ஜோதிபாசு
2/04/2010 | Author: ஜெயந்தி
அதிக வேலை காரணமாக நிறைய நாட்களாக ப்ளாக் பக்கமே வர முடியவில்லை. ஆனாலும் மனதிற்குள் ப்ளாக் நினைப்பு ஓடிக்கொண்டேதான் இருக்கும். அப்போது எழுத நினைத்த பல விஷயங்களில் ஒரு விஷயம் மட்டும் எழுதியே தீர வேண்டும் என்று தோன்றியது. சற்று தாமதம்தான். அது பெருந்தலைவர் ஜோதிபாசுவின் உடல் தானம்.

நம் நாட்டில் எந்தத் தலைவரின் உடலும் தானம் அளிக்கப்பட்டதாக நினைவிலில்லை. குறைந்தபட்சம் கண் தானமாவது செய்திருப்பார்களா என்று தெரியவில்லை. அவர்களின் உடல் ஒன்று எரிக்கப்படும் அல்லது புதைக்கப்படும்.



ஜோதிபாசுவின் கண்களும் தானம் அளிக்கப்பட்டு, அவரது உடலும் இறுதி மரியாதைகள் நிறைவடைந்தவுடன் கொல்கத்தா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டதைப் பார்த்தவுடன் மெய்சிலிர்த்தது. அவர் வாழ்ந்த காலத்திலும் எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார். மக்கள் சேவைக்காகவே வாழ்ந்தார், இறந்த பின்பும் மக்கள் சேவைக்காக தனது உடலை கொடுத்துள்ளார்.

பிருந்தா காரத்தும் பிரகாஷ் காரத்தும் கருத்தடை ஆபரேஷன் செய்துகொண்ட பிறகே திருமணம் செய்துகொண்டார்களாம். முழுமையாக தங்களை நாட்டு சேவைக்காகவே அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.
அரசியல்வாதி என்றாலே நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொள்வது என்பதுதான் பொருள். அதன்படியே வாழ்ந்த ஒரு பெருந்தலைவரின் காலத்திலேயே நாமும் வாழ்கிறோம் என்பது நமக்குப் பெருமை.
This entry was posted on 2/04/2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On February 4, 2010 at 7:15 PM , அண்ணாமலையான் said...

நல்ல விஷயம்தான்

 
On February 9, 2010 at 10:34 PM , ஜெயந்தி said...

நன்றி அண்ணாமலையான்!

 
On February 26, 2010 at 2:49 PM , Anonymous said...

hmm

ethu pola nama tamilnatila oruthar epothu elliyeynu varuthama eruku..

oru vela anga entha complan surya eruntha nerai veri erukomo ennovo..

nandraga ullathu unga padivu..

valga valamudan.
vaurhtapadtha valibar sangam sarbga
complan surya

 
On February 26, 2010 at 10:43 PM , ஜெயந்தி said...

நன்றி காம்ப்ளான் சூர்யா!
காம்ப்ளான் சூர்யாவின் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்!