எதிர் பதிவு
பொதுவா எங்க வீட்டுல ஆட்டோவுல வெளிய போற பழக்கமில்லை. மிகவும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே ஆட்டோ பயணம் மேற்கொள்ளப்படும். அந்த அவசியம் தீபாவளிக்கு முன் ஏற்பட்டது. பையனுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. கூடவே உடல் வலியும். கணவரை ஆட்டோவை அழைத்துவர அனுப்பினேன். அவரும் அழைத்து வந்தார். எங்கள் வீட்டில் இருந்து கிளினிக் செல்ல 20 ரூபாய் ஆகும். அடித்துப் பேசும் ஆட்டோ டிரைவர்களிடம் மாட்டினால் 25, 30 வரை கொண்டுபோய்விடுவார்கள்.
"எவ்வளவு ஆட்டோவுக்கு பேசியிருக்கீங்க?"
"ஐம்பது ரூபா"
"என்னது ஐம்பது ரூபாயா? என்னங்க முப்பது ரூபாகூட ஆகாது. நீங்க என்ன ஐம்பது ரூபாக்கு பேசியிருக்கீங்க"
"அவன் ரோட்டுல இருந்து வந்ததுக்கும் சேர்த்து கேட்குறான்."
எனக்குத் தெரிஞ்சு எங்காவது லாங்கா போகும்போதுதான் ஆட்டோ டிரைவருங்க ரிட்டன் வரும் போது சவாரி கிடைக்கலேன்னா என்ன பண்றதுன்னு கூடுதலாக கேட்பார்கள்.
அடுத்த வாரம் எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அதோடு ஒவ்வொரு ஜாயிண்டுக்கும் சொல்ல முடியாத வலி. கிளினிக்குக்கு நடந்து போகவே முடியாது. வேறு வழியே இல்லை கணவரை ஆட்டோ அழைத்துவர அனுப்பினேன். முப்பது ரூபாதான் இங்கயிருந்து என்று சொல்லி அனுப்பினேன்.
ஆட்டோ வந்தது. "எவ்வளவு பேசியிருக்கீங்க?"
"ஐம்பது ரூபா"
ஜுர வேகம் ஒருபுறம் வலி ஒருபுறம் சண்டைபோடும் நிலையில் இல்லை. ஜுரம் மட்டும் இரண்டு டிகிரி அதிகமாகிவிட்டது.
இரண்டு வாரம் கழித்து அம்மாவுக்கு ஜுரம் வந்துவிட்டது (தொடர் பதிவு மாதிரி, இது தொடர் ஜுரம்). இப்போது ஆட்டோ அழைக்க நானே சென்றுவிட்டேன். இப்போதுதான் கிளைமாக்ஸ்.
ஆட்டோ டிரைவரிடம் "ஏங்க மோகன் டாக்டர் கிளினிக்கு போகனும் எவ்வளவு?"
"ஐம்பது ரூபாங்க" இது ஆட்டோ டிரைவர்.
"என்னங்க இங்கயிருந்து இருபது ரூபாதான நீங்க என்ன ஐம்பது ரூபா கேக்குறீங்க?"
"ஏங்க நீங்களே ஐம்பது ரூபா குடுத்து வந்திருக்கீங்களே? இப்ப இப்டி கேக்குறீங்க?"
ஆஹா அவனா நீயி?
"ஏங்க எங்க வீட்டுக்காரர் அவசரத்துல கூட்டிட்டு வந்துட்டாரு."
"அவருக்குத்தான் எங்க கஷ்டம் தெரியுது"
"இப்ப முப்பது ரூபாய்க்கு வர முடியுமா? முடியாதா?"
"சரி வாங்க" என்றவாறே ஆட்டோவை கிளப்பினார்.
7 comments:
இதற்கு பேர் தான்
அடிச்சுப்பேசறது............
கலக்கல்.......
உங்கள் தைரியத்திற்கு
வாழ்த்துக்கள்........
:-)))))
பாவம் உங்க ரங்கமணி .
/*அடித்துப் பேசும் ஆட்டோ டிரைவர்களிடம் */
அடிச்சி பேசுறதுன்னா எப்படி, கையாலயா இல்ல குச்சியாலையா இல்ல இரும்பு ராடாலையா..?
உண்மையா சொல்லுங்க நீங்க உங்க ரங்கமணிய அடிச்சி பேசுறத தானே இங்க சொல்லிருக்கீங்க....
-- கிருஷ்ணா
ரங்க்ஸ்களே இப்படித்தான்பா.
நன்றி சங்கவி!
தைரியமாவது ஒன்னாவது. நேரமின்மை காரணமாக ப்ளாக்கையெல்லாம் அவர் படிப்பதில்லை. என்னிக்காவது படிச்சா........
நன்றி சந்தனமுல்லை!
நன்றி கிருஷ்ணா!
யாரு ரங்கமணியா பாவம்? அதுக்கு என்னயச் சொன்னீங்கனாலும் தகும்.
நன்றி புதுகைத் தென்றல்!
ஆமா ஆமாம்!
அருமை யான பதிவு
நல்வாழ்த்துகள்
வருகைக்கு நன்றி தியாவின் பேனா!