருநாள் வேதனை என்றால், ஆபரேஷன் செய்துகொள்பவர்களுக்கு பலநாள் வேதனை. என் உறவுப் பெண்ணுக்கு ஆபரேஷனின்போது கொடுக்கப்படும் குளோரோபாமின் காரணமாக ஐந்துநாள் தலைவலித்தது. அது இல்லாமல் ஆபரேஷன் செய்த வலி. நடமாட முடியாமல் குழந்தையை தூக்க முடியாமல் ரொம்ப அவஸ்தை.<br />
<br />
இவை எனக்குத் தெரிந்தவரை உள்ள வேதனைகளே. இன்னும் எனக்குத் தெரியாதவை எவ்வளவு உள்ளதோ. குழந்தை பிறப்பு என்பது தாய்க்கு மறு பிறப்பு என்பார்கள். அதனை மகப்பேறு மருத்துவமனைகளுக்குச் சென்று பார்த்தால் புரிந்துகொள்ளலாம். இத்தனை சிரமங்கள் இருந்தாலும் ஒவ்வொரு பெண்ணும் சந்தோஷமாகவே குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்.<br />
<br />
குழந்தை பிறந்த பின்னும் குழந்தையை வளர்த்து ஆளாக்குவது பெண்களின் தலையிலேயே. சொற்ப ஆண்கள் குழந்தை வளர்ப்பிற்கு சின்னச்சின்ன உதவிகள் செய்வார்கள். சொற்ப ஆண்கள் பிள்ளைகள்மேல் பாசமாக இருப்பது மட்டுமே தங்கள் கடமை என்று நினைப்பார்கள். அதிகபட்சமான ஆண்கள் குழந்தைகளை ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள். இன்னும் சிலர் பிள்ளைகளையும் மனைவியையும் விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். சிலர் தான் சம்பாதிப்பதையும் குடித்துவிட்டு மனைவி சம்பாதிப்பதையும் அடித்துபிடுங்கிக்குடிப்பார்கள். எப்படி சூழ்நிலையாக இருந்தாலும் தாய்தான் அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டும்.<br />
<br />
இதில் பெண் குழந்தை பிறந்துவிட்டால் ஏதோ அந்தத் தாயின் மிகப்பெரும் தவறுபோல் தூற்றப்படுவாள். ஆணாகப் பிறக்க வேண்டுமா, பெண்ணாகப் பிறக்க வேண்டுமா என்று தீர்மானிப்பதே ஆண்களின் அணுக்கள்தான்.<br />
<br />
மகப்பேறு மருத்துவமனையில் இருந்தபோது ஒரு பெண் மூன்றாவது குழந்தைக்கு ஒருநாளெல்லாம் வலியால் துடித்துக்கொண்டிருந்தாள். "மூணாவது குழந்தையின்னா ஈசியா பெறந்துருமே. இவங்க ஏன் இவ்வளவு சிரமப்படுறாங்க" என்று அங்கே இருந்த நர்சிடம் கேட்டேன். அதற்கு அவர் "அவங்களுக்கு ஏற்கெனவே ரெண்டு பொண்ணு. அதுக்கடுத்து ரெண்டு அபார்ஷன். அதுனால அவங்களுக்கு ஒடம்பு ரொம்ப வீக்கா இருக்கு. அதுனாலதான் அவஸ்தப்படுறாங்க. அவங்க இந்த ஆஸ்பத்திரியிலதான் வேல பாக்குறாங்க" என்று சொன்னார். அபார்ஷன் ஆக்கப்பட்ட இரண்டு கருவும் பெண்ணாக இருந்திருக்கும் என்று புரிந்தது. அந்தப்பெண்ணுக்கு சிசேரியனில் ஆண் குழந்தை பிறந்தது.<br />
<br />
அதே நர்ஸ் இதை சொல்லிவிட்டு இன்னொரு தகவலையும் சொன்னார், "இதுவாவது பரவாயில்ல. ஒரு சேட்டு வீட்டு லேடிக்கு ஏழு பொண்ணு. எட்டாவது டெலிவரிக்கு வந்திருந்தாங்க. அவங்க ஒடம்புல ரத்தமே இல்ல. ரத்தம் ஏத்தி டெலிவரி பார்த்தோம். நல்ல வேளை அது ஆண் கொழந்த". இந்தப் பேச்சு நடந்தது 30, 40 வருஷத்துக்கு முன்னால இல்ல. 2011 ஜனவரியில பேசப்பட்டது.<br />
<br />
வறுமை நிலையில் இருந்தாலும் தான் சாப்பிடாவிட்டாலும் தன் பிள்ளையை பசியாற்றுவாள் தாய். பிள்ளைகளுக்கு ஏதாவது ஒன்றென்றால் பதறிப்போவாள். பார்த்துப் பார்த்து கண்ணுக்குள் வைத்து வளர்ப்பாள். பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்த தாய்ப்பாசம். கேட்டால் இது அவர்களுக்குக் கிடைத்த வரம் என்பார்கள். இது வரமா? சாபமா? இதனாலேயே பெண் அடிமையாகிறாள். எல்லா துன்பங்களையும் பொருத்துக்கொள்கிறாள்.<br />
<br />
இது உனக்கு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். கிடைக்காத ஒன்று கிடைத்திருக்கிறது. அதனால் நீ அதை வைத்துக்கொண்டு அடிமையாக இரு. எனக்கு அந்த வரம் கிடைக்க வேண்டும் என்று நினைத்துவிடாதே. அந்த வரம் எனக்குக் கிடைத்தால் என்னுடைய சுதந்திரம் சந்தோஷம் எல்லாம் போய்விடும். நான் உலகை ஆளப்பிறந்தவன்.<br />
<br />
நீ கேவலமானவள். நான் உயர்ந்தவன் - அந்தக் கேவலங்களால் உருவாக்கப்பட்டவன்தான் நீ.<br />
<br />
நீ வலிமையற்றவள். நான் வலிமையானவன் - ஒரு ரோடு ரோலர மேல ஏற விட்டு எந்த சேதாரமும் இல்லாமல் சூப்பர்மேன் மாதிரி எழுவீர்களா? ஒரு சின்ன இரும்புக் கம்பியால் தலையில் அடித்தால் தாங்குவீர்களா?<br />
<br />
உனக்கு மாதவிடாய் வருகிறது அதனால் நீ கேவலமானவள் - மகனே அது வரலன்னா நீயே இல்ல. ஒவ்வொரு மாதமும் ஒரு கருமுட்டை உருவாகும். அது கருவாகாவிட்டால் சிதைந்து ரத்ததுடன் வெளியேறும். அடுத்த மாதம் புது கரு உருவாகும். இது மனித இனப்பெருக்கத்திற்கான சுழற்சி. அதையே கேவலமானதாக மாற்றி வைத்திருக்கிறீர்களே.<br />
<br />
நீ மாதவிடாய் நேரத்தில் கோவிலுக்கு வரக்கூடாது - அது வரவில்லை என்றால் அந்தக்கோவிலே இல்லையே.<br />
<br />
நீ அப்போதுதான் தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்திருந்தாலும் நான் பாலியல் பலாத்காரம் செய்வேன் - நீ மனுசனாடா? ஒரு மிருகம்கூட இந்தச் செயலைச் செய்யாது.<br />
<br />
நீ எனக்கு பணமும், பொருளும் கொடுத்தால்தான் நான் உனக்கு கணவனாக இருப்பேன் - அது வேசித்தனம்.<br />
<br />
நீ எவ்வளவு பணம் நகை கொண்டு வந்திருந்தாலும், வேலைக்குச் சென்று கை நிறைய சம்பாதித்தாலும் நீ எனக்கு அடிமை என்பதை மறந்துவிடக்கூடாது - ஒரு அடிமையைத்தான் காசு கொடுத்து வாங்குவார்கள். இங்கே தலைகீழாய் மாற்றி வைத்திருக்கிறீர்களே.<br />
<br />
நீ வேலைக்குச் சென்றாலும் பிள்ளைகளையும் வளர்த்துக்கொண்டு வீட்டையும் நீதான் கவனிக்க வேண்டும் - நான் வலிமையானவன். நான் சும்மாவே இருப்பேன்.<br />
<br />
சரி இப்படியெல்லாம் எங்களை வைத்திருக்கிறீர்களே உலகத்துப் பெண்கள் எல்லாம் ஒருநாள் கூடி நமக்கு இந்த உலகத்துச் சந்தோஷங்கள் சொந்தமில்லை அதனால் நாம் மனித உற்பத்தியை நிறுத்திவிடுவோம் என்று முடிவெடுத்தால் என்ன செய்வீர்கள்.<br />
<br />
ஒரு சின்ன கஷ்டம் வந்தாலும் உடனே வீட்டைவிட்டு ஓடிவிடுகிறீர்கள் அல்லது தற்கொலைக்கு முயல்கிறீர்கள். ஆனால் மெலிந்தவர்கள் என்று சொல்லப்படும் பெண் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அவ்வளவிலும் சமாளித்து பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து நிற்பாள்.<br />
<br />
இது அனைத்து ஆண்களிடமும் கேட்கப்படுபவை அல்ல. பெண்களை புரிந்துகொண்ட பெண்களும் உலகத்தில் சந்தோஷமாக வாழ வேண்டியவர்களே என்று நினைக்கும் ஆண்களும் இதே உலகத்தில்தான் இருக்கிறார்கள். அவர்களால்தான் நிறையப் பெண்களால் நிம்மததிப்பெருமூச்சு விட முடிகிறது.<br />
<br />
டிஸ்கி : இவ்வளவு நாள் இணையப்பக்கம் வரமுடியாத சூழல். இப்போதும் தற்காலிகமாகவே வந்திருக்கிறேன். இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் கழித்தே முழுமையாக வருவேன் என்று நினைக்கிறேன். எனக்கு பின்னூட்டமிட்டு அன்பை தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. நான் இல்லாதபோதும் வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய பன்னிக்குட்டி ராமசாமி அவர்களுக்கு நன்றி. எனக்கு விருது வழங்கிய எம்.அப்துல் காதருக்கும் நன்றி. என்னை மறந்துருராதீங்க நண்பர்களே.</div>ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-38627971867375219002010-12-04T15:19:00.000+05:302010-12-04T15:19:08.374+05:30பதிவுலகம்வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். அப்படி ஒரு சூழ்நிலையில்தான் இந்த ப்ளாக் எனக்கு அறிமுகமானது. வேறொரு உலகத்திற்குள் நுழைந்தது போல் இருக்கிறது. பார்க்காமல் பேசிக்கொள்வது, பாராட்டிக்கொள்வது, திட்டிக்கொள்வது, சண்டையிட்டுக்கொள்வது உண்மையிலேயே இது வேறொரு உலகம்தான். இந்த உலகம் எனக்கு மிகவும் பிடித்தமான உலகமாக மாறிப்போனது. எத்தனை எத்தனை உறவுகள். நட்புகள்.<br />
<br />
ப்ளாக் தொடங்குவற்கு முன் என்னால் எழுத முடியும் என்று நான் நினைத்ததே இல்லை. என்னையும் எழுத வைத்திருக்கிறது கூகுள். என்னைப்போல் ஆயிரக்கணக்கானவர்களை எழுத வைத்திருக்கிறது. எத்தனை விதமான அனுபவங்கள் எத்தனை விதமான சிந்தனைகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான எழுத்துக்கள். பத்திரிகைன்னு எடுத்துக்கொண்டால் ஒரு சிலர் மட்டுமே எழுத முடியும். அதிலும் தரம் என்று ஒன்று வைத்திருப்பார்கள். இங்கே அதெல்லாம் இல்லை. நமக்கு நாமே ராஜா. அதற்காக ப்ளாக் உலகம் ஒன்றும் பத்திரிகை உலகத்திற்கு குறைந்தது என்று நான் நினைக்கவில்லை.<br />
<br />
சிலர் எழுத்துக்கள் ரொம்ப நன்றாக இருக்கும். என்னைப்போல் சிலர் எழுத்துக்கள் பரவாயில்லாமல் இருக்கும். அவரவர் படிப்பு, அறிவு, வளர்ந்த விதம், சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரியே எழுத்துக்கள் அமையும். அதனால் எல்லா எழுத்துக்களும் அவர்களது உணர்வுகளே என்ற வகையில் நான் அனைத்தையும் ஒன்றாகவே பார்க்கிறேன்.<br />
<br />
நாம் எழுதுவதை இன்னொருவர் பாராட்டும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நாம் எழுதுவதையும் பாராட்டுகிறார்களே என்று எனக்குத் தோன்றும். நிச்சயம் எல்லோருக்கும் பின்னூட்டம் அதே மகிழ்ச்சியை அளிக்கும் என்று நினைக்கிறேன். நானும் நிறைய பேருக்கு பின்னூட்டமிட நினைப்பேன். என்னுடை வேலைகளுக்கு நடுவே குறைந்த அளவே பின்னூட்டமிட முடிகிறது என்பது எனக்கு மிகப்பெரிய குறையே. ஒருவருக்கு ஒருவர் வாக்களித்துக்கொள்வது, நாம் ஒருவருக்கு வாக்களித்தால்தான் நாமும் நமக்கான வாக்கை எதிர்பார்க்க முடியும். இது ஒன்றும் ஒன்வே இல்லையே.<br />
<br />
இப்படியே சந்தோஷமா போயிட்டிருந்த ப்ளாக் உலகத்துல ஒரு சின்ன தேக்கம். சிலபல காரணங்களுக்காக மூன்று மாதங்களுக்கு என்னால் இந்தப்பக்கம் வர முடியாது. மக்களே என்னை மறந்துறாதீங்க. எப்பவாவது நேரம் கிடைத்தால் இந்தப்பக்கம் வருவேன். (யாருப்பா அது அப்பாடான்னு பெருமூச்சு விடறது. சிரிப்பு போலீசும், சவுந்தருமா?)<br />
<br />
ஆரஞ்சு கலர் பட்டுப்புடவையை பார்த்தால்<br />
அதை வாங்கிக்கொடுத்த அக்காவின் ஞாபகம்<br />
<br />
மயிலிறகைப் பார்த்தால்<br />
சிறுவயது பள்ளித்தோழனோடு<br />
புத்தகத்தில் குட்டிபோட வைத்து<br />
மயிலிறகு வளர்த்த ஞாபகம்<br />
<br />
சுவரில் தொங்கும் இயற்கைக் காட்சி படத்தைப்பார்த்தால்<br />
ஆஸ்திரேலியாவில் இருந்து வரும்போது கொடுத்த<br />
தோழி ஞாபகம்<br />
<br />
யாருக்காவது எதைப்பார்த்தாவது<br />
என் ஞாபகம் வருமா?<br />
<br />
<b>டிஸ்கி:</b> இத நான் கவிதைன்னு சொல்லல. நீங்களா கவிதைன்னு நெனச்சுக்கிட்டா கம்பேனி பொறுப்பில்ல.ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com35tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-32034236422116786242010-12-02T15:48:00.000+05:302010-12-02T15:48:15.602+05:30The Way Home 2002 - வீடு திரும்பல் - நந்தலாலாசிலர் தமிழ்படங்களை விமர்சிப்பதைப்பார்க்கும்போது எனக்கு பயங்கர கோபம் வரும். நாம் அருமையான படம் என்று நினைத்திருப்போம், அந்தப்படத்தை குறைகூறி கிழித்து தொங்கவிட்டுக்கொண்டிருப்பார்கள். பிறகு நமக்கு கோபம் வராதா? இவர்கள் எந்தப்படத்தைத்தான் நல்ல படம் என்று கூறுவார்கள் என்று தோன்றும். இவர்களுக்கு ரசனையே இல்லையோ என்றும் நினைப்பேன்.<br />
<br />
எங்க மாமாவும் அக்காவும் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்களிடம் ஏதாவது ஒரு நல்ல படம் பார்க்கலாமா என்று கேட்டேன். அவர்கள் அளித்தபதில் இதேபோல் எனக்கு கோபத்தை ஊட்டியது. எங்களுக்கு தமிழ்படமே பாக்க முடியல என்றனர். ஏதோ பிலிம் சொசைட்டியில் மெம்பராம். வாரம் ஒரு உலகப் படம் போடுவார்களாம். அதைப்பார்த்துவிட்டு தமிழ்படம் பார்க்க முடியவில்லை என்றனர். அது நான் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் மாமா என்பதால் சின்ன கோபத்தோடு போயிற்று.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCe3dmb2jZJKqsa5liwfQebcMNh2FyYMuLc1Sc_mDgyfLCS6cW03yQr7OeYaJKhJd_jl-bH8Jb2dnPwOK_YqrN_HMF2-90HWi1z_M6m4BI9Fl7ybJ7nEa24Ut6sbIs-KLsfbMjYKd4Q8yo/s1600/the+way+home.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCe3dmb2jZJKqsa5liwfQebcMNh2FyYMuLc1Sc_mDgyfLCS6cW03yQr7OeYaJKhJd_jl-bH8Jb2dnPwOK_YqrN_HMF2-90HWi1z_M6m4BI9Fl7ybJ7nEa24Ut6sbIs-KLsfbMjYKd4Q8yo/s1600/the+way+home.jpg" /></a></div><br />
<br />
இப்போது சில வருடங்களாக என் பிள்ளைகளின் தயவில் சில உலகப்படங்கள் நானும் பார்க்கிறேன். ஆங்கில சப் டைட்டிலுக்கே எனக்கு தமிழில் மொழிபெயர்ப்பு செய்யனும். அப்படி சமீபத்தில் பார்த்த படம் The Way Home 2002 - வீடு திரும்பல் என்ற கொரியன் பிலிம். முக்கிய கதாபாத்திரங்கள் ஒரு கூன் வளைந்த வாய் பேச முடியாத ஒரு கிழவி, ஒரு 7-8 வயது சிறுவன். அந்தச் சிறுவனின் அம்மா மகனை தன் தாயிடம் (சிறுவனின் பாட்டி) கொஞ்சம் நாட்கள் விட்டுச் செல்கிறார். மலைமேல் அமைந்த கிராமம். அதிலும் அவங்க பாட்டி வீடு இன்னும் மேலே தனியாக இருக்கும்.<br />
<br />
சிட்டியில் வளர்ந்த பையன். அவனுக்கு அந்த ஊர், அந்த வீடு, அந்தப்பாட்டி எதுவுமே பிடிக்கவில்லை. ஆனாலும் அவர் அம்மா வலுக்கட்டாயமாக விட்டுச் செல்கிறார். அவன் தன் பாட்டியிடம் பேசவே மாட்டான் அவ்வளவு பிடிக்காது. அந்த சில நாள் பாட்டியுடனான வாழ்க்கை அவனுக்குள் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை.<br />
<br />
அந்த நாட்களில் அவர்கள் இருவரும் சாதாரணமான வாழ்க்கையில் ஏற்படுவது போன்ற நிகழ்வுகளே இருக்கும். மலையில் விளையும் பொருட்களை பஸ்சில் பக்கத்து ஊருக்கு எடுத்துச்சென்று விற்றுவிட்டு வந்தால்தான் பாட்டிக்கு காசு. சிட்டியில் பீஃசா, பர்கர் என்று சாப்பிட்டு வளர்ந்த பையன். பேரன் மீது பாசம் மட்டுமே காட்டும் பாட்டி. ஊருக்குச் செல்லும் நாள் வரும்போது பாட்டியின் அன்பை புரிந்துகொள்ளும் சிறுவன்.<br />
<br />
இதில் வரும் காட்சிகள் அனைத்தும் சாதாரணமாக வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள்தான். திடுக் சம்பவங்களோ, குளோசப் காட்சிகளோ, முகம் துடிக்க, கண்கள் கலங்க நடிக்கும் காட்சிகளோ இல்லை. நாம் நம் வாழ்க்கையில் எப்படி இருப்போம் அதே போன்ற காட்சிகள்தான். மெல்ல அந்த மலைப் பாதையில் நடந்து செல்லும் பாட்டி. படமும் மெதுவாகத்தான் செல்லும். மெதுவாகச் செல்வதால் போர் அடிக்கவில்லை. தொடர்ந்து பார்க்கும் ஆவலைத்தான் தந்தது. படம் முடிந்தவுடன் மனதில் தோன்றும் கனமான உணர்வு. அந்தப் படத்தைப் பார்த்து நான்கு மாதங்கள் ஆகின்றன. இன்னும் அந்தப்பாட்டியும், எனக்குப் புரியாத மொழியில் பேசும் அந்தச் சிறுவனும் என் நினைவில் அடிக்கடி வருகிறார்கள். இதைத்தான் உலகப் படம் என்று கொண்டாடுகிறார்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGydRr8e6tf5GuI20avjfG6lrp7nmPv9IAfFEKdXuuXajIcLMqU3GQdBoOJ2NcEy68JHYyI6ju3BNpizaKLG4UMNdOXQ7XeDWfNBF8H3QVAyFCPnK-RKnRE6x18OBVq-0pGnnCIcu0fqXw/s1600/the+way+home+1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGydRr8e6tf5GuI20avjfG6lrp7nmPv9IAfFEKdXuuXajIcLMqU3GQdBoOJ2NcEy68JHYyI6ju3BNpizaKLG4UMNdOXQ7XeDWfNBF8H3QVAyFCPnK-RKnRE6x18OBVq-0pGnnCIcu0fqXw/s1600/the+way+home+1.jpg" /></a></div><br />
<br />
இப்படிப்பட்ட படங்களையே பார்ப்பவர்களுக்கு தமிழ்ப்படங்கள் ஏமாற்றத்தைத்தானே அளிக்கும். இந்தப் படங்களைப் பார்த்த பிறகு தமிழ்ப்படங்களை விமர்சிப்பவர்களின் ஆதங்கம் புரிகிறது. அவர்களின் விமர்சனமும் எனக்கு கோபத்தை அளிப்பதில்லை. புரிந்துகொள்ளவும் முடிகிறது.<br />
<br />
இப்போ வந்துள்ள நந்தலாலா படத்தின் காட்சிகள் டிவியில் பார்க்கும்போது மேற்சொன்ன படங்களின் சாயல் தெரிகிறது. நம்ம ஊருலயும் உலகப்படமான்னு தோணுது. அந்தப்படத்த வச்சு ரெண்டு விதமான கருத்துக்கள் இணையவெளியில் இருப்பதை அறிகிறேன். இரண்டுமே தவறல்ல. ஒன்று இந்த மாதிரி படங்கள் தமிழில் தேவை. இதைப் பார்த்தாவது மக்களும் சினிமான்னா என்னவென்று தெரிந்துகொள்ளட்டும், ஒன்றிரண்டு இயக்குனர்களாவது இதைப்போல படமெடுக்க முனைவார்கள் என்பது. இவர்கள் நினைப்பு ரொம்ப சரி. இரண்டாவது ஜப்பான் படத்தை முன்மாதிரியாக வைத்து எடுத்துவிட்டு அந்தப் படத்திற்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பது. இதுவும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே. பூ, பேராண்மை போன்ற படங்களில் டைட்டிலில் போட்டிருந்த அந்த ஆங்கிலப்படங்களின் பெயர்களை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. அந்தந்த இயக்குநர்களின் படங்களாகவே பார்த்தார்கள். இவரும் அதைப்போல் போட்டிருக்கலாம். இப்போது அதை வைத்து நடக்கும் சர்ச்சைகளால்தான் இந்த விஷயம் மக்களுக்கு தெரிகிறது. சிறிதாக ஒரு வரி போட்டிருந்தால் மிஷ்கின் படமாகவே அனைவரும் பார்த்திருப்பார்கள்.<br />
<br />
<b>டிஸ்கி : </b> The Way Home 2002 - வீடு திரும்பல் இந்தப் படத்தின் விமர்சனம் <a href="http://tamilkothu.blogspot.com/2010/11/way-home-2002.html">பிரசன்னா (கொத்து பரோட்டா)</a> நன்றாக செய்துள்ளார்.ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-67867239848470503132010-11-26T12:26:00.000+05:302010-11-26T12:26:21.363+05:30காதல் திருமணம்சமீபத்தில் உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். மணமக்கள் மேடைக்கு சற்றுத்தள்ளி சிறிய மேடையில் பாட்டுக்கச்சேரி நடந்துகொண்டிருந்தது. அதில் அப்பா மேல் சிங்கர் (ஆண் பாடகர்), 12 வயது மகள் ஃபிமேல் சிங்கர் (பெண் பாடகர்), இன்னும் இரண்டு மூன்று ஆண்கள் கீ போர்ட் மற்றும் வாத்தியங்கள் வாசித்தார்கள். அம்மா சவுண்டை சரிபண்ணும் கருவியை மேடை மேல் வைத்துக்கொண்டு மேடைக்கு கீழே சேர் போட்டு அமர்ந்து கொண்டு சவுண்டை சரி பண்ணிக்கொண்டிருந்தார். அவர்களின் மகன் 3-4 வயதிருக்கும் நான்கு மேளங்கள் இணைந்தார்போல் ஒரு இணைப்பை அவன் முன் வைத்து ட்ரம்ஸ் அடிக்கும் குச்சியை வைத்து அடித்துக்கொண்டிருந்தான். அவனும் அம்மாவைப்போலவே ஸ்டேஜுக்கு முன்னால் கீழே அமர்ந்திருந்தான். அந்தப் பையனைப் பார்த்தவுடன் இப்படித்தான் சூப்பர் சிங்கரில் பாடிய ஸ்ரீகாந்தும் உருவாகியிருப்பான் என்றாள் என் மகள்.<br />
<br />
ஸ்டேஜில் இருக்கும் அப்பா அம்மாவை கண்களால் அழைத்து மகன் எங்கே என்று கேட்கிறார். திரும்பிப்பார்த்த அம்மாவின் முகத்தில் சின்ன பதற்றம். பக்கத்தில் மகனைக் காணவில்லை. இருவரும் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டே கண்களால் தேடுகிறார்கள். அப்பா உயரமான இடத்தில் நிற்பதால் மகனை உடனே கண்டுபிடித்துவிடுகிறார். அம்மாவிடம் கண்களாலேயே சுட்டிக்காட்டுகிறார். கல்யாணத்திற்கு வந்த இன்னொரு குழந்தையின் அருகே இருக்கும் சேரில் இந்தக் குழந்தை ஏறமுடியாமல் ஏறி அமர்ந்துகொண்டிருக்கிறது. இருவரும் ஒருவித நிம்மதியுடன் தங்கள் வேலையைத் தொடர்கிறார்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6CrtbGa6hAmj8NivTERBTTEq6MJr2DJucCmrT0iJxd9L1lryxSfQ2-yMMM8-iwYZpXrcKCarhodRYe4wNgBMwA5Y_EJJ3FeEQPQUAxF9r3F7ZyNGIcZkU62o9HIWxr9SCD8E_7oloJgiV/s1600/eyes.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="281" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6CrtbGa6hAmj8NivTERBTTEq6MJr2DJucCmrT0iJxd9L1lryxSfQ2-yMMM8-iwYZpXrcKCarhodRYe4wNgBMwA5Y_EJJ3FeEQPQUAxF9r3F7ZyNGIcZkU62o9HIWxr9SCD8E_7oloJgiV/s320/eyes.jpg" width="320" /></a></div><br />
<br />
கண்களால் பேசிக்கொள்ளும் மொழியை எந்த மொழியாலும் வெல்ல முடியாது. இதை எந்த மொழியாலும் அழிக்கவும் முடியாது. காதலர்கள் கண்களாலேயே பேசிக்கொள்வார்களாம்.<br />
<br />
கண்களின் வார்த்தைகள் புரியாதோ<br />
காத்திருப்பேன் என்று தெரியாதோ<br />
<br />
கண்களின் மொழிகளைப்பற்றிய அருமையான பாடல்களும் உள்ளன.<br />
<br />
மணமக்களின் திருமணம் காதல் திருமணம். பெற்றோர் சம்மதத்துடன் நடக்கிறது. சென்னையில் காதல் திருமணங்கள் நிறைய பெற்றோர் சம்மதத்துடனேயே நடக்கிறது. ஆனால் வரதட்சணை வாங்குவது மட்டும் மாறவில்லை.<br />
<br />
சாதிகள் தோன்றிய காலத்தில் இருந்தே காதல் மணங்களும் நடந்திருக்கும். எத்தனை எதிர்ப்பு இருந்த போதிலும், காதல் மரணங்கள் இருந்த போதிலும் இந்தக் காதல் மட்டும் எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல் காலகாலத்திற்கும் தோன்றிக்கொண்டே இருக்கிறது. புதிதாக பிறந்துகொண்டே இருக்கிறது. உலகத்தை வாழ வைப்பதே காதல்தானே.<br />
<br />
சாதியை ஒழிக்க வேண்டும் என்று அரசாங்கம் நினைத்திருந்தால் அதற்கேற்ற சட்டங்கள் கொண்டு வந்திருக்கலாம். இத்தனை சாதி மறுப்புத் திருமணங்கள் நடக்கிறதே. அவர்களுக்கு நிறைய சலுகைகள் அளித்து சாதியற்ற ஒரு குழுவை உருவாக்கலாம். சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்கள் மட்டுமல்லாமல் சாதியை வெறுக்கும் அனைவரும் அதில் இணையலாம் என்று கூறலாம். அவர்களுக்கு வேலை, படிப்பு அனைத்திலும் முன்னுரிமை அளிக்கலாம். மெல்ல மெல்ல இந்தக்குழு பல்கிப்பெருகி சாதியில்லாத நிலைமையை உருவாக்கும். சாதியற்ற தமிழகம் உருவாகும். நினைக்கவே நல்லாயிருக்கில்ல. ம்ம்ம்...<br />
<br />
<b>டிஸ்கி :</b> கண்களால் பேசிக்கொள்ளும் பாடல்களை பின்னூட்டங்களில் சொல்லுங்களேன்.ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-50781089967870061862010-11-19T11:39:00.002+05:302010-11-22T22:30:33.035+05:30திருமணம் vs லிவிங் டு கெதர்ஆதி காலத்துல குகைகளில் நமது வாழ்க்கை இருந்தது. வேட்டையாடி உணவை பச்சையாக உண்டு வாழ்ந்து வந்தோம். பின்னர் அதையே வேக வைத்து உண்ணவும் கற்றுக்கொண்டோம். விவசாயம் வீட்டு விலங்கு வளர்ப்பு என்று காலங்கள் மாறிக்கொண்டே வந்தது. காலத்திற்கு ஏற்றார்போல் நம்மை பண்படுத்தி வந்தமையே பண்பாடு என்கிறோம். அப்படி மாறி வந்த பண்பாடுதான் இன்று நம்மை கணினி முன் அமர வைத்திருக்கிறது.<br />
<br />
கலாச்சாரம் என்பது நமக்கான வாழ்க்கை முறைக்கான சட்ட திட்டங்கள். சமூகத்தை சரியான முறையில் வழிநடத்திச் செல்ல இத்தகைய சட்டதிட்டங்கள் தேவையாக இருக்கிறது. இதுவும் ஆதி காலத்தில் இருந்து காலத்திற்கு ஏற்றார்போல் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. இப்போது உள்ளது நம் கலாச்சாரமா? நூறு ஆண்டுக்கு முன் இருந்தது நம் கலாச்சாரமா? என்று தேடிக்கொண்டு போனால் குகைகளில் போய்தான் அடையணும்.<br />
<br />
மிருகங்களுக்குக்கூட இத்தகைய சட்டதிட்டங்கள் உண்டு. ஒரு ஒழுங்கு உண்டு. பக்கத்துத்தெரு நாய் நம் தெருவில் நுழைந்துவிடட்டும் அவ்வளவுதான் இந்தியா பாகிஸ்தான் வார்தான் நடக்கும்.<br />
<br />
இந்த கலாச்சாரமும் பண்பாடும் ஒவ்வொரு நாட்டிற்க்கும் மாறுபடும். அவர்களின் பூகோள அமைப்பு, தட்பவெப்பம் போன்றவற்றிற்கு ஏற்ப அவரவர் கலாச்சாரத்தை அமைத்துக்கொண்டார்கள். உடையையே எடுத்துக்கொண்டால் தமிழ் நாடு வெப்ப பூமி என்பதால் பருத்தியால் நெய்த வேட்டியை கட்டிக்கொண்டார்கள். அதே வேட்டிதான் பெண்ணுக்கும், மேலே மறைப்பு ஏதும் இல்லாமல். குளிர் பிரதேசங்களில் கோட், சூட். பாலைவனங்களில் மணல் மேலே விழாமல் இருக்க தலையிலிருந்து கால் வரை மறைக்கும் ஆடைகள். பனிப்பிரதேசங்களில் விலங்குகளில் தோல்களினால் ஆன ஆடைகள். இந்த உடைகள் ஆரம்பகாலங்களில் ஆண் பெண் இருபாலாருக்கும் ஒன்றுபோலவே இருந்தது. பின்னர்தான் மாற்றமடைந்தது.<br />
<br />
இதில் இந்தக்கலாச்சாரம் மட்டம் இந்தக்கலாச்சாரம் உயர்ந்தது என்பதெல்லாம் இல்லை. அவரவர்களின் வாழ்நிலைக்கேற்ப உருவாக்கப்பட்டதே இவை. அவரவர்களுக்கு அவரவர் கலாச்சாரம் உயர்ந்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghDjUZidPcDG_OffVKvfK0z5AUEApb79RSTJeEoFlAW5DYPHVsfKvXZvmPD4X_ysYn-8pnsGjM9hyONwwATWZR2bx8HGwVdg9NfmDIODnszjqIRz-KUba27x2e8RSKAPs5ZP1c0yJ2hUTK/s1600/marrage.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="289" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghDjUZidPcDG_OffVKvfK0z5AUEApb79RSTJeEoFlAW5DYPHVsfKvXZvmPD4X_ysYn-8pnsGjM9hyONwwATWZR2bx8HGwVdg9NfmDIODnszjqIRz-KUba27x2e8RSKAPs5ZP1c0yJ2hUTK/s320/marrage.jpg" width="320" /></a></div><br />
<br />
நாம் சிந்து சமவெளி நாகரீக காலங்களிலேயே சுட்ட செங்கற்கலால் வீடுகட்டியும் கழிவுநீர் வாய்க்கால் போன்ற வசதிகளுடனுன் வாழ்ந்து வந்த கலாச்சாரம் நமது. இப்போது உலகத்தில் சிறந்த உணவுகளில் முதலாவது இடத்தைப் பிடிப்பது இந்திய உணவுகள்தான். நமக்கு உணவே மருந்து மருந்தே உணவு.<br />
<br />
நம் கலாச்சாரங்களில் பிற கலாச்சாரக் கலப்பு என்பது ஆரிய, இஸ்லாமிய, ஆங்கிலேயர் வருகைகளின்போது நடந்திருக்கும். அதுவும் பெரும் அளவில் நம் கலாச்சாரத்தை நாம் விட்டுக்கொடுத்துவிடவில்லை. அவர்களிடமிருந்து சிலவற்றை நாம் எடுத்துக்கொண்டு நம்மிடமிருந்து சிலவற்றை அவர்களுக்கு நாம் அளித்திருக்கிறோம்.<br />
<br />
நம் கலாச்சாரத்தில் உள்ள சிக்கல்களை நாம் அவ்வப்போது களைந்துகொண்டேதான் இருக்கிறோம். இப்போதுகூட ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதில் உள்ள அதிகபட்ச சிரமங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு டைவோர்ஸ் செய்துகொண்டு மறுதிருமணம் செய்துகொள்ளலாம் என்ற மாற்றம் வந்துள்ளது. இன்னும் மாற்றங்கள் தேவை. அதை நாம்தான் செய்துகொள்ள வேண்டும்.<br />
<br />
ஆனால் இப்போது நடப்பதைப் பார்க்கும் போது அந்நியக் கலாச்சாரம் நம்மேல் திணிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் தோன்றுகிறது. உலகமயமாக்கலுக்குப் பின் நடப்பவை அந்த நினைப்பைத் தருகின்றன. அந்நிய உடை ஏற்கெனவே நுழைந்துவிட்டது, உணவு, விழாக்களும் அவர்களுடையதை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இதில் ஒன்றும் நமக்கு பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் இந்த லிவிங் டு கெதர் என்கிற கலாச்சாரம் அப்படி எளிதாக கடந்துவிடக்கூடிய ஒன்றல்ல.<br />
<br />
இந்தியில் லிவிங் டு கெதர் வாழ்க்கை பற்றிய படங்கள் நிறைய வருகிறதாம். வட மாநிலங்களில் இந்தக் கலாச்சாரம் புகுந்துவிட்டதாம். தமிழ்நாட்டில்கூட நடந்துகொண்டிருக்கலாம். இதெல்லாம் திட்டமிட்டு நடக்கிறதா? இல்லை தாராளமயக்கொள்கையின் விளைவா?<br />
<br />
அவர்கள் நாட்டுக்கு இது சரியான முறையாக இருக்கலாம். அவர்கள் அனைத்து விதிகளையும் சரியாக கடைபிடிப்பவர்கள். லஞ்ச லாவண்கங்களில் மூழ்குவதில்லை. அவர்கள் கலாச்சாரத்தை சரியாக புரிந்துகொண்டு இந்த முறையை பின்பற்றி முதலில் நட்பாக இருந்து பின்னர் சேர்நது வாழ்ந்து பின்னர் துணையாக்கிக்கொள்கிறார்கள். இதைக் கேட்கும்போது மிகச் சிறந்த முறையாகவே தோன்றுகிறது. அப்படி இணைபவர்களால் காலம் முழுவதும் சந்தோஷமாக சேர்ந்துவாழ முடியும். நல்லமுறைதான் ஆனால் அது அவர்கள் நாட்டிற்கு மட்டும்.<br />
<br />
நமது நாட்டில் அதுவும் சமீப காலங்களில் சரியாகச் சொன்னால் உலகமயமாக்கலுக்குப்பின் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், (எனது <a href="http://paadiniyar.blogspot.com/2010/10/blog-post_08.html">இந்த</a> இடுகையை படிக்கவும்) பணத்தைத் துரத்திச் செல்வது, லஞ்சலாவண்யங்கள் தலைவிரித்தாடுவது போன்றவற்றைப் பார்க்கும்போது மனிதாபிமானத்தைத் தேட வேண்டியிருக்கிறது.<br />
<br />
ஒருவனுக்கு ஒருத்தி என்று நம் கலாச்சாரம் இருக்கும்போதே இரண்டு மூன்று மனைவிகளை வைத்துக்கொள்கிறார்கள். குழந்தைகள் பாலியியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதும் நடக்கிறது. சமீபத்தில் ஓமலூரில் ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவி தேர்வில் தோல்வியடைந்ததால் கிணற்றில் விழுந்து இறந்து விட்டாள் என்று சொல்லப்பட்டது. பிறகு அவளது கர்ப்பப்பையில் 50 வயது ஆணின் விந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இப்படியான சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம். நமக்கு இந்த லிவிங் டு கெதர் சரிப்பட்டுவருமா?<br />
<br />
இந்த முறை வந்தால் ஆண்களுக்கு ஏக கொண்டாட்டம்தான். ஆறு மாதத்திற்கு ஒருத்தியுடன் குடும்பம் நடத்தலாம். அவர்களின் வாழ்க்கையே இன்பமாகிவிடும். இதற்காக இதை அவர்கள் வேண்டிவரவேற்கலாம். ஆனால் பெண்களின் நிலை? இரண்டாவது ஒரு ஆணுடன் வேண்டுமானால் சேர்ந்துவாழ முயற்சிப்பார்கள். அதுவும் தோல்வியடைந்தால் தனியாக வாழத் தொடங்கிவிடுவார்கள். அதுவும் குழந்தைகள் எழுதப்படாத நியதியாக தாயிடமே இருக்கும். அவர்களும் குழந்தையை வளர்த்துக்கொண்டு தங்கள் மிச்ச காலத்தை நகர்த்துவார்கள். தகப்பன் இல்லாத குழந்தைகளாக வளரும். நல்ல சம்பளத்தில் வேலைக்குப் போகும் பெண்கள் என்றால் பொருளாதார ரீதியாக சிக்கல் இருக்காது. குறைந்த சம்பளம் அல்லது கூலி வேலை செய்யும் பெண்களின் நிலை கவலைக்கிடமாகிவிடும். இந்த முறை நம் நாட்டைப் பொறுத்தவரை கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துகொண்ட கதையாகத்தான் முடியும்.<br />
<br />
<b>டிஸ்கி :</b> இது எந்தப்பதிவுக்குமான எதிர்ப்பதிவு அல்ல. என் மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன்.ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com42tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-18241919990710334642010-11-11T12:29:00.000+05:302010-11-11T12:29:30.133+05:30என்கவுண்டர்குழந்தைகளை கொன்றவன் என்கவுண்டரில் கொல்லப்பட்டான் என்ற செய்தியைப் பார்த்தவுடன் மனதில் சந்தோஷமே தோன்றியது. தமிழ்நாட்டில் ஏறக்குறைய அனைவரின் மனநிலையும் அதுவாகவே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இது உணர்வு ரீதியாக சரி. ஆனால் ஜனநாயக நாட்டில் வாழும் நாம் இதை சரியென்று ஆமோதித்தால் ஜனநாயகத்தை மதிக்காத செயல்போல் இல்லையா? நிச்சயம் இதுபோன்ற குற்றங்கள் யாராலும் ஏற்றுக்கொள்ளவோ தாங்கிக்கொள்ளவோ முடியாத குற்றங்கள்தான். இதுபோன்ற குற்றங்கள் நடைபெற்றால் குற்றவாளிகளை அரசாங்கம் உடனடியாக விசாரித்து மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை சட்டப்படி இரண்டு மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றினால் அதைப்பார்த்து மற்றவர்களுக்கும் பயம் வரும். அதைவிடுத்து இதைப்போன்ற விசாரணையற்ற என்கவுண்டர்கள் தேவையா? இந்த என்கவுணடரில் உண்மையான குற்றவாளி கொல்லப்பட்டான் என்ற அளவில் சரி. இதேபோல் சரியாக விசாக்கப்படாத என்கவுண்டர்களில் குற்றம் செய்யாமல் யாராவது இறக்க நேரிட்டால்?<br />
<br />
மக்கள் சில விஷயங்களில் மட்டும் பொங்கி எழுவது ஏன்? இதேபோல நிறைய நிகழ்வுகள் நடக்கும்போதெல்லாம் அவர்கள் அமைதியாக ஏன் இருக்கிறார்கள். எல்லா விஷயங்களிலும் மக்கள் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுத்தாலே அரசாங்கம் பயப்படும். குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை சட்ட ரீதியாக அளிக்கப்படும். குற்றம் செய்ய நினைப்பவர்களும் பயப்படுவார்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVbmuX8DdWelN8rfabz9Y6t1QA8APm1lHA-nm-gPN2-SqHT8m82VQQsVt9pjdad8ikGc5CVkTaFiDz8a8r5Ek63_ROrvpTkh3xRwZZ718rz38-1butVaKPk2c31Kca963aDElll4kqbElY/s1600/kovai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVbmuX8DdWelN8rfabz9Y6t1QA8APm1lHA-nm-gPN2-SqHT8m82VQQsVt9pjdad8ikGc5CVkTaFiDz8a8r5Ek63_ROrvpTkh3xRwZZ718rz38-1butVaKPk2c31Kca963aDElll4kqbElY/s1600/kovai.jpg" /></a></div><br />
<br />
அம்பிகா என்ற இளம் பெண் நோக்கியா கம்பெனியில் பணி நேரத்தின்போது இயந்திரத்தில் மாட்டிக்கொண்டார் என்று சன் டிவியில் செய்தி பார்த்தேன். அதில் அவர்கள் மேலும் சொன்னது மெசினில் மாட்டிக்கொண்ட அம்பிகாவை உடனே வெளியே எடுக்க வேண்டுமென்றால் மெசினை உடைக்க வேண்டும். மெசின் இரண்டு கோடி என்பதால் அதை உடைக்கவில்லை. இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட அம்பிகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த செய்தியைக் கேட்டவுடன் எனக்கு மனது பதறியது. இரண்டு மணி நேரம் அந்த சிறு பெண் மெசினுக்குள் அணுஅணுவாக இறந்து கொண்டிருந்தாள். சித்ரவதைக்கொலை இல்லையா? உயிரைவிட மெசின் முக்கியமா? இதைப் பார்த்தவுடன் ப்ளாக்கில் எழுத வேண்டும் என்று இருந்தேன். இன்ட்லியில் பார்த்துக்கொண்டு வந்தபோது அம்பிகா பற்றி வினவில் வந்திருந்ததைப் பார்த்தேன்.<br />
<br />
அவர்கள் விரிவாக எழுதியிருந்தார்கள். அதில் வந்த அந்தத் தாயின் படம், என்னால் அந்தத் தாயின் படத்தையே பார்க்க முடியவில்லை. அம்பிகாவிற்கு ஜனவரியில் திருமணம் ஏற்பாடாகியிருந்ததாம். அவள் தனது வாழ்க்கையைப் பற்றி எவ்வளவு கனவுகள் கண்டிருப்பாள். அத்தனை கனவும் அந்த மெசினுக்கும் நோக்கியாவிற்கும் அர்ப்பணமா? இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பன்னாட்டுக் கம்பெனிகளும் நம் மக்களின் உயிரை சூறையாடத் தொடங்கிவிடாதா?<br />
<br />
விலைவாசி ஏற்றம், பெட்ரோல் டீசல் விலையேற்றம் என்று எதற்கும் யாருமே எந்த ரியாக்சனும் இல்லாமல் இருக்கிறார்களே? யாராவது பந்த் நடத்தினால்கூட கிண்டல் செய்துகொண்டிருக்கிறார்களே இதைப் பற்றியெல்லாம் ஏன் யாருமே கவலைப்படுவதில்லை என்று தோன்றும். இரண்டு நாட்களுக்கு முன் கல்வெட்டு அவர்களின் ப்ளாக்கில்<br />
<h3 class="post-title entry-title" style="background-attachment: initial; background-clip: initial; background-color: #b3b3b3; background-image: initial; background-origin: initial; color: #cc0000; font-family: Arial, sans-serif; font-size: 14px; font: normal normal bold 110%/normal Verdana, sans-serif; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 2px; padding-left: 2px; padding-right: 0px; padding-top: 2px;"><a href="http://kalvetu.blogspot.com/2010/10/blog-post_28.html" style="color: #cc0000; text-decoration: none;">கதை சொல்லிகளால் வரையப்படும் உங்கள் மனச்சித்திரங்கள்</a></h3><div class="post-header-line-1" style="font-family: Arial, sans-serif; font-size: 14px;"></div><div class="post-body entry-content" style="font-family: Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 0px; margin-left: 5px; margin-right: 6px; margin-top: 0px;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-1hko38DKmeumtHTwE0zZfeMx4Nf_-IhVMTQp5yh2Mh5-sFEDkWS4n6TcPyUrdGf07rtKkbIpUcnzafEyfvpIo2PZtA6MVVpQ-BH6xKcsVefI-426a7A8JoiOXCFqzVmYZodCBpULzCU/s1600/funny-devil-1.jpg" imageanchor="1" style="clear: left; color: #3d81ee; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-decoration: none;"><span class="Apple-style-span" style="color: black; font-family: 'Times New Roman'; font-size: medium;"> இந்த இடுகையைப் படித்தவுடன் எனது இந்த சந்தேகத்திற்கெல்லாம் விடை கிடைத்தாற்போல் தோன்றியது. இப்போது நடந்த கொலைக்கு மட்டும் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பொங்குவதன் மர்மமும் புரிந்தது.</span></a></div></div><br />
நாமெல்லாம் டியூன் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறோம். நாம் எப்போது கோபப்பட வேண்டும். எதற்காக கோபப்பட வேண்டும், எப்பொழுது சிரிக்க வேண்டும், எதற்கெல்லாம் ஆசைப்பட வேண்டும் என்றெல்லாம் டியூன் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களும் அதற்கேற்றார்போலவே நடந்துகொள்கிறார்கள்.<br />
<br />
இவ்வளவிலும் எனக்கொரு சந்தோஷம். மக்கள் ஒன்றுதிரண்டு கோபத்தில் கொந்தளிக்கிறார்கள். அவர்களுக்கு கொந்தளிக்கவும் தெரிகிறது. அதைப் பார்த்தவுடன் மனதுக்கு நிறைவாக இருந்தது. என்ன நடந்தாலும் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் ஆட்டு மந்தைகள் போல் இருக்கிறார்களே என்று நினைத்திருக்கிறேன். அவர்களின் இந்தக்கொந்தளிப்பு சந்தோஷத்தையே கொடுத்தது.<br />
<br />
ஒன்று நாமாக சிந்தித்து சமுதாயத்தை மாற்ற வேண்டும். அது இந்த சமுதாயத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு மாற்றுவார்கள் என்று தோன்றவில்லை. நம்மையெல்லாம் நல்ல வழியில் டியூன் செய்து வழி நடத்திச் செல்ல ரட்சகர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி நல்லவர்களால் டியூன் செய்யப்பட்டாவது அனைவருக்கும் நல்ல வாழ்க்கை அமையட்டும்.ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-90880897295704191422010-10-26T12:54:00.001+05:302010-10-26T12:59:20.767+05:30ஆண்டு விழா அனுபவங்கள் -தொடர் பதிவு<a href="http://sandanamullai.blogspot.com/">சந்தன முல்லை</a> என்னை தொடர் பதிவுக்கு அழைத்திருந்த தலைப்பு இது.<br />
<br />
5-ம் வகுப்பு வரை படித்தது திண்டுக்கல் பக்கத்தில் கிராமம். அங்க எப்படின்னா ஐந்து வகுப்புக்கும் சேர்த்து 2 ஆசிரியரே இருப்பார். 1, 2, 3 வகுப்புக்கு ஒரு வாத்தியார். 4, 5ம் வகுப்புக்கு ஒரு வாத்தியார். ஏன்னா இது பெரிய கிளாஸ்னால பாடம் அதிகமா இருக்கும்னு ரெண்டு வகுப்பு. 1,2,3 வகுப்புப் பக்கம் ஒரே போர்க்களம் மாதிரி ஹோன்னு சத்தம் கேட்கும். சின்ன வகுப்புன்றதால பிள்ளங்க அடங்க மாட்டாங்க. 4,5 பிள்ளைங்க வாத்தியார் இருந்தா அமைதியா இருப்பாங்க.<br />
<br />
5-ம் வகுப்பு முடிச்சுட்டா பக்கத்து ஊருல ஹை-ஸ்கூல் இருக்கும். ஒரு 4,5 கிலோ மீட்டர் நடந்து போய் படிக்கணும். பெரும்பாலும் பெண் பிள்ளைகள் 5ம் வகுப்போடு நிறுத்தப்படுவார்கள். நான் 5ம் வகுப்பு முடித்தவுடன் குடும்பச் சூழல் காரணமா திண்டுக்கல் இடம் பெயர்ந்தோம். அங்க சென்-ஜோசப்ஸ் ஸ்கூல்ல எங்க மாமா என்ன சேத்துவிட்டுட்டாரு. காதல் படத்துல வருமே ஒரு ஸ்கூல் அதுதான். மதுரைன்னு சொல்லிக்கிட்டு திண்டுக்கல்லதான் எடுத்திருக்காங்க.<br />
<br />
ஒரு வாரம் லேட்டாக சேர்க்கப்பட்டேன். அன்று வகுப்பிற்கு போய் முதல் பீரியடோ இரண்டாவது பீரியடோ இங்கிலீஸ். அங்க போயித்தான் பீரியட்ன்னா என்னான்னு தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு இங்கிலீஸ்ல ஏ,பி,சி,டி மட்டுமே தெரியும். அதுவும் கேப்பிடல் மட்டும். தமிழ் படிக்கத் தெரியும் (எங்க அம்மா புண்ணியத்தில்)<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivZh_kM1qEY5GTClh9Bnr0INFJpmZqDxJgZuTeZ3eNFuPqOrVC-whi3Rd2v7q0Q4oHjBpcVf_mgppUlXTbvjAy7HXdv1bc5ejFucUfGLjCdHn3zGLLfRT6jGGQfZCaoeeHRquhxwKhGTjE/s1600/school.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="236" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivZh_kM1qEY5GTClh9Bnr0INFJpmZqDxJgZuTeZ3eNFuPqOrVC-whi3Rd2v7q0Q4oHjBpcVf_mgppUlXTbvjAy7HXdv1bc5ejFucUfGLjCdHn3zGLLfRT6jGGQfZCaoeeHRquhxwKhGTjE/s320/school.jpg" width="320" /></a></div><br />
<br />
ஒரு வாரத்துல ஒரு பாடம் இங்கிலீசுல நடத்திட்டாங்க போல. அன்னிக்கி டிக்டேசன் நடக்குது. எல்லாரும் டீச்சர் சொல்லச் சொல்ல அந்த வார்த்தைகள எழுதறாங்க. நான் மலங்க மலங்க முழிச்சுக்கிட்டு இருக்குறேன். எனக்கு வலது பக்கம் உள்ள பெண் என்னை இடித்து சைகையால் எனக்கு இடது பக்கம் எழுதும் பெண்ணை பார்த்து எழுதச் சொல்கிறாள். ஏன்னா அவளும் அந்த வேலையைத்தான் செய்து கொண்டிருந்தாள். நானும் திரும்பிப் பார்த்தேன். அவள் எழுதியிருக்கும் எழுத்து எந்த லாங்குவேஜ்ன்னே தெரியல. அவ ஸ்மால் ஏ,பி,சி,டி-யில் எழுதிக்கொண்டிருந்தாள். அப்போதுதான் அந்த எழுத்தையே பார்க்கிறேன். என்னால் பார்த்துக்கூட எழுத முடியவில்லை. கடைசி வரை ஒரு வார்த்தைகூட எழுதல.<br />
<br />
அடுத்த அதிர்ச்சி இங்கிலீஸ் புத்தகம் கிட்டத்தட்ட 8-10 பாடம் + போயம் + கிராமர்னு புத்தகம் ஒரு நாவல் சைஸ்ல இருக்கு. ஏ,பி,சி,டி மட்டுமே தெரிந்த எனக்கு அந்த புத்தகத்த எப்படி படிக்க முடியும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. எனக்கு இன்னிக்கும் ஒரு வரி இங்கிலீஸ்ல ஏதாவது மெயிலோ ஏதோ வந்துருச்சுன்னா பயந்துருவேன். தமிழ் படிச்சு எப்படியும் பாஸ் பண்ணிருவேன். அது எப்படின்னே தெரியல இந்த கணக்கு மட்டும் எனக்கு கொஞ்சம் வந்துருச்சு. இந்த கணம், அல்ஜீப்ரா, க்ராப் எல்லாம் ஓரளவுக்கு வரும் அதைத் தவிர மீதி சப்ஜெக்ட் எல்லாம் கண்டிப்பா பெயில்தான். எப்பவாவது வரலாறு பாஸ் பண்ணுவேன்.<br />
<br />
எனக்கு இந்த ஸ்கூல் போறது மாதிரி உலகத்துலயே பிடிக்காத விஷயம் வேற எதுவுமே இல்ல. ஏன்னா நாம மக்குன்னு மனசுக்குள்ளேயே ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துருதே. நான் ஒரு முட்டாள், அறிவு கம்மி போன்ற எண்ணங்களும் வரும்.<br />
<br />
இப்படியே 10-ம் வகுப்பு பொதுத் தேர்வும் எழுதினேன். எப்படியும் பெயில்தான ஆகப்போறம்றதுல எந்த சந்தேகமும் இல்லையே. ஆனா அங்கதான் ஒரு டுவிஸ்ட் இன்னைக்கி வரைக்கும் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் புரியாத விஷயம் நான் 10-ம் வகுப்பு பாஸ். பாஸானது ஒரு பக்கம் சந்தோஷம்னாலும் இன்னொரு பக்கம் +2 சேத்துவிட்டுருவாங்களோன்னு பயம். நல்ல வேலை அந்த தப்ப எங்க வீட்டுல செய்யல.<br />
<br />
நானே இப்படி படிச்சேன். என்னப்பாத்து ஆண்டு விழா அனுபவங்கள எழுதுன்னு சொல்லிட்டாங்களே. மகளே இந்த சந்தனமுல்லை மட்டும் என் முன்னால இருந்துருந்தாங்க அவ்வளவுதான் கொல கேசாகிப்போயிருக்கும்.<br />
<br />
ஆண்டு விழான்னா எங்க பள்ளியில நிகழ்ச்சிங்க தொடங்கறதுக்கு முன்னால ஸ்கூல்ல உள்ள பிள்ளைகள் அத்தனை பேரும் சேர்ந்து ஒரு எக்ஸசைஸ் மாதிரி பண்ணுவோம். பெரிய கிரவுண்ட் அந்த கிரவுண்ட் முழுக்க நிறைந்திருப்போம். இசைக்கு ஏற்ப நாங்கள் அனைவரும் எக்சசைஸ் பண்ணுவோம். அது பார்க்க ரொம்ப அழகாக இருக்கும். அதில் நான் இருப்பேன். அப்புறம் சுதந்திர தினம் வந்தா திண்டுக்கல்ல இருக்க எல்லா பள்ளிகளும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சி பண்ணுவாங்க. முன்னால ஒரு லாரியோ வண்டியோ போகும் அதில் பாரதமாதா போல நேதாஜி, காந்தி, பகத்சிங் போல எல்லாம் அலங்கரிக்கப்பட்ட பிள்ளைகள் இருப்பார்கள். பின்னால் அந்த பள்ளியின் பிள்ளைகள் மார்ச் பாஸ்ட் செய்து நடந்து செல்வார்கள். அவர்களுக்கு அடுத்து இன்னொரு பள்ளியின் வண்டி அதன் அந்தப் பள்ளியின் பிள்ளைகள் என அனைத்துப் பள்ளிகளும் கலந்துகொள்வார்கள். அதில் சிறந்த முறையில் பங்கேற்கும் பள்ளிகளுக்கு பரிசுகளும் வழங்கப்படுமாம். இதிலும் நான் பங்கேற்பேன் (இங்க பாருங்க இப்படியெல்லாம் சிரிக்கக்கூடாது). எல்லாரும் காந்தி மைதானத்துக்கு போனபின் பூந்திப் பொட்டலம் கொடுப்பார்கள். அப்புறம் அவங்கவங்க வீட்டுக்கு அவரக்காயும் சோத்துக்கு.<br />
<br />
நாங்க சென்னை வந்த பின்னர் நான் தீக்கதிரில் வேலைக்கு சேர்ந்தேன். கம்ப்யூட்டரையே அப்போதான் பார்த்தேன். ரொம்ப சீக்கிரம் வேலை கற்றுக்கொண்டு தினசரி செய்தித்தாள் லே-அவுட் டிசைனிங் செய்வேன், விளம்பரம் செய்வேன், புக் ஒர்க் செய்வேன். அந்த நாளிதழின் தவிர்க்க முடியாத ஆழுமையாக நான் இருந்தேன். ம் ஜெயந்தி வந்துருச்சு, இன்னிக்கு பக்கம் பிரச்சனையில்லாம போயிரும்னு ஆசிரியர்ல இருந்து எல்லாரும் நினைப்பாங்க. எனக்கு முன்னால் வேலை கற்றவர்களையும் என்னைவிட அதிகம் படித்தவர்களையும் விட நான் நன்றாக வேலை செய்தேன். இது சுயவிளம்பரத்திற்காக சொல்லவில்லை. நான் ஸ்கூல் படிக்கும்போது நினைத்தேனே நான் ஒரு முட்டாள், அறிவு கம்மி போன்ற நினைப்புகளெல்லாம் தவறென்று அப்போதுதான் உணர்ந்தேன். தப்பு என் மீது இல்லை. நம் கல்வி முறையில் உள்ளது. என்போல் கோடிக்கணக்கான பேர் தாழ்வு மனப்பான்மையோடு வாழ்கிறார்கள். இதற்கு யார் காரணம்?<br />
<br />
அரசாங்கப் பள்ளிகளின் கட்டிடங்கள் சரியில்லை, போதிய ஆசிரியர்கள் இல்லை போன்ற பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும், இன்றைக்கு தனியார் பள்ளியில் குறைந்த சம்பளத்தை வாங்கிக்கொண்டு நன்றாக சொல்லித் தருகிறார்கள். அவர்களுக்கு நெருக்கடி இருக்கிறது. அரசாங்கப் பள்ளிகளில் அந்த நெருக்கடி இல்லாததால் ஆசிரியர்களும் ஏனோ தானோவென்று பாடம் சொல்லித் தருகிறார்கள். இப்போது சில அரசாங்கப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான இடங்களைப் பெறுவதைப் பார்க்கும்போது கடமையை உணர்ந்த ஆசிரியர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.<br />
<br />
கவர்ன்மென்ட் எய்டட் பள்ளிகள் ஓரளவுக்கு பரவாயில்லை. அரசாங்கம் அனைத்துப் பள்ளிகளையும் (தனியார் பள்ளிகள் உட்பட) இதேபோல் எய்டட் பள்ளிகளாக மாற்றி அந்தப் பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுத்து பிள்ளைகள் படிப்பிற்கு உதவ வேண்டும் என்று தோன்றுகிறது. கவர்ன்மென்ட் எய்டட் பள்ளிகளில் மிகக் குறைந்த கட்டணம். அனைவராலும் சிரமமில்லாமல் படிக்க வைக்க முடியும். கல்வியின் தரமும் மேம்படுத்தினால் பிள்ளைகளின் வாழ்க்கை ஒளிமயமாக அமையும்.ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-7550412663886870812010-10-19T13:21:00.001+05:302010-10-19T14:49:35.711+05:30ஒரு காதல் கதைஅமமாவும் நானும் அமர்ந்திருந்தோம். அம்மாவின் பலமான யோசனை ஏதோ பழைய ஊர் ஞாபகம் உள்ளுக்குள் ஓடுவதாக தோன்றியது. நான் நினைத்தது சரிதான்.<br />
<br />
"இந்த முத்தம்மா மக சந்திரா தெரியும்ல" என்று ஆரம்பித்தார்கள்.<br />
<br />
"ஏதோ நிழலாட்டம் ஞாபகம் இருக்கு" என்றேன்.<br />
<br />
"சந்திரா வீட்டுக்காரங்க ரொம்ப நல்ல மனுசங்க. கடுமையா உழைப்பாங்க. யாருகிட்டயும் எதுக்கும் கையேந்த மாட்டாங்க. யாரையும் ஒரு வார்த்தை கடிஞ்சு பேச மாட்டாங்க. கொஞ்சம் நிலம் இருக்கு. வெளியிலயும் கூலி வேலைக்குப் போவாங்க. அவங்க உண்டு அவங்க வீடு உண்டுன்னு இருப்பாங்க. அதுவும் இந்த சந்திரா ரொம்ப தைரியசாலி. ஒரு ஆம்பள அவகிட்ட தப்பான நோக்கத்துல பேச முடியாது. ஆம்பளங்களே பயப்படுவாங்க."<br />
<br />
35, 40 வருஷத்துக்கு முந்தைய சம்பவம் கண் முன் விரியத் தொடங்கியது.<br />
<br />
"பெருமாள் வீட்டு தோட்டம் காடு எல்லாத்துக்கும் சந்திராதான் வேலைக்கு ஆள் கூட்டிட்டுப்போறது, முன்னால நின்னு வேலை செய்றதுன்னு இருந்தா. அவ தலைமையிலதான் பெருமாள் நிலத்துல வேலை நடக்கும். இப்பிடியே இருந்தப்ப ஊருல எல்லாரும் பெருமாளயும் சந்திராவையும் பத்திஒரு மாதிரியா பேசத் தொடங்குனாங்க. அவங்க ரெண்டு பேரும் அந்தப் பேச்சப்பத்தி கவலப்படல. இந்த நெலமையில சந்திரா வீட்டுல மாப்பிள்ள பாக்கத் தொடங்குனாங்க. அவ கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு ஒரே பிடியா நின்னா. ஆனா அவங்க வீட்டுல என்ன பேசுனாங்களோ தெரியல ஒரு மாப்பிள்ளய பாத்து கல்யாணம் பண்ணி வச்சாங்க. பெருமாள் வீட்டுலயும் ஒரு பொண்ணப்பாத்து கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க."<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheXn4LcbKly2LLS1owdJb5dcGmj0hA7SMtQzIDHIo-usdBphMO0L7eb3YAPttDA8X9m7u8bLNTz5foNfHQsm7Hu0WUkMlhqYbsk62GC-qb9wXyx4iqgnEfCgiO-o7TZdCLWMXPleXKDb69/s1600/love.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="311" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheXn4LcbKly2LLS1owdJb5dcGmj0hA7SMtQzIDHIo-usdBphMO0L7eb3YAPttDA8X9m7u8bLNTz5foNfHQsm7Hu0WUkMlhqYbsk62GC-qb9wXyx4iqgnEfCgiO-o7TZdCLWMXPleXKDb69/s320/love.jpg" width="320" /></a></div><br />
<br />
"ஏன் அவங்கதான் லவ் பண்றாங்கள்ல ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்ல?"<br />
<br />
"கிராமத்துல அதெல்லாம் நடக்காது. அதுவும் ரெண்டு பேரும் வேறவேற ஜாதி வேற"<br />
<br />
"சந்திராவுக்கு பாத்த மாப்பிள்ளயோட ஊரு பஸ்ச விட்டு எறங்கி 6, 7 மைல் நடக்கணுமாம். இவ ஊருக்கு வரக்கூடாதுன்னு வேணும்னே அப்டி பார்த்தாங்களா இல்ல இவ விஷயம் தெரிஞ்சு வேற எங்கயும் அமையலயான்னு தெரியல. மாப்பிள்ளையும் நல்லாவே இருக்க மாட்டான். கல்யாணம் பண்ணி அனுப்புச்சாங்க மூணாவது நாள் மறுவீட்டுக்கு வந்தவ திரும்ப போகவே மாட்டேன்னு சொல்லிட்டா. அப்பற என்ன பண்ணுறது. இங்கயே ஒரு வீட்டுல ரெண்டு பேரையும் தனிக்குடித்தனமா வச்சாங்க. வீடுன்னா சின்ன குடிசை. ஒரு சின்ன ரூம், ஒரு தடுப்பு வச்ச சமையல்கட்டு. ரெண்டு பேரும் கூலி வேல செஞ்சுக்கிட்டு இருந்துக்கங்கன்னு சொல்லிட்டாங்க. ஆனா சந்திரா புருஷன் கூட ஒரு வார்த்த கூட பேச மாட்டா. அவனும் கொஞ்ச நாள் இருந்து பாத்துட்டு அவங்க ஊருக்கே ஓடிட்டான். அவ அந்த குடிசையிலேயே இருந்துட்டா."<br />
<br />
"இந்த நேரத்துல பெருமாளு பொண்டாட்டி பிரசவத்துக்கு போனவ பிரசவத்துல செத்துப்போயிட்டா. பெறந்த கொழந்தய அவங்க மாமனார் வீட்டுலயே பாத்துக்குறேன்னு சொல்லிட்டாங்க. இவனும் அதுக்கப்பறம் வேற கல்யாணம் பண்ணிக்கல."<br />
<br />
"ரெண்டு பேரும் எங்க பாத்துக்கறாங்க எப்படி பேசிக்கறாங்கன்னெல்லாம் யாருக்கும் தெரியாது."<br />
<br />
"அப்போ ஊருலயெல்லாம் உண்டாகிட்டா கொறத்திய கூப்புடுவாங்க. அவ வந்து குச்சி வப்பா"<br />
<br />
"கொறத்தின்னா நரிக்கொறத்தியா?"<br />
<br />
"இல்ல. இவங்க பன்னி மேய்க்கறவங்க. ஊருக்குள்ளயே இருப்பாங்க. கொறவர்ன்னு சொல்வாங்க"<br />
<br />
"சரி இந்த குச்சி வைக்கறதுன்னா என்ன?"<br />
<br />
"எருக்கஞ்செடி இருக்குல்ல அதுதான் இந்த வினாயகர் சதுர்த்திக்குக்கூட எருக்கம்பூ மாலை போடுவாங்களே அந்தச்செடி."<br />
<br />
"ம் தெரியும்."<br />
<br />
"அதோட எல நல்லா பழுத்த எல. அந்தா அந்தப் பாய் இருக்கு பாரு அந்த மாதிரி மஞ்சக் கலர்ல இருக்கும். அந்த எலைய எடுத்து அது நடுவுல இருக்க காம்பு குச்சிய ஒரு ரெண்டு இஞ்சு நீளத்துக்கு எடுத்துக்குவாங்க. ஒருமுனையில ஒரு துணிய கட்டிருவாங்க. இன்னொரு முனையில ஏதோ மருந்து வைப்பாங்களாம். இந்த குச்சிய துணி வெளியில தொங்குற மாதிரி வச்சுருவாங்க. தீட்டு படத் தொடங்குன ஒடனே அந்த துணிய பிடிச்சு குச்சிய இழுத்துவிட்டுறனும். குச்சி உள்ள போயிருச்சுன்னா அவ்வளவுதான். துணியிலயிருந்து குச்சி கழன்றுகிட்டு உள்ளே போயிருச்சுன்னாலும் அவ்வளவுதான். உயிருக்கே ஆபத்து. யாராலும் காப்பாத்த முடியாது."<br />
<br />
"கொறத்தி இருக்காளே அவ என்ன ஆளு தெரியுமா? அவ நைசா இதுக்கு காரணம் யாருன்னு சொல்லு அப்பத்தான் மருந்து பலிக்கும்னு சொல்லி உண்மைய வாங்கிக்குவா? ஆனா யாரு கேட்டாலும் அவ சொல்லவே மாட்டா. யாரும் கேட்க மாட்டாங்க. அதுதான் எல்லாருக்கும் தெரியுமே."<br />
<br />
பேச்சை நிறுத்திவிட்டு ஏதோ யோசித்த அம்மாவின் வாயிலிருந்து "எவ்வளவு பாவம்ல அந்த சந்திரா" என்ற வார்த்தைகள் வந்தன.<br />
<br />
"இப்டியே இருந்தாங்க. அப்பறம் கொஞ்ச நாள்ல நாங்க திண்டுக்கல் வந்துட்டம். அதுப்பறம் எங்க ஊரு தொடர்பே விட்டுப்போச்சு. அப்பறம் என்னாச்சுன்னு தெரியல."<br />
<br />
"இந்தா பாரு ஒரு கதை சொன்னா முடிவ சொல்லனும். இப்படி முடிவு கிழிஞ்சுபோன நாவல்மாதிரி கதை சொன்னா என்ன அர்த்தம்"<br />
<br />
"நான் எனக்கு தெரிஞ்ச வரைக்கும்தான சொல்ல முடியும். ஊருக்கு போனா தெரியும். என்ன அப்டியேதான் இன்னும் இருப்பாங்க இல்லன்னா ஒரே வீட்டுல இருப்பாங்க. ஏன்னா இப்போ அவங்களுக்கு வயசாகியிருக்கும் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்கல்ல. சொன்னாலும் அவங்களுக்கு கவலையில்லை இல்ல. இல்ல ஊருக்கு பயந்துக்கிட்டு இன்னும் தனித்தனியாத்தான் இருகாங்களோ தெரியல."ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-89103123008819400102010-10-16T12:20:00.001+05:302010-10-21T21:39:14.273+05:30பிறந்த நாள்<div class="separator" style="clear: both; text-align: center;"></div><span class="Apple-style-span" style="font-family: Arial;"><br />
</span><br />
இந்த போட்டோவுல இருக்கவங்களுக்கு இன்னிக்கு பொறந்த நாளாம். அவங்களுக்கு சுய தம்பட்டம் பிடிக்காதாம். அதுனால என்கிட்ட போட்டோவ குடுத்து போடச்சொன்னாங்க.<br />
<br />
அவங்க பிறந்த தேதி சரியாத் தெரியாதாம். ஏன்னா அவங்க அம்மா தமிழ் மாசம் தமிழ் தேதிய மட்டும்தான் ஞாபகத்துல வச்சிருந்தாங்க. ஆனா அவங்க கொடுத்த ஒரு க்ளூ என்னன்னா இவங்க பொறந்த நாள் அன்னிக்கித்தான் சரஸ்வதி பூஜை கொண்டாடிக்கிட்டிருந்தாங்களாம். எல்லாரும் சாமி கும்பிட்டு பொரியெல்லாம் சாப்பிட்டுக்கிட்டிருந்தாங்களாம். அன்னிக்கி சாயங்காலம் 7 மணிக்கு நீ பொறந்தன்னு சொன்னதால இவங்க ஒவ்வொரு வருஷமும் சரஸ்வதி பூஜை அன்னிக்கே தன்னோட பொறந்த நாளா வச்சுக்கிட்டாங்களாம். அவங்களுக்கு ஒரு சந்தோஷம் படிப்பக் கும்புடுற நாள் அன்னிக்கி பொறந்ததுதான். (யாருப்பா அது அன்னிக்குத்தான் ஆயுதத்துக்கெல்லாம் பூஜை போடுவாங்கன்னு சொல்றது)<br />
<br />
அப்புறம் என்னோட வயசு 30 முடிஞ்சு 29 நடக்குது. அது கொஞ்ச வருஷமா அப்படித்தான் போயிட்டிருக்கு. (எந்த வருஷத்துல இருந்து இப்படி போகுதுன்னு கேட்கறது யாருப்பா? நம்ம சிரிப்பு போலீஸ்தான. அப்புறம் கவனிச்சுக்கறேன்.)<br />
<br />
<span class="Apple-style-span" style="font-size: x-large;"><span class="Apple-style-span" style="color: red;">என் ப்ளாக்குக்கும் முதல் பிறந்த நாள்</span></span><br />
<br />
நான் இதை ஆலோசிச்செல்லாம் துவங்கல. இது ஒரு கோ-இன்சிடென்ட்ன்னு சொல்லலாம். என்னோட கணவர் என் மகனிடம் தனக்கு ஒரு வலைப்பூ ஆரம்பித்துக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார். அவன் அவருக்கு ஒன்று ஆரம்பித்துக்கொடுத்துவிட்டு நீயும் ஒன்னு ஆரம்பிக்கிறயான்னு கேட்டான்.<br />
<br />
அவன் கிண்டலாக கேட்கிறான்னு நெனச்சுக்கிட்டு, ஏய் நானென்ன இலக்கியவாதியான்னு கேட்டேன். அதுக்கு அவன் அப்படி இல்லம்மா இது வந்து ஒரு டைரி எழுதற மாதிரி யாரு வேணும்னாலும் எழுதலாம், என்ன டைரிய யாரும் படிக்க மாட்டாங்க. ப்ளாக்க கொஞ்ச பேரு படிப்பாங்கன்னு சொன்னான். சரி எனக்கு நாலு வார்த்தை சேர்ந்தாப்போல பேசவே தெரியாதே நான் என்னத்த எழுதப்போறேன்னு கேட்டேன். அதுக்கு அவன் உனக்கு தோணுறத எழுதுன்னு சொல்லிட்டுப்போயிட்டான்.<br />
<br />
எனக்கு ப்ளாக்குன்னு ஒன்னு இருக்கறதே அப்பத்தான் தெரியும். எனக்கு ஆதி மூல கிருஷ்ணன் ப்ளாக் எப்படியோ படிக்கக் கிடைத்தது. அதில் குருவி பட விமர்சனம் என்னை மிகவும் கவர்ந்தது. பிறகு அவர் எழுதி தங்கமணி இடுகைகள் மிகவும் சுவாரசியமாக இருந்தது. பிறகு ஒரு பெண் பதிவரின் இடுகை படிக்கக் கிடைத்தது. அதில் அவர் கிள்ளிப்போட்ட சாம்பார் கதையை எழுதியிருந்தார். (அவர் பெயரை மறந்துவிட்டேன் மன்னிக்கவும்)அதைப் படித்தவுடன் நமக்குத்தான் இது போல கதையெல்லாம் நல்லாத் தெரியுமேன்னு நாமளும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சா என்னன்னு தோணுச்சு. ஒரு மூணு இடுகைக்கான மேட்டரை டைப் பண்ணி என் மகனிடம் காட்டினேன். நல்லாயிருந்தா நான் ப்ளாக் ஆரம்பிக்கிறேன். இல்லன்னு சொன்னேன்னா ப்ளாக்கே வேணாம். அவனும் படிச்சுட்டு நல்லாயிருக்கு. உனக்கு ப்ளாக் ஆரம்பிக்க எல்லாத் தகுதியும் இருக்குன்னு சர்ட்டிபிகேட் கொடுத்துட்டான். உடனே ஒரு ப்ளாக்கும் ஆரம்பிச்சுக் கொடுத்துட்டான். இதெல்லாம் ஒரு பத்து நாட்களுக்குள் நடந்தது. என் ப்ளாக் அக்டோபர் 20ம் தேதி துவங்கியுள்ளேன். இன்னும் நாலு நாள் இருக்கு. அட்வான்ஸ் பிறந்த நாள்.<br />
<br />
அப்பறம் ஒருஒரு இடுகையையும் போட்டுவிட்டு யாராவது படிப்பார்களா என்று எதிர்பார்ப்பதெல்லாம் உங்கள் அனைவருக்கும் நேர்ந்த கதையாகத்தான் இருக்கும். பிறகு அடுத்தவருக்கு நாம் ஓட்டும் பின்னூட்டமும் போட்டால்தான் நமக்கும் அது கிடைக்கும் என்ற ப்ளாக் உலக அரசியல் எல்லாம் என் மகன்தான் எனக்கு சொல்லித்தந்தான்.<br />
<br />
அப்பறம் காட்சியில இருந்து அஞ்சல் தலை பகுதிக்கு எழுதுமாறு கேட்டார்கள். நானும் எழுதி அனுப்பினேன். போடுவார்களோ என்னமோன்னு தயக்கத்தோடேயே அனுப்பினேன். அவர்கள் இரண்டு நாட்களில் போடுவதாக மெயில் அனுப்பியிருந்தார்கள். பிறகு பார்த்தால் அடுத்த நாளே போட்டுவிட்டார்கள். தந்தையர் தினம் என்பதால் என் கடிதம் பொருத்தமாக அமைந்ததால் போட்டுவிட்டார்கள் போலும். பிறகு பெண்ணியம் ப்ளாக்கிலும் என் இடுகைகளை எடுத்துப்போட்டார்கள். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. நம்மளாலயும் எழுத முடியும்னு இதுக்கு முன்னால நான் நெனச்சதே இல்ல. பெண்ணியத்தில் நிறைய திறமைசாளிகளின் படைப்புகளை போடுகிறார்கள். அதில் என்னுடையதும் வந்தது எனக்கு அளவில்லா சந்தோஷத்தைக் கொடுத்தது. அவர்கள் இருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை ஓட்டுப்போட்டு பின்னூட்டம்போட்டு ஊக்குவிக்கும் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com34tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-74802678539830634242010-10-14T13:20:00.000+05:302010-10-14T13:20:04.167+05:30பதிவுலக சண்டைகள் விளைவு<div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><span class="Apple-style-span" style="color: red;">மக்களே இந்தப் பதிவு வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது.</span></div><div class="separator" style="clear: both; text-align: center;"><span class="Apple-style-span" style="color: red;"><br />
</span></div><div class="separator" style="clear: both; text-align: center;"><span class="Apple-style-span" style="color: red;"><br />
</span></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjU5hssLilZ1CnM0hSiJdTxmVenSy78u4wdFarOwKYfUoK9e3-tDqMpe5KRewM6PjTIXa_q_s-9kVpU0WW9_ARKtOMiLXpmV-NaEzOwVu96-TkIMqNjrcXjclw9nR3m5XfkXU8Lm79IgwNl/s1600/cartoon.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="232" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjU5hssLilZ1CnM0hSiJdTxmVenSy78u4wdFarOwKYfUoK9e3-tDqMpe5KRewM6PjTIXa_q_s-9kVpU0WW9_ARKtOMiLXpmV-NaEzOwVu96-TkIMqNjrcXjclw9nR3m5XfkXU8Lm79IgwNl/s320/cartoon.gif" width="320" /></a></div><span class="Apple-style-span" style="color: red;"><br />
<span class="Apple-style-span" style="color: black;"><b><br />
</b></span></span><br />
<b>டாக்டர்:</b> என்னாச்சு<br />
<b>பெண்:</b> டாக்டர் கம்ப்யூட்டர்ல ஏதோ ப்ளாக்காம் அதுல ஏதோ சண்டை நடந்துக்கிட்டிருந்துச்சாம். அதைப் படிச்சதலிருந்து இப்படி பித்து பிடிச்ச மாதிரி ஆகிட்டாரு டாக்டர்.<br />
<br />
<br />
<div style="text-align: center;">---------------------</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBd8m7XnB_F_rZbNBQEZy4JE8uRPqBEI6Mw7FneCKqo2GDmfKPoumbhgkXscA7zzJWWudfWZCGxhIV91IkcrKQPL6TNcaA7eYqk73AuWadBlmsgmDQqQnb1KM6HFUmuuRNLvNRkvFS3NPl/s1600/cartoon2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="236" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBd8m7XnB_F_rZbNBQEZy4JE8uRPqBEI6Mw7FneCKqo2GDmfKPoumbhgkXscA7zzJWWudfWZCGxhIV91IkcrKQPL6TNcaA7eYqk73AuWadBlmsgmDQqQnb1KM6HFUmuuRNLvNRkvFS3NPl/s320/cartoon2.jpg" width="320" /></a></div><br />
<br />
<b>பிரபல பதிவர்:</b> இங்க பாருங்க நீங்க புது பதிவரா இருக்கலாம். புதுசுன்றதால நடக்குற சண்டையோட லிங்குங்க சரியா புரிய மாட்டேங்குது. அதுனால தினமும் எனக்கு கொஞ்சம் சண்ட நடக்குற லிங்குகள என்னோட மெயிலுக்கு அனுப்புங்கன்னு சொல்றது கொஞ்சம்கூட நல்லாயில்ல சொல்லிட்டேன்.<br />
<br />
<br />
<br />
<div style="text-align: center;">----------------------</div><div style="text-align: center;"><br />
</div><b><div class="separator" style="clear: both; text-align: center;"></div><b><br />
</b><br />
வக்கீல்:</b> ஏங்க உங்க மனைவிய டைவர்ஸ் பண்ணனும்னு சொல்றீங்க?<br />
<b>ஆண்:</b> பின்ன என்னங்க கம்ப்யூட்டர் முன்னால உங்காந்தவ எந்திரிச்சே வர மாட்டேங்கறா. ப்ளாக்ல ஏதோ சண்டையாம். அது இப்ப முடிஞ்சுரும் அது முடிஞ்சவுடனே வந்து சாப்பாடு போடறேன்னு சொல்றா.<br />
<b>வக்கீல்:</b> ஏங்க ஒரு நாளைக்கு கொஞ்சம் லேட்டா சாப்பிட்டாத்தான் என்ன?<br />
<b>ஆண்:</b> நீங்க வேற சார். அவ ஒரு மாசமா கம்ப்யூட்டர் முன்னாலேயேதான் உட்காந்திருக்கா. நான் வீட்டுல சாப்பிட்டு ஒரு மாசமாச்சு.<br />
<br />
<br />
<br />
<div style="text-align: center;">----------------------</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_w9TlYAaGI65oawpNE4OQcJaCvudv9tVyjIoTtV4vpATv0ftD2SprWAsmiPD-zfPLSBxFH3wBKvzIo5mxQmI5hKp3hKKZYJzE18dw-pMZwey0_fKsnFQmKMpVaZ1YJlNZxmDW2Lp563LV/s1600/cartoon+1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="221" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_w9TlYAaGI65oawpNE4OQcJaCvudv9tVyjIoTtV4vpATv0ftD2SprWAsmiPD-zfPLSBxFH3wBKvzIo5mxQmI5hKp3hKKZYJzE18dw-pMZwey0_fKsnFQmKMpVaZ1YJlNZxmDW2Lp563LV/s320/cartoon+1.jpg" width="320" /></a></div><div style="text-align: center;"><br />
</div><b>கூகுல் மேனேஜர்:</b> நல்லாத்தான போய்க்கிட்டிருந்துச்சு. திடீர்னு ஏன் தமிழ்நாட்டுல ஒட்டுமொத்தமா எல்லாரும் சாட் பண்ணறதையே நிறுத்திட்டாங்க?<br />
<b>என்ஜினியர்:</b> ஏதோ ப்ளாக்குல சண்டையாம் சார். அதுனால எல்லா சாட்டையும் பப்ளிக்கா ப்ளாக்ல போட்டுட்டாங்களாம். அதுனால யாருமே சாட் பண்றதில்ல. இ மெயில் அனுப்பறதுகூட குறைஞ்சுக்கிட்டே வருது சார்.<br />
<b>மேனேஜர்:</b> நீ உடனே போயி எப்டியாவது சண்டைய நிறுத்திட்டுவா. உனக்கு ப்ரமோஷனும் இன்கிரிமென்டும் தர்றேன்.<br />
<b>என்ஜினியர்:</b> சண்டைக்கு உள்ள போனே வெளியவே வர முடியாது. இந்த வேலையே எனக்கு வேண்டாம் சார் வேலைய ரிசைன் பண்றேன். <br />
<br />
<br />
<br />
<div style="text-align: center;">-------------------</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9y7SkKeBE4V6uNeA8RPfVaEamFZsKW9STuxO9im94L1o_iaqRWP1lVIHQwY32BDp1XRfnTMkTaXL_0MSxj6DvmhHebJAPSeNYU6Iu-gZLAtd7rQRzs93j_tpX6RHM_D24no8ubWGUr4sE/s1600/jokes.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9y7SkKeBE4V6uNeA8RPfVaEamFZsKW9STuxO9im94L1o_iaqRWP1lVIHQwY32BDp1XRfnTMkTaXL_0MSxj6DvmhHebJAPSeNYU6Iu-gZLAtd7rQRzs93j_tpX6RHM_D24no8ubWGUr4sE/s320/jokes.jpg" width="320" /></a></div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">-------------------------</div><div style="text-align: center;"><br />
</div><b>டிஸ்கி:</b> மக்களே திரும்பவும் சொல்கிறேன். இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட பதிவு. இங்கே நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எழுதவில்லை. நான் எல்லோரையும் நண்பர்களாகவே நினைக்கிறேன். எனது நினைப்பு எப்படியாவது இந்த சண்டை நிற்காதா என்பது மட்டுமே.ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com47tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-11631469952555412752010-10-08T13:24:00.000+05:302010-10-08T13:24:48.816+05:30புதிய பொருளாதாரக் கொள்கையும் கலாச்சார சீரழிவும்<span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px;"><br />
</span></span>தோள்ல கை போடுறாங்கடா, அப்புறம் ஏதோ கடாமுடா நடக்குது. அப்புறம் குழந்தை பொறக்குது.<br />
8ம் வகுப்பு அல்லது 9ம் வகுப்பு படிப்பார்கள் அந்தச் சிறுவர்கள் பேசிக்கொண்டே என்னை தாண்டி சென்றுவிட்டனர். இந்த வயதில் எல்லோருக்கும் வரும் இயல்பான சந்தேகங்கள். ஆண் பிள்ளைகள் வெளிப்படையாக பேசிக்கொள்வார்கள். பெண் பிள்ளைகள் வெளிப்படையாக பேசுவது இல்லை.<br />
<br />
புதிய பொருளாதாரக்கொள்கை என்ற பூதம் உள்நுழைவதற்கு முன்பு செக்ஸ் சம்பந்தமான விஷயங்களை தெரிந்துகொள்வதற்கு செக்ஸ் புத்தகங்கள் மற்றும் பிட்டு படம்ன்னு சொல்வாங்களே (பிட்டு படம் என்பது கூட இப்போது அனைத்து படங்களிலும் பேசப்படுவதால் தெரிகிறது) அதுமட்டும்தான்னு நெனைக்கிறேன். அதுவும் தேடிப்போக வேண்டும். எனவே அதிக முனைப்புள்ள பிள்ளைகள் மட்டுமே அதைத்தேடிப் போவார்கள். சில பிள்ளைகள் நாம் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற நினைப்போடு இருப்பார்கள். அவர்கள் இந்தப்பக்கமே போக மாட்டார்கள். சில பிள்ளைகள் இந்தப்பக்கமா அந்தப்பக்கமா என்று தடுமாடுவார்கள். அவர்களைத்தான் இரண்டும்கெட்டான் என்பது. இவர்கள் எந்தப்பிள்ளைகளுடன் சேர்கிறார்களோ அதைப்பொருத்தே இவர்கள் பழக்க வழக்கம் அமையும். அதனால் பெற்றோர்கள் அவர்கள் பிள்ளைகளின் நண்பர்களை கண்கொத்திப்பாம்பாக கண்காணிப்பார்கள். இதெல்லாம் அந்தக்காலம்.<br />
<br />
இப்போது நம் வீட்டு நடுக்கூடத்திற்கே டிவி மூலமாக அனைத்தும் வந்துவிழுகிறது. இன்டர்நெட்டைத் திறந்தால் கேட்கவே வேண்டாம். இப்போ உள்ள குழந்தைகளை தரம் பிரிக்க முடியுமா? அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் முன்னே வந்து விழுகிறது. உண்மையிலேயே அவர்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.<br />
<br />
எல்லாம் புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவுகள் நாம் அனுபவித்துத்தானே ஆக வேண்டும். கொஞ்ச நாளைக்கு முன்னால் நெசவாளிகள் கஞ்சித் தொட்டி வைத்து கஞ்சி வாங்கிக்குடிக்கும் நிலைமைக்கு ஆளானார்கள். தேயிலைத் தொழிலாளர்கள் நிலைமை அதைவிட மோசமாக இருந்தது. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதும், எலிக்கறி தின்றதும். இப்போது நாம் அனைத்தையும் மறந்துவிட்டோம். நமக்குத்தான் வரிசையில் நின்று மொட்டைபோட்டுக்கொள்ளுவதும் படத்தை பார்ப்பதும் என்று மிகப்பெரிய பொருப்புகள் இருக்கிறதே.<br />
<br />
அதனால் விளைந்த நன்மைகள்னு பாத்தா சில லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. அதுவும் அவர்களின் வால்களாக பின்னாலேயே வந்துள்ளவர்கள் அவர்கள் சம்பளத்தையும் பிடிங்கிக்கொள்வார்கள். எப்படின்னு கேட்குறீங்களா? ஐடி கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் நன்றாக டிரஸ் செய்து கொள்ள வேண்டும் அல்லவா அதற்காக பன்னாட்டுக்கம்பெனிகள் துணிக்கடைகளை இங்கே திறந்துள்ளன அல்லவா? அவற்றில் ஒரு சட்டையின் விலை 2000. வாட்ச் 4000, 5000 இன்னும் அதிகமாகவும் உள்ளது. நான் சொல்வது மீடியம் விலைகள். ஷீ போட்டுக்கொள்ள வேண்டும் அல்லவா? அதுவும் 4000, 5000. அப்புறம் ஆக்சி சென்ட் இந்த மாதிரி சில சில்லறைகள். அப்புறம் சாப்பிட ஃபீஸா. ஒரு வேலை சாப்பாடே 500, 1000ன்னு ஓடும். அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை எப்படி அவர்களே பிடுங்கிக்கொள்கிறார்கள் பார்த்தீர்களா?<br />
<br />
அப்புறம் சென்னை போன்ற பெருநகரங்களில்தான் சாஃப்ட்வேர் கம்பெனிகள் இருப்பதால் அவர்கள் வீட்டைவிட்டு இங்கே வந்து இருக்க வேண்டும். அவர்களுக்கு சம்பளம் அதிகம் என்றவுடன் வாடகைக்கு விடும் ஹவுஸ் ஓனர்கள் வாடகையை கன்னாபின்னாவென்று ஏற்றிவிடுகின்றனர். இதெல்லாம்போக அவர்கள் வீட்டு கமிட்மென்டுக்கு பணம் அனுப்ப வேண்டும்.<br />
<br />
இதற்கு நடுவில் ரியல் எஸ்டேட்காரர்கள் இந்தியாவையே சாஃப்ட்வேர் மக்கள்தான் வாங்கிக்கொள்வதுபோலவும் மற்றவர்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டும் போலவும் நிலத்தின் மதிப்பை தங்கள் இஷ்டத்திற்கு ஏற்றிக்கொண்டனர்.<br />
<br />
பன்னாட்டு கம்பெனிக்காரன் சொல்லிக்கொடுப்பதுபோல் உடை அணிகிறார்கள். சாப்பிடுகிறார்கள். கம்பெனிக்காரனுக்கு வேலை நடக்க வேண்டும் என்பதற்காக சனிக்கிழமை இரவுகளில் இவர்களை ரிலாக்ஸ் பண்ணுகிறேன் என்று குடிக்க டான்ஸ் ஆட எல்லாம் கற்றுக்கொடுக்கிறான். அவனுக்கு நமது கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அவன் சம்பாதிக்க வருகிறான். இவர்களை எப்படியெல்லாம் வேலை வாங்க வேண்டும் என்று தெரிந்து அதன்படி வேலை வாங்குகிறான். அதாவது ஆடுகிற மாட்டை ஆடிக்கறப்பது பாடுகிற மாட்டை பாடிக்கறப்பது. நம் நாட்டை ஆள்கிற நமது ஆள்களுக்கே நமது கலாச்சாரத்தைப்பற்றி கவலையில்லாதபோது அவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்.<br />
<br />
சாஃப்ட்வேர் பியுபிள்தான் நமது கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள் என்று அடுத்த பலி. நாம் நமது பிள்ளைகளை எப்படி வளர்க்கிறோம். பணம் சம்பாதிக்கும் மெஷின்களாக. சிறு வயதில் இருந்தே காலையில் எழுத்து பள்ளிக்குச் செல்ல வேண்டும். சாயங்காலம் வந்தவுடன் ஏதாவது கொறித்துவிட்டு டியூஷனுக்கு ஓட வேண்டும். சில பிள்ளைகள் தின்னக்கூட முடியாதபடி ஸ்கூல் அருகிலேயே டியூஷன் என்று அப்படியே படித்துவிட்டு வருவார்கள். 8 மணி 9 மணிக்கு வீட்டுக்கு வந்து அதன்பிறகு ஹோம் ஒர்க் செய்துவிட்டு படுக்க வேண்டும். ஒரு குழந்தையின் ரொடீன் ஒர்க் இதுதான். அவன் கல்லூரி படிப்பு முடிக்கிறவரை. அவனுக்கு தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாது. நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியாது. படிப்பு படிப்பு மட்டுமே தெரியும். சரி பள்ளியிலாவது நமது வாழ்க்கைமுறை நாட்டு நிலைமை பற்றியெல்லாம் சொல்லித்தருகிறார்களா என்று பார்த்தால், அங்கே புத்தகத்தை மனப்பாடம் பண்ணி பரிட்சையில் வாந்தி எடுக்கத்தான் சொல்லித்தருகிறார்கள்.<br />
<br />
படிப்பு முடிந்ததும் நேராக பன்னாட்டு கம்பெனிக்கு வேலைக்குப் போகிறான். அவன் சொல்லித்தருவதுதான் சரியான வாழ்க்கை முறை என்று நினைக்கிறான். அதைப் பின்பற்றுகிறான். அவனது நிலைமைப் பாருங்கள் உலக்கைக்கு ஒருபக்கம் இடின்னா மத்தளத்துக்கு ரெண்டுபக்கமும் இடிங்கற மாதிரி, அவன் கம்பெனிக்காரன் சொல்ற மாதிரி வாழ்க்கைமுறையை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றால் அங்கே அவன் வித்தியாசமாக பார்க்கப்படுவான். அதன்படி நடந்தால் நமது மக்களால் சாஃப்ட்வேர் மக்கள்தான் கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள் என்று போடும் கூப்பாட்டையும் எதிர்கொள்ள வேண்டும். இதுல வேடிக்கை என்னன்னா பெண்களை மட்டும் டான்ஸ் ஆடக்கூடாது என்று தூக்கிப்போட்டு மிதிப்பார்கள். அவர்களும் இதேமுறையில் படித்து வந்தவர்கள்தானே. அவர்கள் தனியாக வானத்தில் இருந்து குதித்துவிடவில்லையே. அவர்களை மட்டும் தண்டிப்பது ஏன்?<br />
<br />
புதிய பொருளாதாரக்கொள்கை வருவதற்கு முன்னாலேயே கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தலையால் அடித்துக்கொண்டார்கள். கலாச்சார சீரழிவு ஏற்படும் அதனால கதவை திறந்துவிடும்போது உள்ளே என்ன என்ன நுழைகிறது என்று பார்த்து ஜாக்கிரதையாக அனுமதியுங்கள். உள்ளே வருபவற்றின் குடுமியும் உங்கள் கைகளில் இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அவர்கள் ஒன்று வெளிநாட்டுக்கம்பெனிகளே வரக்கூடாது என்று சொல்லவில்லை. வருவதை கட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள் என்றுதான் சொன்னார்கள். உடனே நம் ஆட்கள் கம்யூனிஸ்ட்கள் பிற்போக்குவாதிகள். நாட்டை வளர்ச்சிப்பாதையில் செல்லவிடாமல் பின்னால் பிடித்து இழுப்பவர்கள் என்று கிளப்பிவிட்டார்கள். இன்றுவரை அந்த வரி மட்டுமே எல்லோராலும் பேசப்படுகிறது. உண்மையை ஏன் யாரும் உணரவில்லை என்று தெரியவில்லை.<br />
<br />
அப்போதே அரசாங்கம் எங்கள் பிள்ளைகளை ஸ்டார் ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று குடி, டான்ஸ் போன்ற விஷயங்களில் ஈடுபடுத்தக்கூடாது என்று அவர்களைத்தானே தடுத்திருக்க வேண்டும். உள்ளே நுழைபவற்றிலும் நம் கலாச்சாரத்திற்கு எதிரானவற்றை அங்கேயே தடுத்திருக்க வேண்டும்தானே. நல்லா இரண்டு கதவையும் விரியத் திறந்துவைத்துவிட்டு இப்போது பெண்களால்தான் கலாச்சாரம் சீரழிகிறது என்று பெண்களை பிடித்து அடித்து தங்கள் வீரத்தைக்காட்டிக்கொள்பவர்கள், மற்றும் பெண்களால் மட்டும்தான் கலாச்சாரம் சீரழிகிறது என்று பேசுபவர்கள் பன்னாட்டு கம்பெனிக்காரர்களையோ அல்லது ஸ்டார் ஹோட்டல்க்காரர்களையோ அடித்து தங்கள் வீரத்தைக் காட்ட வேண்டியதுதானே.<br />
<br />
கல்யாணம் ஆனவுடன் சின்னச்சின்னப் பிரச்சனைகளுக்கெல்லாம் ஈகோ பிரச்சனை வந்து டைவர்சுக்கு செல்கிறார்கள். பெற்றோர்களால் எடுத்துச்சொல்ல முடியவில்லை. சிறிய வயதில் பணம் சம்பாதிக்கும் மிஷினாக வளர்த்துவிட்டு இப்போது புத்திசொன்னால் எடுபடுமா? பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி அதிகமாக இருக்கிறது.<br />
<br />
அடுத்து இந்த குடி. அதைத்தான் கவர்ன்மென்டே ஆதரிக்கிறதே. முன்பெல்லாம் குடித்தால் கேவலம் என்ற ஒரு எண்ணம் குடிப்பவர்களுக்கும் இருந்தது. அதனால் வெளியில் தெரியாமல் குடிப்பார்கள். குடிக்கிறார்கள் என்றால் அவர்களை மதிக்கவே மாட்டார்கள். அவங்கெடக்குறான் குடிகாரன் என்று சொல்வார்கள். எம்ஜிஆர் அவர்கள் அவர் படத்தில் குடிப்பதுபோலவோ சிகரெட் குடிப்பதுபோலவே நடிக்க மாட்டாராம். அப்படி நடித்தால் தன்னுடைய ரசிகர்கள் அதைப்பின்பற்றக்கூடும் என்ற சமூக அக்கறை. என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் இரண்டு பேரும் பாட்டு டான்ஸ் மூலம் குடியினால் ஏற்படும் விளைவுகளை விளக்கி பாடுவார்கள். வள்ளுவர் கள்ளுண்ணாமை அதிகாரத்தையே வைத்திருக்கிறார். சங்க இலக்கியங்களும் மது அருந்தக்கூடாது என்றே சொல்லுகிறது. ஆனால் இப்போது குடிப்பது ஏதோ கவுரவம்போல் ஆகிவிட்டது. நமது கலாச்சாரமே குடிப்பதுதான் என்பது போலவும் மாறிவிடும் என்று தோன்றுகிறது. நல்ல தரமான படங்கள்கூட இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக நாயகர்கள் குடிப்பார்கள். நம்ம ப்ளாக்கில்கூட அதுஒரு சாதாரண நிகழ்வுபோல பேசப்படுகிறது. இதை எல்லாம் பார்க்கும்போது இன்னும் இந்தக்குடியை நாடாமல் இருக்கும் ஒருசிலரையும் மாற்றிவிடுமோ என்ற பதைப்பு என்னுள் வரும்.<br />
<br />
பஸ்சில் வரும்போது டாஸ்மாக் கடை இருந்தால் திரும்பிப்பார்ப்பேன். டீசன்டாக இருப்பவர்கள்கூட நிறைய பேர் நின்று வாங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எந்த கூச்ச உணர்வும் இருக்காது. அதைப்பார்க்கும்போது இனி வரும் தலைமுறை உடலில் ரத்தத்திற்குப் பதிலாக ஆல்கஹால் ஓடுமோ என்ற சந்தேகம் வரும். இந்த கலாச்சார சீரழிவிற்காக எந்த ஆணும் அடி வாங்கவில்லை. கலாச்சார சீரழிவு என்றால் பெண்களை மட்டும் எப்போதும் அடித்துக்கொண்டிருப்போம். அது எதனால் நடக்கிறது என்றெல்லாம் யோசிக்க மாட்டோம். பெண்களை அடிப்பதுதானே ஈஸி அவர்கள் திருப்பி அடிக்கும்வரை.<br />
<br />
<b>டிஸ்கி:</b> எங்கள் வீட்டில் ஆஷ் டிரே இல்லை. குடிப்பவர்களும் இல்லை. நாங்கள் இன்னும் பழங்காலத்திலேயே இருக்கிறோமோ? கலாச்சாரத்தை மதிக்கவில்லையோ?ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com25tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-10731568197942632222010-10-05T12:32:00.000+05:302010-10-05T12:32:31.783+05:30இந்த ஏழை சிறுமியின் வாழ்வில் ஒளியேற்ற உதவுங்கள்...<div style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 23px; text-align: justify;"><span style="font-family: Arial, serif; line-height: 19px;">நான் கே.ஆர்.பி.செந்தில் அவர்களின் வலைப்பூவில் இருந்து எடுத்துப்போட்டுள்ளேன்.<br />
</span></div><div style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 23px; text-align: justify;"><div style="text-align: center;"><span class="Apple-style-span" style="font-family: Arial, serif; line-height: 19px;">-----------</span></div><span style="font-family: Arial, serif; line-height: 19px;"><br />
</span></div><div style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 23px; text-align: justify;"><span style="font-family: Arial, serif; line-height: 19px;">நம் கேபிள் சங்கர் தன்னுடைய வலைபக்கத்தில் இந்த சிறுமிக்கு உதவி தேவைப்படுகிறதாக எழுதியிருந்தார். அதனைப் பார்த்த சில நல்ல உள்ளங்கள் உதவ முன் வந்துள்ளன. ஆனால் தேவைப்படும் தொகை பெரிது என்பதால் உங்கள் அனைவரின் உதவியும் தேவைபடுகிறது. எனவே தயவு செய்து உங்களால் ஆன சிறிய உதவியையும் தயங்காது செய்யுங்கள்..</span></div><div style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 23px; text-align: justify;"><span style="font-family: Arial, serif; line-height: 19px;"><br />
</span></div><div style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 23px; text-align: justify;"><span style="font-family: Arial, serif; line-height: 19px;"><a href="http://cablesankar.blogspot.com/2010/09/250910.html" style="color: #cc3300; text-decoration: none;"><b><span class="Apple-style-span" style="color: #990000;">கேபிள் சங்கர்</span><span class="Apple-style-span" style="color: #990000;"> </span></b></a> இந்த சிறுமியின் விபரங்களை தந்திருக்கிறார்...</span></div><div style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 23px; text-align: justify;"><span style="font-family: Arial, serif; line-height: 19px;"><br />
</span></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEylwLXDpkhhyphenhyphenIGqiFCBxDU4pSJFyYE9FXyX8LsPa2jhadCXR-hyAWGsc_nw9v_R3rQxNzScBLsitpOPDe_HF6MHGf4ZlzvqsvTNZrmquyWLAxcbrcCMubQpWQBZNPliNY8MniDg6lW2NK/s1600/priyaphoto_thumb3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEylwLXDpkhhyphenhyphenIGqiFCBxDU4pSJFyYE9FXyX8LsPa2jhadCXR-hyAWGsc_nw9v_R3rQxNzScBLsitpOPDe_HF6MHGf4ZlzvqsvTNZrmquyWLAxcbrcCMubQpWQBZNPliNY8MniDg6lW2NK/s1600/priyaphoto_thumb3.jpg" /></a></div><div style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 23px; text-align: justify;"><span style="font-family: Arial, serif; line-height: 19px;"><br />
</span></div><div style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 23px; text-align: justify;"><span style="font-family: Arial, serif; line-height: 19px;"><br />
</span></div><div style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 23px; text-align: justify;">இந்த குழந்தைக்கு வயது ஒன்பது. இவள் பெயர் ப்ரியா இவளுக்கு பிறந்ததிலிருந்து சரியாக காது கேட்டதில்லை. இவளுடய மாமா என்னுடன் பணியாற்றும் உதவி இயக்குனர். அவர் பெயர் கணேசன். ப்ரியா ஒரு மாற்று திறனாளிகள் பள்ளியில் படித்து வருகிறாள். இவளுக்கு <strong>Cochlear Implantation</strong> <strong>Surgery</strong> செய்தால் நிச்சயம் கேட்கும் திறன் வந்துவிடும் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான எலலா மருத்துவ சான்றிதழ்களையும், மருத்துவர்கள் பரிந்துரைகளையும் பார்த்தேன். இக்குழந்தைக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்குள் இந்த அறுவை சிகிச்சையை செய்யாவிட்டால் பின்பு <strong>எப்போதுமே செய்ய முடியாது</strong>என்று சொல்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட ரூபாய் <strong>ஒன்பது லட்சம்</strong>. இவர்கள் முதல்வர் செல்லுக்கும் உதவி கோரியிருக்கிறார்கள். நாமும் நம் பங்கிற்கு உதவலாமே என்ற எண்ணத்தில் உங்களின் பார்வைக்கு வைத்திருக்கிறேன். எவ்வளவோ நல்ல காரியங்களுக்கு நம் பதிவுலகம் முன்னுதாரணமாய் இருந்திருக்கிறது. மேலும் இக்குழந்தையின் மருத்துவ சான்றிதழ்கள், மருத்துவர்களின் பரிந்துரை வேண்டுவோர்கள் கேபிள் சங்கரின் தொலைபேசி எண்ணிலோ.. அல்லது அவரது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம். உங்கள் உதவியால் ஒலி பெறப் போகும் ஒரு சிறுமிக்காக..</div><div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"><span style="font-family: Arial, serif; line-height: 19px;"><br />
</span></div><div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"><span style="font-family: Arial, serif; line-height: 19px;">அவருடைய வங்கி கணக்கு எண் கீழே தந்துள்ளேன்... அந்த வங்கி கணக்குக்கும் பணம் அனுப்பலாம்.. பணம் அனுப்பியவர்கள் தங்கள் பணம் அனுப்பிய விபரங்களை அவருக்கு மின்னஞ்சலாகவும் அனுப்புங்கள். இது பின்னால் கணக்குகளை சரிபார்க்க எங்களுக்கு உதவும்..</span></div><div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"><span style="font-family: Arial, serif; line-height: 19px;"><br />
</span></div><div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"><span style="font-family: Arial, serif; line-height: 19px;">மேலும் இந்த பதிவினை உங்கள் வலைபக்கத்தில் ஒரு நாள் பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை மின்னஞ்சலாக உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களையும் உதவி செய்ய சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். </span></div><div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"><span style="font-family: Arial, serif; line-height: 19px;"><br />
</span></div><div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"><span style="font-family: Arial, serif; line-height: 19px;">கேபிளின் மின்னஞ்சல் முகவரி ...</span></div><div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"><span class="Apple-style-span" style="font-family: Arial, serif; line-height: 17px;"><a href="mailto:sankara4@gmail.com" style="color: #cc3300; text-decoration: none;" target="_blank">sankara4@gmail.com</a></span></div><div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"><span style="font-family: Arial, serif; line-height: 19px;"><span style="line-height: 17px;"><a href="mailto:sankara4@gmail.com" style="color: #cc3300; text-decoration: none;" target="_blank"></a> </span></span></div><div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"><span style="font-family: Arial, serif; line-height: 19px;"><span style="line-height: 17px;">அவரிடம் பேச: 9840332666</span></span></div><div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"><span style="font-family: Arial, serif; line-height: 19px;"><span style="line-height: 17px;"><br />
</span></span></div><div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"><span style="font-family: Arial, serif; line-height: 19px;"><span style="line-height: 17px;">வங்கி கணக்கு விபரம் :</span></span></div><div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"><span style="font-family: Arial, serif; line-height: 19px;"><span style="line-height: 17px;">A/C NAME : SANWAS INFOTECH</span></span></div><div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"><span style="font-family: Arial, serif; line-height: 19px;"><span style="line-height: 17px;">A/C NO : 0077 0501 0890</span></span></div><div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"><span style="font-family: Arial, serif; line-height: 19px;"><span style="line-height: 17px;">ICICI BANK, ASHOK NAGAR BRANCH </span></span></div><div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"><span style="font-family: Arial, serif; line-height: 19px;"><span style="line-height: 17px;"><span class="Apple-style-span" style="line-height: 19px;">வளரும் பிஞ்சுக்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள்.</span></span></span></div><div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"><span style="font-family: Arial, serif; line-height: 19px;"><span style="line-height: 17px;"><span class="Apple-style-span" style="line-height: 19px;"><br />
</span></span></span></div><div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"><span style="font-family: Arial, serif; line-height: 19px;"><span style="line-height: 17px;"><span class="Apple-style-span" style="line-height: 19px;"><b>டிஸ்கி:</b> 10 நாட்களாக ப்ளாக் பக்கம் சரியாக வர முடியவில்லை. நண்பர்களின் வலைப்பூக்களை படித்து பின்னூட்டமிட முடியவில்லை. என்னுடை ப்ளாக் பின்னூட்டங்களுக்கே நன்றி சொல்ல முடியவில்லை. மன்னித்துக்கொள்ளுங்கள். அடுத்த வாரம் வந்துவிடுவேன்.</span></span></span></div><div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"><span style="font-family: Arial, serif; line-height: 19px;"><br />
</span></div>ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-78398132129101394072010-09-29T12:00:00.000+05:302010-09-29T12:00:49.530+05:30வலைப்பூ அறிமுகம்<span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px;"><br />
</span></span>போன இடுகையின் தொடர்ச்சி என்று கொள்ளலாம். சில வலைத்தளங்களை படிக்கும்போது இதை எல்லோரும் படித்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும் அந்த மாதிரி தோன்றிய ஒரு மூன்று வலைத்தளங்களை அறிமுகம் செய்யலாம் என்று நினைக்கிறேன். இலக்கியம் ஒன்று விவசாயம் ஒன்று விஞ்ஞானம் ஒன்று.<br />
<br />
<span class="Apple-style-span" style="font-size: x-large;"><a href="http://azhiyasudargal.blogspot.com/">அழியாச் சுடர்கள்</a></span><br />
<br />
பொருத்தமான பெயர் வைத்துள்ளார் இந்த ப்ளாக்கர். இந்த ப்ளாக்கை உருவாக்கியிருக்கும் விதமே நன்றாக இருக்கிறது. மேலே வயதில் முதிர்ந்த எழுத்தாளர்களின் படங்கள். அதன் கீழே எழுத்தாளர்களின் பெயர்களினாலான லேபிள். அதை க்ளிக் பண்ணினால் அவர்களின் கதைகளை படிக்கலாம். சாம்பிள் பேக் என்று சொல்வார்களே அதைப்போல் பெரிய பெரிய எழுத்தாளர்களின் சில கதைகளை தொகுத்தளித்துள்ளார். மிகவும் சிறப்பான பணி இவருடையது.<br />
<br />
செ.யோகநாதன் என்ற இலங்கை எழுத்தாளருடைய சிறுகதை தொகுப்பு ஒன்றை படித்தேன். அதன் கதைக்களம் 70வதா 80தா என்று தெரியவில்லை. அந்தப்புத்தகம் படிக்கும்போது இலங்கைத் தமிழ் பாதி எனக்கு புரியவில்லை. படிக்கும்போதே அந்த சூழ்நிலையை வைத்து அதன் அர்த்தத்தை நானாக புரிந்துகொண்டேன். முதல் இரண்டு சிறுகதைகளின்போதுதான் இந்தப் பிரச்சனை பிறகு சரியாகிவிட்டது. அந்த ஒவ்வொரு கதையும் கொடுத்த உணர்வு இருக்கிறதே. சொல்ல முடியாது. அங்குள்ள தமிழ்க்குடும்பங்கள் படும்பாடுதான் கதைக்களம். அப்போதுதான் விடுதலைப்புலிகள் உருவாகிக்கொண்டிருக்கும் நேரம் என்று நினைக்கிறேன். அந்த சிறுகதை தொகுதியை படித்துவிட்டு நீண்ட நாட்கள் நிம்மதியில்லாமல் இருந்தேன். கட்டுரைகளோ, புகைப்படங்களோ கொடுக்க முடியாத உணர்வுகளை இலக்கியம் கொடுக்கும். நம்மை அதிர வைக்கும். பிறகு எனக்கு பிரபாகரனை புத்தகத்திலோ டிவியிலோ பார்த்தால் எனக்கு ரியல் ஹீரோவாகத்தான் தெரிவார். அங்குள்ள மக்களுக்கு காவலனாக தெரிந்தார்.<br />
<br />
சிறந்த மனிதர் இலக்கியத்தின் மூலம் புரட்சியையும் உருவாக்க முடியும். சக்திவாய்ந்த ஆயுதம் இலக்கியம்.<br />
<br />
<span class="Apple-style-span" style="font-size: x-large;"><a href="http://vaigai.wordpress.com/">சின்னச் சின்ன கோபங்கள்</a></span><br />
<br />
தங்கபாண்டியன் என்பரது வலைப்பூ இது. பதிவர் ஜானகிராமன் மூலம் எனக்கு அறிமுகமானார். இவரது <a href="http://vaigai.wordpress.com/2010/09/20/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/">சாயம் போகும் நதிகள்</a> அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நதிகளின் இன்றைய நிலைமையை எடுத்துச்சொல்லி உள்ளார். மனித வாழ்வுக்கு நீர்தான் ஆதாரம். அதையே இழந்துவிட்டால் என்ன செய்யப்போகிறோம் என்ற பயம் வருகிறது. நீரும் மண்ணும் எப்படி பாழ்படுகிறது என்று படித்துப்பாருங்கள். அடுத்து மலைகள் எப்படி அழிக்கப்படுகின்றன. அதனால் ஏற்படும் விளைவுகளையும் எடுத்துச்சொல்லி உள்ளார். இவர் எழுதியுள்ள ஒவ்வொரு கட்டுரையும் கொஞ்சமாக இருந்தாலும் அற்புதமானவை. அனைவரும் படிக்க வேண்டியவை. சங்கப்பாடல்களை உதாரணம் காட்டி இவர் எழுதும் பாங்கு மிக நன்றாக உள்ளது. படிக்கவும் எளிமையாக உள்ளது.<br />
<br />
<span class="Apple-style-span" style="font-size: x-large;"><a href="http://ganeshmoorthyj.blogspot.com/">கணேஷ்</a></span><br />
<br />
கணேஷ் என்ற இளைஞரது வலைப்பூ இது. இவர் ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் மீது ரசிகன், வெறியன், தாசன் என்ன வேண்டுமானால் சொல்லலாம். இவரது வலைத்தளத்தில் விஞ்ஞானம் புகுந்து விளையாடும். ஒரு கட்டுரையில் பூமி தோன்றிய கதையை கூறியுள்ளார். அதில் எதேச்சையான சேர்மங்கள் எதேச்சையாக சேர்ந்ததால் பூமி உண்டானது என்று இருந்தது. அதைப்படித்துவிட்டு எனக்கு கற்பனை சிறகடித்தது. அந்த மாதிரி எதேச்சையாக சேராமல் இருந்திருந்தால்... கொஞ்சம் வித்தியாசமாக சேர்ந்து வித்தியாசமான உயிரினங்கள் தோன்றியிருந்தால்... பிரபஞ்சத்தில் வேறு பல இடங்களில் இதே போல் சேர்மங்கள் சேர்ந்து உயிரினங்கள் இருந்தால்... என்று எனக்கு கற்பனை விரிந்துகொண்டே சென்றது. அறிவியலை, கேலக்ஸியைப் பற்றி கதைகள் மூலம் விளக்குவார். இவரது எழுத்தும் எளிமையாக படிப்பதற்கு இன்ட்ரஸ்டாக இருக்கும். அவசியம் படிக்க வேண்டிய வலைப்பூ.ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-8817916053176700022010-09-24T13:19:00.000+05:302010-09-24T13:19:53.927+05:30இன்றைய இளைஞர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்<span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px;"><br />
</span></span>நிறைய சிறு வயது இளைஞர்கள் ப்ளாக் எழுத வந்திருப்பது பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இவ்வளவு பேருக்கு நாமளும் எழுதணும்னுற ஆசை வந்திருக்கே. வந்துச்சோ ப்ளாக்கர் வரவச்சதோ எப்படியிருந்தாலும் சந்தோஷம்தான். நிறைய எழுதுங்க எழுத எழுத எழுத்து பழக்கமாகும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்னு சொல்ற மாதிரி.<br />
<br />
ஆனா அது கூடவே நீங்கள் இன்னொரு காரியமும் பண்ணனும். என்னன்னா நிறைய படிக்கணும். படிக்க படிக்க மனசு பண்படும். உங்களுக்கு எது படிக்க ஆர்வமா இருக்கோ அதையே முதலில் படிங்க. கண்டதைப் படிச்சா பண்டிதனாகளாம்னு ஒரு பழமொழி இருக்கு. கொஞ்ச நாள் பிறகு அதைவிட தரமான எழுத்துக்களை படிக்கத் தொடங்குங்கள். அப்படியே படிப்புத் திறனை வளர்த்துக்கொண்டால் உங்கள் எழுத்துத் திறனும் தரமானதாக மாறிக்கொண்டே இருக்கும்.<br />
<br />
என்னோட கதையையும் கொஞ்சம் கேளுங்க. கல்யாணத்துக்கு முன்னால புத்தகங்கள் படித்துக்கொண்டே இருப்பேன். லெண்டிங் லைப்ரயில் சேர்ந்து இருந்தோம். இரண்டு நாளைக்கொருமுறை புத்தகங்கள் எடுத்து வருவார்கள். மூணு நாலு நாவல் வாங்கி இரண்டு நாளில் முடித்துவிடுவேன். படிச்சுக்கிட்டே இருப்பேன். அவ்வளவும் பாக்கெட் நாவல்கள். எங்க மாமா சொல்வார் நீ படிக்கறதெல்லாம் நாலனா புத்தகங்கள். அதுனால ஒரு பிரயோசனமும் இல்லைன்னு சொல்வார். அதுக்கு அர்த்தம் என்னன்னு எனக்கு அப்போ புரியலை. சரி ஏதோ சொல்றாருன்னு பேசாம இருந்துருவேன்.<br />
<br />
அவர் பெரிய பெரிய புத்தகங்கள் படிப்பார். நான் அதையெல்லாம் மறந்தும்கூட தொட மாட்டேன். அப்படி இருந்தப்போ கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. கல்யாணமாகி புதுக்குடித்தனம் போனா அந்த வீட்டுல நிறைய புத்தகம். எனக்கு சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அவசரப்பட்டு சந்தோஷப்பட்டுட்டேன்னு உடனேயே புரிந்தது. புத்தக அலமாரியை போய் புரட்டிப்பார்த்தேன். நான் படிக்கும் எழுத்தாளர் பெயர் ஒன்றுகூட இல்லை. ஜெயகாந்தன், ஜெயந்தன், ஆர்.சூமாமணி, அம்பை, கி.ராஜநாராயணன், கு.ஆழகிரிசாமி... போன்றவர்களின் புத்தகங்களே. இவங்க பேரக்கூட நான் கேள்விப்பட்டது இல்லை. இது என்னடா ஜெயந்திக்கு நேர்ந்த கொடுமைன்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டேன்.<br />
<br />
நான் நிறைய படிப்பேன் சொன்னத நம்பி என் கணவர் சொன்னார் எனக்கு எழுத்தாளர்களில் நா.பா. ரொம்பப் பிடிக்கும்னு சொல்லிட்டு அவர் எழுதிய குறிஞ்சி மலர் புத்தகத்தை கையில் கொடுத்து படி என்று சொல்லிவிட்டார். நான் அந்த எழுத்தாளர் பெயரைக் கேள்விப்பட்டதே இல்லை. சரின்னு படிக்க ஆரம்பிச்சேன். என்னால படிக்கவே முடியல. கணவர் முதன்முதல்ல ஒரு புத்தகத்த கொடுத்து படிக்கச் சொல்லியிருக்காரேன்னு நானும் முக்கி முக்கி படிக்கிறேன். அந்த புத்தகத்த எழுதுன எழுத்தாளர மனசுக்குள்ளயே திட்டுறேன். அவருக்கு வாசகர் கூட்டம் இன்னும் ஒரு குரூப்பு இருக்குது. நான் மனசுக்குள்ள திட்டுனது தெரிஞ்சுச்சு நான் காலி.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirvuNB2jDp2XS2o9C6EHD6m8Xx5F833rdlvyxj_Pwu7P837pPkLxDQhqhaBrf9GoK7DAfGveqDURm5ZLdKS48aLcOXDO9jj4mdaNrkcalAwee79E41qkNxtFmYkH8IuGLNxRyAMO4CcGWO/s1600/books.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="187" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirvuNB2jDp2XS2o9C6EHD6m8Xx5F833rdlvyxj_Pwu7P837pPkLxDQhqhaBrf9GoK7DAfGveqDURm5ZLdKS48aLcOXDO9jj4mdaNrkcalAwee79E41qkNxtFmYkH8IuGLNxRyAMO4CcGWO/s320/books.gif" width="320" /></a></div><br />
<br />
இந்த நா.பார்த்தசாரதியோட புத்தகத்தப்பத்தி என்னோட கணவர் சொன்ன தகவல் அந்தப் புத்தகம் வந்த புதுசுல அந்த நாவல படிச்சவங்க வீட்டுல பிறந்த குழந்தைகளுக்கு ஆணாக இருந்தால் அரவிந்தன் என்றும் பெண்ணாக இருந்தால் பூரணி என்றும் பெயர் வைத்தார்களாம். அந்தக் கதையின் நாயகன், நாயகியின் பெயர்கள். அந்தளவுக்கு அந்த நாவல் பேமஸாம். நம்ம துணை முதல்வர் ஸ்டாலின்கூட அரசியலில் நுழைவதற்கு முன் தன்னை மக்களிடம் அறிமுகம் செய்து கொள்ள ஒரு டிவி சீரியலில் நடித்தாரே ஞாபகம் இருக்கிறதா? அது இந்த குறிஞ்சிமலர் நாவல்தான். அரவிந்தனாக ஸ்டாலின் நடித்தார்.<br />
<br />
இப்படியெல்லாமா எழுதுவாங்க. பாக்கெட் நாவல் படிச்சுக்கிட்டிருந்தவகிட்ட இலக்கியத்தரமான புத்தகத்தைக் கொடுத்தால் எப்படி இருக்கும். அப்போது எனக்கு வயது வேறு 19. ஒரு வழியா கஷ்டப்பட்டு படிச்சு முடிச்சேன். சரி இதுதான் இப்படி இருந்துச்சேன்னு வேற புக் ஏதாவது படிக்கலாம்னு தேடுனா அங்க இருந்ததெல்லாமே இலக்கியவாதிகளோட எழுத்துக்கள்தானே.<br />
<br />
அதுக்கப்பறம் வேற வழியே இல்லாம அங்குள்ள நாவல்களை படிக்கத் துவங்கினேன். அதன் பிறகு என்னால் பாக்கெட் நாவல்களை கிடைத்தாலும் படிக்கவே முடியவில்லை. எங்க மாமா சொன்ன நாலனா புத்தகம் என்ற வார்த்தைக்கு அப்போதுதான் அர்த்தம் தெரிந்தது. அதன் பின் நா.பா.வின் மணிபல்லவம், வலம்புரிசங்கு எல்லாம் படிக்க அவ்வளவு அருமையாக இருந்தது. கல்கியின் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் விழுந்து விழுந்து படித்தேன். ஜெயகாந்தன், கி.ரா., ஆர்.சூடாமணி, அம்பை, கு.அழகிரிசாமி, ச.தமிழ்செல்வன்... அடுப்பில் பாலை வைத்துவிட்டு ஏதாவது ஒரு புக்கை எடுப்பேன். பாலை சிம்மில்தானே வைத்திருக்கிறோம் என்ற நினைப்பில் புக்கில் மூழ்குவேன். அவ்வளவுதான். பால் தீய்ந்த வாசம் மூக்கைத் துளைக்கும் எழுந்து ஓடி அடுப்பை அணைப்பேன்.<br />
<br />
இதை ஏன் சொல்கிறேன் என்றால் நாம் ஒரு நல்ல விஷயத்தை சிரமப்பட்டு பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டால் அது நமக்கு நல்லதையே கொடுக்கும். ஒருநாளைக்கு ஒரு மணி நேரம் படிப்புக்குன்னு ஒதுக்குங்க. எவ்வளவோ நேரத்தை நாம வீணாக்குறோம். நல்ல விஷயத்துக்கு ஒரு மணி நேரத்தை ஒதுக்குவது ஒன்னும் தப்பில்லைதானே. சில இடங்களில் நாம் காத்திருக்க வேண்டியதிருக்கும். உதாரணமாக ஆஸ்பத்திரி, பேங்க் இது மாதிரி சில இடங்களில் மணிக்கணக்கில் நாம் காத்திருக்க நேரிடும். அது மாதிரி நேரங்களில் கையில் ஒரு புத்தகம் வைத்திருந்தால் படித்த திருப்தியும் கிடைக்கும். நேரமும் சுலபத்தில் போகும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6bkz_TL9M3TT5L0SROjiV5eEzRCNtskkcfqcqnJPEdANFgFGtpJOMAmJHqK6-SEeP1T7pH0qP8WbFGVC_3qnKrF7Iw2aKk2oNQYaPNiWY95oGRFSyhV3pkSBJQ8jbdba5LgHaHLCuYXrX/s1600/Sun_pillar_forms_as_the_sun_rises_over_the_Arctic_plain_-_NOAA.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="218" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6bkz_TL9M3TT5L0SROjiV5eEzRCNtskkcfqcqnJPEdANFgFGtpJOMAmJHqK6-SEeP1T7pH0qP8WbFGVC_3qnKrF7Iw2aKk2oNQYaPNiWY95oGRFSyhV3pkSBJQ8jbdba5LgHaHLCuYXrX/s320/Sun_pillar_forms_as_the_sun_rises_over_the_Arctic_plain_-_NOAA.jpg" width="320" /></a></div><br />
<br />
சிலர் ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமே படிப்பார்கள். அது ஒன்றும் தப்பில்லை. தமிழிலும் உள்ள எழுத்துக்கள் எப்படி இருக்கிறது என்று படித்துப்பாருங்கள். இலக்கியம்னா சங்க கால இலக்கியத்தைப் படிக்கச் சொல்லவில்லை. சமகால இலக்கியத்தைப் படியுங்கள். சங்க கால இலக்கியத்தைப் படித்தாலும் தவறில்லை. உண்மையான அரசியல் கட்டுரைகளை படித்து நாட்டு நிலைமை தெரிந்துகொள்ளுங்கள். ஆழ்ந்த படிப்பு ஒன்றே நம்மை சரியான திசையில் பயணிக்க வைக்கும். ஆகவே இளைஞர்களே உங்களுக்கு இந்த அன்பான வேண்டுகோளை வைக்கிறேன்.ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-87057722967290429772010-09-18T16:04:00.000+05:302010-09-18T16:04:52.648+05:30ஆர்.சூடாமணி என்னும் அற்புதம்பெண் எழுத்தாளர். மிகச் சிறந்த எழுத்தாளர். ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் போன்றவர்களையெல்லாம் விட சிறந்தவரா என்று கேட்பீர்களேயானால் எனது பதில் ஆம். அவரது எழுத்தை படித்தவர்கள் இதை உணர்வார்கள். படிக்காதவர்கள் படித்தீர்களேயானால் உணர்வீர்கள்.<br />
<br />
இப்போவெல்லாம் எழுத்தாளர்கள் பிரபலமாவதற்கு குழாயடிச் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். அவர்களது வாசகர்களும் இரண்டு பிரிவாக பிரிந்து அதே சண்டையை தொடர்கிறார்கள்.<br />
<br />
ஆனால் சூடாமணி, இவரது கதையைத் தவிர வேறெந்த விவரமும் இவரைப்பற்றி பத்திரிகைகளில் வந்ததில்லை. இவரது போட்டோக்கூட எந்தப் பத்திரிகையிலும் வந்ததில்லை. அவருக்கு அதிலெல்லாம் விருப்பமில்லை போலும். அவரது எழுத்துக்கள் மட்டுமே பேசப்பட வேண்டும் என்று நினைத்தார் போலும்.<br />
<br />
அவர் மறைந்துவிட்டார் என்று <a href="http://masusila.blogspot.com/2010/09/blog-post_15.html">எம்.ஏ.சுசீலா </a> அவர்களின் வலைப்பூ மூலமாகவே அறிந்தேன். மற்றபடி பேப்பர், பத்திரிகைகள் என்று நானும் புரட்டிப்புரட்டி பார்க்கிறேன் அவரைப்பற்றி ஒரு செய்தியும் காணோம். அவர் உயிரோடு இருந்தபோது அவரைப்பற்றி வெளியே தெரியாமல் இருந்ததைப்போலவே அவரது மரணமும் வெளியே தெரிய வேண்டியதில்லை என்று அவர் விரும்பியிருப்பாரோ? அல்லது பத்திரிகளுக்கு இவரைப்பற்றி எழுதுவதால் ஆதாயம் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்.<br />
<br />
இவர் 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் நான்கைந்து நாவல்கள் (எண்ணிக்கை எனக்கு சரியாக தெரியவில்லை) எழுதியுள்ளார். நாடகங்களும் எழுதியுள்ளார். ஆனந்தவிகடன் நாடகப் போட்டியில் பரிசு பெற்ற நாடகமும் உண்டு. ஆங்கிலத்திலும் சூடாமணி ராகவன் என்கிற பெயரில் எழுதியுள்ளதாக அறிகிறேன்.<br />
<br />
அவரது எழுத்துக்கள் நம்மை சிறுகுழந்தைபோல் கையைப்பிடித்து அழைத்துச் செல்லும். அவ்வளவு எளிமையாக இருக்கும். படித்து முடித்தவுடன் அந்தக் கதையைவிட்டு வெளியே வர முடியாது. அம்மாடி எப்படி எழுதியிருக்கிறார்கள் என்று மலைப்பு தோன்றும். ஒவ்வொரு கதைக்கும் அதே மலைப்பு எனக்கு தோன்றும். எழுத்து என்பதை வரம் என்று சொல்வார்கள். அந்த வரம் இவருக்கு நிறையவே கிடைத்திருக்கிறது. பெண்களின் மற்றும் குழந்தைகளின் மன உணர்வுகளை மிக நுட்பமாக வெளிப்படுத்துவார்.<br />
<br />
இவருக்கு உடல் ரீதியாக ஏதோ பிரச்சனை இருப்பதாய் அறிகிறேன். அதற்கு பதிலாய்த்தான் அவருக்கு அத்தனை அறிவோ.<br />
<br />
அவருக்கு சாகித்ய அகாடமி, ஞான பீடம் போன்ற பரிசுகள் கொடுக்கப்படாததால் அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. அந்த விருதுகள் கொடுக்கப்பட்டிருந்தாள் அந்த விருதுகள் பெருமையடைந்திருக்கும்.<br />
<br />
தமிழ், தமிழன் என்று சொல்லிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது, இது போன்ற அற்புதமான எழுத்துக்களை போற்றிப் பாதுகாத்தாலே தமிழ் நிச்சயம் வாழும்.ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-8012582611475619042010-09-02T13:38:00.000+05:302010-09-02T13:38:00.579+05:30என் சந்தேகத்தை தீர்த்து வைப்பீங்களா?<span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px;"><br />
</span></span>நான் பத்தாம் வகுப்பு வரைதான் படிச்சிருக்கேங்க. இந்த ஊரப்பத்தி உலகத்தப்பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கணும் அதுனால தினமும் நியூஸ் பாக்கணும்னு எங்க மாமா சொல்வாருங்க. அதுனால நானும் நியூஸ் பாப்பேங்க. எனக்கு சில விஷயங்கள் புரிய மாட்டேங்குதுங்க. அதுனால படிச்சவங்க, விஷயம் தெரிஞ்சவங்க கொஞ்சம் எடுத்துச்சொன்னா புரிஞ்சுப்பேன்ங்க.<br />
<br />
விஷயம் என்னன்னா கொஞ்ச வருஷத்துக்கு முந்தி ஈராக்குல பேரழிவு ஆயுதங்கள் இருக்குதுன்னு அமெரிக்கா சொல்லுச்சுங்க. சொல்லிட்டு தன் கூட சில நாட்டு படைகளையும் கூட்டிட்டு ஈராக்குக்குள்ள போனாங்க. அந்த நாட்டு அதிபர பதுங்கு குழிக்குள்ள இருந்து இழுத்து வந்தாங்க. புதிய அதிபர அறிவிச்சாங்க. பழைய அதிபருக்கு தூக்கு தண்டனை கொடுத்தாங்க. அதுக்கு அப்புறமும் படைகள் அங்கே ஏன் இருந்துச்சு. அப்புறம் இப்ப படைகள் அனைத்தையும் வாபஸ் வாங்கப் போவதாக நேத்து அமெரிக்க அதிபர் அறிவிக்கிறார். இப்ப ஏன் வெளியேறுது? இந்த பேரழிவு ஆயுதங்கள தேடுறதுக்குத்தான் நாங்க அடுத்த நாட்டுக்குள்ள போறோம்னு சொன்னாங்க. அங்க எந்த ஆயுதங்களும் கெடைக்கல போலிருக்கு. கெடச்சிருந்தாத்தான் அதுக்கு பின்னால ராணுவத்துக்காரங்க நின்னு போட்டோவோட நியூசுல காட்டியிருப்பாங்களே. இல்லன்னா கண்டுபிடிச்சோம்னாவது சொல்லியிருப்பாங்களே. அப்போ அங்கே எந்த ஆயுதங்களும் இல்லாதபோது ஏன் அங்க போனாங்க. முதல்ல இன்னொரு நாட்டுக்குள்ள போயி ஆயுதத்த தேடுறதுக்கு இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpKgkMPljknOuxFrVlt62vHgOc6zMTgM0xebGd_5HT6zAp-WA98qgyJqqMNGjnEjRf5bhqohmi1J22rKPpolXsvgoFRR55zmr50g7lTjVGVrKGfN5XUoVxmHA0f1FW-3YvHl0ctOrjkUGi/s1600/afghanistan_war.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpKgkMPljknOuxFrVlt62vHgOc6zMTgM0xebGd_5HT6zAp-WA98qgyJqqMNGjnEjRf5bhqohmi1J22rKPpolXsvgoFRR55zmr50g7lTjVGVrKGfN5XUoVxmHA0f1FW-3YvHl0ctOrjkUGi/s320/afghanistan_war.jpg" /></a></div><br />
<br />
நம்ம நாட்டுக்கு பக்கத்து நாடு (இலங்கை) ஒரு இனத்தை அழிச்சாங்களே. அவங்க வச்சிருந்த ஆயுதங்களெல்லாம் எந்த வகை ஆயுதங்கள். ஒரு குண்டு போட்டா அங்க இருக்கற ஆக்சிஷன் எல்லாத்தையும் உறிஞ்சி மக்களை மூச்சுத்திணறி சாகடிக்குமாம். மக்கள் லட்சக்கணக்கில் செத்தாங்களே அப்போ யாரும் என்னான்னு கேக்கலையே. அது அவங்க உள்நாட்டு விவகாரம்னு சொன்னாங்களே. ஐநா சபை ஆளுங்களால இப்போகூட இலங்கைக்கு போக முடியலங்கறாங்களே. ஈராக், ஆப்கானிஸ்தான் மாதிரி நாட்டுக்குள்ள அவங்க பாட்டுக்கு போறாங்களே அது எப்படி?<br />
<br />
இதே ஈராக் பேரழிவு ஆயுதங்கள் இருக்கறதா வதந்தி பரப்பி எங்கள் நாட்டை சூறையாடிட்டாங்கன்னு சொல்லிட்டு கூட இந்தியா, சைனா போன்ற நாடுகளை துணைக்கு அழைத்துக்கொண்டு அமெரிக்கா மீது படையெடுத்தால், அல்லது போபால் புகழ் ஆண்டர்ஸன்னும் இந்தியாவுல வெடிகுண்டு வைக்கறதுக்கு ப்ளான் போட்டுக்குடுத்த ஹெட்லியோ இட்லியோ அமெரிக்காவுல பதுங்கியிருக்காங்கன்னு சொல்லிட்டு இந்தியா துணைக்கு சில நாடுகளை அழைத்து கூட்டுப்படையுடன் அமெரிக்காவுக்குள்ள நுழைஞ்சு, அதிபருக்கு தண்டனை கொடுத்துடறாங்க. அவங்க சொல் பேச்சு கேக்குற அதிபர ஆட்சியில உட்கார வைக்கிறாங்க. அப்புறம் அங்க பொருளாதாரம் படுத்துருச்சு நாங்க சரி பண்ணுறோம்னு சொல்லி அங்கேயே சில வருஷங்கள் இருக்காங்க. அப்பறம் ஒருநாள் நாங்க வெளியேறுறோம்னு வெளிறேறிருறாங்கன்னு வச்சுக்கங்க இப்போது எல்லாத்தையும் மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கும் உலகம் அப்போதும் பார்த்துக்கொண்டிருக்குமா? <br />
<br />
எனக்கு உள்நாட்டு சட்டங்களும் நியாயங்களுமே சரியாத் தெரியாது. உலக சட்டம் என்னான்னு படிச்சவஙக அறிஞ்சவுங்க தெரிஞ்சவுங்க சொன்னீங்கன்னா கேட்டுக்குவேன்.ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-84478937305211511732010-08-30T11:58:00.000+05:302010-08-30T11:58:22.449+05:30யாரைக் குத்துவது என்று தெரியாமல் தவிக்கும் தருணங்கள் (குத்து சீசன் 2)<span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px;"><br />
</span></span>1. காலையிலும் மாலையிலும் வாசல் தெளித்து கோலம் போடப்போகும்போது எங்கிருந்தோ கூட்டமாக கிளம்பி வந்து நம்மை அட்டாக் பண்ணுமே கொசுக்கள், கோலம் போடுவதற்குள் பாடாய்ப்படுத்திவிடும். அதனுடன் டான்ஸ் ஆடிக்கொண்டுதான் கோலம் போடமுடியுமே அப்போது.<br />
<br />
2. அரிவாள்மனையில் கறி நறுக்கும்போதோ அல்லது மீன் கழுவும்போதோ மூக்கு நமநமக்கும், காதுக்குள் ஏதோ ஊர்வதுபோல் இருக்கும், எங்காவது உடனே சொரிய வேண்டும்போல் அரிக்குமே அப்போது.<br />
<br />
3. அடுப்பில் பால் பொங்க தொடங்கும் நேரமாக இருக்கும் அல்லது எண்ணெயில் கடுகு போட்டு வெடிக்கத் துவங்கும் நேரமாக இருக்கும் அப்போது லேண்ட் லைன் அடிக்கும். அடுப்பில் உள்ளதை என்ன செய்வது என்று புரியாமல் தவித்து ஏதோ ஒன்றை செய்துவிட்டு அவசரமாக போனை எடுத்தால் பிஎஸ்என்எல்-லின் ரெக்கார்டட் வாய்சாக இருக்கும் அல்லது ராங் காலாக இருக்குமே அப்போது.<br />
<br />
4. பஸ்சுக்காக காத்திருக்கும்போது நாம் எதிர் பார்க்கும் பஸ்சைத் தவிர அனைத்து ரூட் வண்டிகளும் நிறைய போகும். அடுத்த முறை வேறு ரூட் பஸ்சிற்காக காத்திருக்கும்போது நாம் முதல் நாள் காத்திருந்து வராமல் தவித்த வண்டியாக போகும் இப்போதும் நாம் எதிர்பார்க்கும் பஸ்சே வராதே அப்போது.<br />
<br />
5. ஒருவழியாக பஸ்சிற்குள் ஏறி உட்கார இடம் இருக்காது. நின்றுகொண்டே அரை மணி நேரம் செல்லுவோம். அப்போது வரும் ஸ்டாப்பிங்கில் ஏறும் பெண் நின்ற இடத்தில் அமர்ந்திருப்பவர்கள் அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்குவார்கள். நாம் அப்படியே நின்றுகொண்டிருப்போமே அப்போது.<br />
<br />
6. காலையில் அலுவலம் செல்ல பஸ்சை பிடிப்பதிலேயே லேட்டாகியிருக்கும் (அப்போதே மேனேஜரின் முகம் வந்துபோகும்) அதுபோதாதென்று வரும் சிக்னலில் எல்லாம் பஸ் நிற்குமே அப்போது.<br />
<br />
7. வெயிலில் வெளியே அழைத்துவிட்டு வீட்டுக்கு வந்து பேனை போட்டுவிட்டு உட்காரும்போது கரெண்ட் போகுமே அப்போது. (நல்ல தூக்க நேரத்தில் கரெண்ட் போகும்போதும்)<br />
<br />
8. வீட்டுக்கு விருந்தினர் வந்திருக்கும்போது தண்ணீர் மோட்டார் ரிப்பேராகிவிடுமே அப்போது.<br />
<br />
9. மழை நீரில் கால் பாதம் நனையாமல் பார்த்து பார்த்து மெல்ல நடந்து சென்று கொண்டிருக்கும்போது வேகமாக வரும் வாகனம் நம் மீது மழை நீரை வாரி அடித்துச் செல்லுமே அப்போது.<br />
<br />
10. பத்தாவதாக எதை போடுவது என்று யோசிக்கும் வேளையில் எதுவுமே தோன்றாமல் இருக்குமே அப்போது.<br />
<br />
(யாருங்க அது குத்து சீசன் முடிஞ்சுபோச்சுன்னு சொல்றது. பழங்கள் எல்லாம் சீசன் முடிஞ்சு போனால் அடுத்த வருடம் சீசன் வருமே அதுபோல இது அடுத்த சீசன்)ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-34710722763030285142010-08-25T10:26:00.000+05:302010-08-25T10:26:13.802+05:30அந்தோணி முத்துசில நாட்களாக இந்தப்பக்கம் வரமுடியாத அளவுக்கு வேலை. நேற்று இன்ட்லியை திறந்தவுடன் மேலேயே <a href="http://dondu.blogspot.com/">டோண்டு</a> அவர்களின் பதிவு இருந்தது. பதிவர் அந்தோணி முத்து மறைவு என்ற தகவலுடன்.<br />
<br />
இந்த ப்ளாக் துவங்கியவுடன் இதில் தமிழில் டைப் பண்ணுவதற்கு அம்மா என்றால் எஎம்எம்எ என்று ஆங்கிலத்தில் அடிக்க வேண்டும் என்று என் பையன் சொன்னான். எனக்கு இந்தக் கதையே வேணாம் தமிழிலேயே எழுத்துக்களை டைப் பண்ண வேண்டும் அதற்கு ஏதாவது செய்துகொடு என்று கேட்டேன். அவன் அழகி ஃபாண்டை டவுண் லோடு செய்து தந்தான். இப்போதும் அதைத்தான் உபயோகிக்கிறேன். மெயில் அனுப்ப வேண்டுமானால்கூட (எனக்கு ஆங்கிலம் படிப்பது, எழுதுவது எல்லாம் அலர்ஜி) அழகியிலேயே டைப் பண்ணி அனுப்புகிறேன்.<br />
<br />
யாரோ தமிழ் ப்ளாக்கை கண்டுபிடித்துக் கொடுத்தார்கள். யாரோ அழகி ஃபாண்டை கண்டுபிடித்துக்கொடுத்தார்கள் என்று உபயோகித்துக்கொண்டிருந்தேன். இப்போது அழகி ஃபாண்டை கண்டுபிடித்தவர்களில் அந்தோணி முத்துவும் ஒருவர். அவர் யாரோ எவரோ இதுவரை அவரை நான் அறிந்ததில்லை. ஆனால் அவர் எனக்கு உதவி செய்திருக்கிறார். <a href="http://balaji_ammu.blogspot.com/2008/04/431.html">பாலாஜி</a> என்ற பதிவர் அவருக்கு உறுதுணையாக இருந்திருப்பதை அறிகிறேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTRKRppAkYx5dIvD8owNwNTUSbz7v5XRtIiOSt3FjUqTgW2n_rn3O93d6ahgcMr-IEoSBLS8FQSKIwFd1n8KbCNd3Vgsr7W6mH1-S_E0YbMWBAnC4ht8ALL2zVyIPJyS6-KDHC3_SJ2sbc/s1600/ANTHONY.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTRKRppAkYx5dIvD8owNwNTUSbz7v5XRtIiOSt3FjUqTgW2n_rn3O93d6ahgcMr-IEoSBLS8FQSKIwFd1n8KbCNd3Vgsr7W6mH1-S_E0YbMWBAnC4ht8ALL2zVyIPJyS6-KDHC3_SJ2sbc/s320/ANTHONY.jpg" /></a></div><br />
<br />
அந்தோணி முத்துவைப் பற்றி மேலதிக விவரங்கள் தெரியவில்லை. அவர் மாற்றுத் திறனாளி என்று அறிகிறேன். <a href="http://positiveanthonytamil.blogspot.com/">அவரது ப்ளாக்</a>கிற்குச் சென்று படித்தேன். அவரது அண்ணனைப்பற்றி எழுதியுள்ளார். அவரது பிரிந்துபோன காதலியைப் பற்றிய பதிவைப் படிக்க முடியவில்லை அத்தனை சோகம். அவர் மறைந்தாலும் அவரது நினைவுகளைத் தாங்கி அவரது வலைப்பூ உள்ளது.<br />
<br />
அவருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-40831584335414219752010-08-09T11:45:00.000+05:302010-08-09T11:45:56.788+05:30ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை...<span class="Apple-style-span" style="font-family: Arial;"><br />
</span>"பாய் 300 சிக்கன் போடுங்க"<br />
<br />
வீட்டு வாசலில் இருந்தது மட்டன் ஸ்டால்.<br />
பாய் லெக் பீஸை வெட்டி எடை போட்டார். வீட்டு வாசலில் கடை என்பதால் பழக்கத்தின் காரணமாக எந்த மாதிரி சிக்கனோ மட்டனோ தேவை என்பதை சொல்லாமலேயே போட்டுவிடுவார்.<br />
<br />
"350 இருக்கு. போடவா?"<br />
"நான் 300 தான கேட்டேன்"<br />
"இதுக்குத்தான் சார அனுப்புங்கன்றது. அவர் வந்தாருன்னா புரிஞ்சுக்கிட்டு அமைதியா வாங்கிட்டுப் போயிருவாரு"<br />
"ஆமா வெளியில நல்ல பேரு வாங்க பேசாம வந்துருவாரு. வீட்டுல நல்ல பேரு வாங்கனும்னு நெனக்க மாட்டாரு."<br />
"ஆமா பொம்பளங்க யாரு புருஷன பாராட்டியிருக்கீங்க."<br />
"நாங்க பாராட்டுனம்னா நீங்க அப்படியே ஒக்காந்துருவீங்க பாய்"<br />
"ஆமா நீங்க சொல்றதும் சரிதான். நான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன்னா அதுக்கு எங்க வீட்டம்மாதான் காரணம்."<br />
<br />
கடையில் கூட்டம் அதிகமிருக்கும் நாட்களில் அவரது மனைவியும் கடைக்கு வருவார். பாய் வெட்டிய கறியை கவரில் வாங்கிக் கொடுப்பது, பணத்தை வாங்கிக்கொண்டு சில்லரை கொடுப்பது, சிக்கன் தீர்ந்துவிட்டால் கோழியை வெட்டி உரித்துக்கொடுப்பது என்று அவருக்கு சரியாக சுழலுவார். இருவருக்குள்ளும் ஒரு அன்னியோன்யம் இருக்கும். மனைவியை வெடுக்கென்று பேசமாட்டார். மூஞ்சியைக் காட்ட மாட்டார்.<br />
<br />
ஒரு ஞாயிறன்று மதிய நேரம் கடைக்குச் சென்றேன். அவரது மனைவி சுவரில் சாய்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.<br />
" என்னங்க பாய் இப்படித் தூங்கறாங்க என்றேன்"<br />
அதற்கு அவர் "ஆமாங்க என்ன செய்றது நான் 11-12 மணிக்கு வீட்டுக்கு போவேன், என் பெரிய மகன் 1 மணிக்கு வருவான். சின்ன மகன் 2 மணிக்கு வருவான். எல்லோருக்கும் சாப்பாடு எடுத்து வைத்து பரிமாறிவிட்டு படுக்கனும். திரும்பவும் காலையில் சீக்கரமே எந்திரிக்கனும். அவங்களும் என்ன பண்ணுவாங்க. தூங்கட்டும்" என்றார். பெண்மையை புரிந்துகொள்பவர்களைக் கண்டால் ஏனோ தலைவணங்கத் தோன்றுகிறது.<br />
<br />
ஞாயிறன்று கடைக்கு வந்தால் பாய் நம்மை கண்டுகொள்ள மாட்டார். அவ்வளவு கூட்டம் அவரை மொய்த்திருக்கும். மற்ற நாட்களில் போனால் அவரால் பேசாமல் இருக்க முடியாது. அவரது பேச்சு நியாயமாகவும் எதார்த்தமாகவும் இருப்பதாக எனக்குப்படும்.<br />
<br />
"எங்க வீட்டுக்கு வந்த சொந்தக்காரங்க ரெண்டு பேரு எங்க வீட்டுக்கே வந்து என்னையே கொற பேசிட்டுப்போனாங்க. அப்ப நான் கூலி வேலைதான் செஞ்சுக்கிட்டு இருந்தேன். என்ன இருந்தாலும் நீ கூலி வேலதான செய்யுறன்னு பேசுனாங்க. அவங்க பேசறதால நான் அடுத்து என்ன செய்றதுன்னு முயற்சி பண்ணி இந்தக் கடை வச்சேன். அதுனால அவங்க மேல கோபப்படுறதெல்லாம் இல்ல. வேற யாராவது இருந்தா இந்த மாதிரி பேச்சைக்கேட்டு அப்படியே ஒக்காந்துருவாங்க. நான் அந்தப் பேச்சை எடுத்துக்கொண்டு முன்னேறனும்னு நெனப்பேன்"<br />
அவர் பேசிக்கொண்டே கறியை வெட்டிக்கொண்டிருந்தார். திடீரென்று பேச்சு திசை திரும்பியது. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCvZbzwzkn5qnkrMxXt5Bkp_Q2tvTOYB0nFa4_OchOyJ9mSnGf7gncQAfUZH4OyrcWpmpOVDO6DpXOZBZdo9D7W10Vr-JA1lcRQ6r40rkFWOOuEpdtOfPA28DEUZLVe8CA8vWN1Be-fOY6/s1600/happy_fathers_day.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCvZbzwzkn5qnkrMxXt5Bkp_Q2tvTOYB0nFa4_OchOyJ9mSnGf7gncQAfUZH4OyrcWpmpOVDO6DpXOZBZdo9D7W10Vr-JA1lcRQ6r40rkFWOOuEpdtOfPA28DEUZLVe8CA8vWN1Be-fOY6/s320/happy_fathers_day.jpg" width="245" /></a></div><br />
<br />
"எங்க தம்பி வந்திருந்தான் அவன் பொண்ண மாப்பிள்ள வீட்டுல சரியா நடத்தலன்னு சொல்றான். ஆறுன சாதம்தான் போடுறாங்களாம். தம்பி வீட்டுல தனிக்குடுத்தனம் அதுனால மூணு வேளையும் சூடா சாப்பிடுவாங்க. மாப்பிள்ள வீட்டுல கூட்டுக்குடும்பம். அதுனால காலையிலேயே சமைச்சுருவாங்க. அது ஆறிப் போயிடுது. அதையெல்லாம் ஒரு குறையா சொல்ல முடியுமா? நீங்களே சொல்லுங்க" என்றார்.<br />
<br />
"ஆமா பாய் பொண்ணுங்க போற எடத்துல அனுசரிச்சுச்தான் போக வேண்டியிருக்கும். ஏன்னா அவங்க வீட்டுல ஒரு பழக்கம் இருக்கும் போற இடத்துல வேற மாதிரி பழக்கவழக்கம் இருக்கும். அதுனால அனுசரிச்சுச்தான் போக வேண்டியிருக்கும்" என்றேன்.<br />
<br />
"மாப்பிள்ளை சொல்றாரு உங்க பொண்ணு சண்ட போடுறத மட்டும் சொல்றாளே, அவளை வெளிய கூட்டிட்டுப்போறது சந்தோஷமா பேசிக்கிறதயெல்லாம் சொல்றாளான்னு கேக்குறாரு. அவரு சொல்றதும் சரிதானே அவங்க பிரச்சனையில நம்ம தலையிடலாமா? நீங்களே சொல்லுங்க" என்றார்.<br />
<br />
"ஆமாம் அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ரெண்டு பக்கமும் இருக்குற பேரண்ட்ஸ் தலையிடாம இருந்தாலே அவங்களே அவங்க பிரச்சனையை தீர்த்துப்பாங்க" என்றேன்.<br />
<br />
"அப்பறம் என் தம்பி நான் கேட்டேன் ஏன்டா உன் பொண்ணு கஷ்டப்படுதுன்னு இவ்வளவு வேதனைப்படுறியே, உன்னையே நம்பி ஒரு பொண்ணு வந்துச்சே அத இன்னிக்கி வரைக்கும் எப்படிடா வச்சிருக்கன்னு கேட்டேன். என்னாங்க நான் சொல்றது"<br />
<br />
<b>டிஸ்கி:</b> பத்து நாள் பதிவு போடலன்னா காணாம போயிருவாங்கன்னு சவுந்தர் பயமுறுத்துனதுனால உடனே பதிவு போட்டுட்டேன். (எப்படியெல்லாம் பயமுறுத்துறாங்கப்பா)ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com22