வால் - இ - wall-e
3/23/2010 | Author: ஜெயந்தி
வால்பையன் பத்தியெல்லாம் இல்லீங்க. இது ஒரு ஆங்கில அனிமேஷன் படம். அதுல வர்ற ஒரு ரோபோட்தான் வால் இ. அப்பாவியா மூஞ்சிய வச்சிக்கிட்டு வால்தானம் செய்றதுல வால்பையனுக்கு கொறஞ்சதில்ல.

படம் தொடங்குறதே மனிதர்கள் யாருமே இல்லாத உலகத்துலதான். பெரிய பெரிய கட்டிடங்கள் மட்டுமே அவர்கள் வாழ்ந்ததற்கு சாட்சியாய். ஒரு புல் பூண்டுகூட செடிகள் கிடையாது. மெல்ல இந்த ரோபோ வரும். மிலிட்டரி டேங்கர் பல்சக்கரம்போல் இரண்டு சிறிய சைஸ் கால்கள். அதன் மேல் ஒரு சதுர டப்பாவை வைத்ததுபோல் ஒரு உடம்பு. இரண்டு கைககள். ஒரு பைனாகுலரை வைத்ததுபோல் ஒரு தலை. இதனை பார்த்தால் காயலான் கடையின் பழைய பொருட்களை வைத்து செய்ததைப்போல் துருப்பிடித்த அழுக்கான தோற்றம். அங்குள்ள குப்பைகளை தன் வயிற்றில் கைகளால் அள்ளி வைத்து பிரஸ் பண்ணி சதுரமான கட்டியாய் ஆக்கி அடுக்கிக்கொண்டிருக்கும். அந்த வேலைக்காக உருவாக்கப்பட்ட ரோபோ. அதனால் உருவாக்கப்பட்ட கட்டிகள் மலைபோல் அங்கங்கே நிறைய மலைகளாக காட்சியளிக்கும். அந்தக் குப்பைக்குள் அதற்கு தேவையானதாக நினைக்கும் பொருட்களை எடுத்து பத்திரப்படுத்திக்கொள்ளும். முள் கரண்டி, வெற்றிக்கோப்பை, நகைப்பெட்டியில் இருக்கும் வைர மோதிரத்தை எடுத்து தூர எறிந்துவிட்டு அந்தப் பெட்டி போன்றவற்றை தனக்கான ஒரு தனியிடத்தில் அவற்றை பத்திரப்படுத்தும். தன்னுடைய உடம்பில் ஏதாவது ஒரு பொருள் சரியில்லை என்றால் தான் தேடி எடுத்து வைத்திருக்கும் பொருளிலிருந்து எது சரியில்லாத இடத்திற்கு பொருந்துகிறதோ அதனை எடுத்து பொருத்திக்கொள்ளும். ஒரு சின்ன டிவி போல ஒரு ஒன்றை ஆன் செய்து பார்க்கும். அதில் மனிதர்கள் ஜோடியாக கைகோர்த்து ஆடும் ஒரு நடனம் பாட்டுடன் ஒரு நிமிடத்திற்கு ஓடும். இதை தினமும் போட்டுப் பார்க்கும். அந்தப் பாட்டையும் தனக்குள் டெக்கார்டு செய்துகொள்ளும். சோலார் எனர்ஜி எடுத்து தன்னை ரீ சார்ஜ் செய்து கொள்ளும். குப்பை அள்ளும்போது ஒரு சின்ன செடி முளைத்திருப்பதைப் பார்த்து அதை மண்ணோடு அள்ளி வந்து தன் வீட்டில் ஒரு ஷீ வில் போட்டு வைக்கிறது.

இதற்கு ஒரு ஃப்ரண்டு கரப்பானபூச்சி. அது இதுமேல ஏறி உள்ளயெல்லாம் போய் வரும். வால் அதன் இடத்திலிருந்து வெளியே வரும்போது இந்த கரப்பான் பூச்சி மேல் தன் சக்கர காலால் ஏறிவிடும். உடனே பதற்றமாகி அது என்னாச்சோன்னு திரும்பிப் பார்க்கும் பாருங்க. என்னா சீன். அப்பறம் அந்த கரப்பான்பூச்சிக்கு ஒன்னும் ஆகலன்னதும் அது பாட்டுக்கு போகும். அது ஒரு ரோபோன்ற உணர்வே நமக்கு தோணாது. படம் முழுவதும் இதே போல் காட்சிகளை வைத்து நாமே புரிந்துகொள்ள வேண்டும். வசனம் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கும். (இல்லேன்னா என்னைப் போல் ஆட்களெல்லாம் ஆங்கிலப்படம் பார்க்க முடியமா?)

அப்போது விண்ணிலிருந்து ஒரு விண்வெளி ஓடம் வரும். நம்ம வாலு பயந்துபோயி ஒரு ஓரமா நின்னு என்ன நடக்குதுன்னு பார்க்கும். அதுக்குள்ளயிருந்து இன்னொரு ரோபோவை அந்த ஓடம் இறக்கிவிட்டுவிட்டு பறந்து சென்றுவிடும். அந்த ரோபோ பணக்கார பெண் போல் வெண்மையாக பளபளப்பாக இருக்கிறது. கோழிமுட்டை போன்ற வடிவத்தில் இருக்கிறது. அதற்கு வால் இயை விட ஆற்றல் அதிகம். தனக்கு ஏதாவது ஆபத்து என்று அது நினைத்தால் அந்த இடத்தையே சுட்டுபொசுக்கிவிடும். அது இரங்கியவுடன் தன் லேசர் கண் கொண்டு எதையோ தேடிக்கொண்டிருக்கிறது. வால் இ அதை கவனித்துக்கொண்டிருக்கிறது. வால் இயைப் பார்த்த புது ரோபோ மெல்ல அதன் அருகே வருகிறது. உன் பெயர் என்னன்னு கேட்கிட்டே அதப் பார்க்குது. அது மேல வால் இ ன்னு எழுதியிருக்கிறதப் படித்துவிட்டு தன்னுடைய பெயர் ஈவ் என்று சொல்கிறது. வால் இ அதை ஈவா என்று அழைக்கிறது.



தன்னுடைய இருப்பிடத்திற்கு ஈவாவை அழைத்துச் சென்று தான் சேகரித்து வைத்திருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்ததுக் காட்டுகிறது. (நான் பாரு என்னல்லாம் வச்சிருக்கேன்) ஒரு பல்பை எடுத்துக்காட்டுகிறது ஈவா அதை எரிய வைக்கிறது. வால் இயால் எரிய வைக்க முடியாது. லைட்டரை எடுத்துக்காட்டுகிறது. ஈவா அதை திறந்து பட்டனை அமுக்கி எரிய வைக்கிறது. உடனே வாலுக்கு டிவியில் பார்த்த காதல் பாட்டு ஞாபகம் வந்துவிடுகிறது. அதை போட்டுக்காட்டுகிறது. அதில் அவர்கள் கைகளைக் கோர்த்துக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஈவாவின் கையைப் பிடிக்க முயற்சிக்கிறது. ஈவா கையை இழுத்துக்கொள்கிறது. அப்புறம் ஒரு சூவில் வைத்திருக்கும் அந்தச் செடியைக் காட்டுகிறது. அவ்வளவுதான் ஈவா அதை வாங்கி தன்னுள் வைத்துக்கொண்டு தன்னை மூடிக்கொண்டு விண்வெளிக்கு தகவல் அனுப்பத் தொடங்குகிறது. வால் அதை ஈர்க்க என்னவெல்லாமோ செய்கிறது. முடியாமல் தன் வேலையைப் பார்க்கப் போய்விடுகிறது. அப்போது விண்வெளியில் இருந்து விண்வெளி ஓடம் வருகிறது. வாலிற்கு புரிந்துவிடுகிறது. ஈவா அதில் போகப் போகிறது. உடனே ஓடுது. பின்னால் வரும் கரப்பான்பூச்சியை அதட்டி அங்கேயே நிறுத்திவிட்டு வருவதற்குள் ஓடம் கிளம்பிவிடுகிறது. நம்ம ஊர் ஹீரோ போல் பாய்ந்து அதன் ஓரத்தை பிடித்துக்கொள்கிறது. இந்த ஓடம் பறந்துபோய் விண்வெளியில் இருக்கும் விண்கப்பலுக்குள் செல்கிறது.



பிரம்மாண்டமான அந்த கப்பலுக்குள் நிறைய ரோபோக்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன. ரோபோக்கள் மட்டுமே வேலை செய்கின்றன. ஒரு புறம் மனிதர்கள் கார்போல் ஓடும் சேரில் அமர்ந்திருக்கிறார்கள். பலூனுக்கு கைகால் முளைத்தாற்போல் குண்டாக சின்னச்சின்ன கைகால்களுடன் இருக்கிறார்கள். சேரில் உள்ள ஒரு பட்டனை அழுத்தினால் அவர்கள் முன்னால் வெற்றிடத்தில் டிவி போல் படம் ஓடும். கை தட்டினால் ஜுஸ், காபி, சாப்பிட அனைத்தும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே வரும். அவங்க எதுக்காகவும் சேரைவிட்டு இறங்கவே மாட்டார்கள்போல. அதில் ஒருவர் சேரில இருந்து கீழே விழுந்துவிடுகிறார். தானா எழுந்து சேரில் அமர முடியாமல் திணறும் அவரை நம்ம வால் கைத்தாங்கலாக தூக்கி அமர வைக்கிறது. அவர் நன்றி வால் இ என்கிறார். அவர்தான் அந்த ஷிப்பின் கேப்டன். நம்ம ஈவா அவர் முன் நிறுத்தப்படுகிறது. அது செடி கொண்டு வந்திருப்பதை அறிந்த கேப்டன் ரொம்ப சந்தோஷமாகி பூமிக்கு போவதற்கு ரெடியாகிறார்.

என்னா விஷயம்னா நம்ம ஈவா பூமிக்கு போனது ஏன்னா அங்க ஏதாவது செடி முளைச்சிருக்கானு பார்க்கத்தான். செடி முளைத்தால் உடனே இவர்கள் பூமிக்குப் போகலாம். இல்லாவிட்டால் அங்கேயே இருக்க வேண்டியதுதான். அவர்கள் எவ்வளவு வருடம் விண்வெளியலேயே இருக்காங்கன்னா 2050ல இருந்து 2750 வருஷம் வரை. ஒரு படம் காட்டப்படும் 2050ல் மனிதன், 2150, 2250..... 2270 வரை மனிதர்கள் படம் ஒட்டபட்டிருக்கும். முதல் படத்தில் நம்மைப்போல் உள்ள மனிதன் அடுத்தடுத்த நூறாண்டுகளில் மெல்ல மெல்ல குண்டாகி தோற்றம் மாறி தற்போதைய தோற்றம். ஒரே படத்துல இவ்வளவு விஷயத்தையும் புரிய வைக்கிறார்கள். விண்வெளி கப்பலிடம் அந்தச் செடியை ஒப்படைத்தால்தான் அது பூமியை நோக்கி கிளம்பும். ஈவாவிடம் செடியைக் கேட்கிறார். அது தன்னைத் திறந்து பார்த்தால்... அதுக்குள்ள செடியே இல்ல. உடனே ஈவாவை டிஷ்போஸ் பண்ணிவிட உத்தரவாகிறது. நம்ம ஹீரோ உள்ளே புகுந்து ஈவாவை காப்பாற்றுகிறார். இதுக்கு நடுவுல புதுசா வந்திருக்குற வால அங்குள்ள ரோபோல்லாம் சேர்ந்து பிடிக்கப்பார்க்குது. ஈவா அதக் காப்பாத்துது. இதுக்கு நடுவுல ஒரு ரோபோ சின்சியரா அழுக்கு இருக்கற இடத்தையெல்லாம் துடைக்குது. அதோட வேலை அதுதான். நம்ம வால்தான் அழுக்கு மூட்டையாச்சே. அது போற இடமெல்லாம் அழுக்காகிக்கொண்டே போக. கிளினிங் ரோபோ துடைத்துக்கொண்டே போகும். ஒரே கலாட்டாவா இருக்கும். வால் இ படம் போட்டு அனைவருக்கும் எச்சரிக்கை அனுப்படுகிறது.



இதுக்கு நடுவுல செடியை வால் கண்டுபிடிக்குது. திரும்ப கேப்டன் கிட்ட கொண்டு போறாங்க. அவரும் அதை வைத்து கப்பலை கிளப்ப முயற்சிக்கிறார். அப்போதான் இவங்க எல்லாத்தையும் கட்டுப்படுத்தற பெரிய சைஸ் சக்கர வடிவிலான ரோபோ அத தடுக்குது. மனுசங்கல்லா பூமிக்குப் போயிட்டா அதுக்கு வேலையில்லாம போயிடுமே. அதுகூட போராடி கேப்டன் வால் எல்லாம் சேர்ந்து கப்பலை எப்படி கிளப்புறாங்கறதுதான் கதை. பெரிய ரோபோகூட போராடும்போது நம்ம வால் நசுங்கி போயிடும்.

அடுத்து விண்வெளி கப்பல் பூமியை அடையும் மனிதர்களெல்லாம் வெளியே வருவாங்க. நமக்கு வால் என்னாச்சோன்னு பதைக்கும். ஈவா அதை எடுத்துக்கொண்டு வாலின் வீட்டிற்கு ஓடும். அங்கேயிருக்கும் பொருட்களில் அதன் உடம்பிற்கு பொருத்தமாக இருக்கும் பாகங்களையெல்லாம் எடுத்து ஒவ்வொன்றாக பொருத்தும். அதன் எக்ஸ் ரே கண் ரொம்ப உதவியாக இருக்கும். கடைசியாக தன்னிடமிருக்கும் பவரிலிருந்து அதற்கு பவர் (உயிர்) கொடுக்கும். நாமும் பதைபதைப்புடன் பார்த்துக்கொண்டிருப்போம். அதற்கு உயிர் வந்துவிடும். அப்பாடா என்றிருக்கும். ஆனால் இப்போதுதான் கிளைமாக்ஸ். வாலுக்கு பழசு எல்லாம் மறந்துவிடும். துஷ்யந்தன் சகுந்தலையை மறந்ததுபோல. (ஷார்ட் டைம் மெமரி லாஸ்?) அதுபாட்டுக்கு குப்பையை அள்ள கிளம்பிவிடும். ஈவா அதுகிட்ட டிவிய போட்டுக்காட்டும், பல்ப எறிய வச்சுக் காட்டும். லைட்டர எறிய வச்சுக் காட்டும். நம்மாளுக்கு எதுவும் ஞாபகம் இருக்காது. ஈவா ரொம்ப சோகமாயிடும். வாலோடு கையோட தன்னுடைய கையை கோர்த்துக்கிட்டு அது மேல தலையை சாய்ச்சிக்கிட்டு சோகமா நிக்கும். என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு. ஒரு ரோபோ நல்லாகனும்னு நமக்கு படபடக்குதேன்னுல்லாம் நமக்குத் தோணவே தோணாது. மெல்ல நம்மாளுக்கு நினைவு வந்து ஈவாவின் கையை இறுக்கிப் பிடிக்கும். இரண்டும் சந்தோஷமாக வாழும். விண்ணைத்தாண்டிய காதல். அதனுடன் இவர்களைப் பிடித்த இவர்களுக்கு உதவி செய்த சில ரோபோக்கள் இவர்களுடன் சேர்ந்துகொள்வார்கள். கரப்பான் பூச்சி இரண்டு ரோபோக்குள்ளயும் போய் வந்துகொண்டிருக்கும். மனிதர்கள் அவர்களுடைய உணவிற்கான அடுத்த வேலையைச் செய்யச்சென்றுவிடுவார்கள்.

சயின்ஸ் ஃபிக்சன் அனிமேஷன் படத்தை இவ்வளவு விறுவிறுப்பாக, நம்மை எங்கும் நகர விடாமல் பார்க்க வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள்.
This entry was posted on 3/23/2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments:

On March 24, 2010 at 2:00 PM , R.Gopi said...

பதிவின் ஆரம்ப வரிகள் அக்மார்க் அட்டகாசம்.. அந்த வரிகள் தான், இந்த பதிவை முழுதும் படிக்க தூண்டியது...

கூடவே, நல்ல நகைச்சுவையுடன் கூடிய பட விமர்சனம்... ஒரு தேர்ந்த எழுத்தாளரின் விமர்சனத்திற்கு எந்த விதத்திலும் குறையாமல் இருந்தது...

வாழ்த்துக்கள் ஜெயந்தி....

 
On March 24, 2010 at 3:51 PM , Anonymous said...

AM THE FIRST..

VANUTOMULA...

ERUNGA PADICHITU COMMENTS PODREN..(SORRY)

COMPLAN BOY.

 
On March 24, 2010 at 3:57 PM , Anonymous said...

Wow superana padivunga..

apdiey padam patha oru feelings..

hm science evlo vegama valarnthukitu varuthu..

namathan inumm valarmalaey erukom..

adutha vetukaran konjam valarnthtapothum...epdida avan kelapovanu room potu yesitukitu patukitu erupanga..

adavidunga ellarum nalavangala eruntha enna panrathu...

etho oru sila peru ungala pola nala padivargal erukirathala ena pola vasagargalkku nandraga ullathu.

nandri valga valamudan.

v.v.s.sangam sarbaga
Complan surya

 
On March 24, 2010 at 6:12 PM , ராஜ நடராஜன் said...

வாலுக்கு போட்டியா இன்னொரு வால்:)

 
On March 25, 2010 at 2:55 PM , Anonymous said...

oh god,,nanthan first varlamnu patha
oru nanbar namaku munnadi vantuvitar...
sari paravala next padivila pakalam..neenga epo padivu podrenganu enaku first inform pandiunga..

nandri valga valamudan.

 
On March 26, 2010 at 9:27 AM , Bala said...

ரொம்ப நல்ல பதிவு.. இந்த படத்தை எடுத்த பிக்ஸார் நிறுவனம் இன்னும் பல நல்ல படங்களை எடுத்து இருக்காங்க.. Ratatouille, Cars, Finding Nemo, Monsters Inc எல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கும்.. கண்டிப்பா பாருங்க.. இன்னும் நிறைய சினிமா பத்தி எழுதுங்க..

 
On March 29, 2010 at 4:14 PM , ஜெயந்தி said...

நன்றி ஆர்.கோபி!
தங்கள் வரிகள் உற்சாகப்படுத்துகிறது.

நன்றி காம்ளான் சூர்யா!
எனக்குக்கூட மீ த பஸ்டா.

நன்றி ராஜ நடராஜன்!
ஆமாமம்.

நன்றி பாலாஜி!
நீங்கள் சொன்ன படங்களை பார்க்கிறேன். விமர்சனமும் எழுதுவேன்.

 
On August 7, 2010 at 9:07 PM , Anonymous said...

hi, I saw this movie in theatre...Soooo BORING