ஜனவரி முழுவதும் ப்ளாக் பக்கமே வரமுடியாதபடி வேலை. சரி பிப்ரவரியில் அதை சரிக்கட்டிவிடலாம் என்று நினைத்தால்...

வைரஸ் ஒன்று புகுந்து கம்ப்யூட்டரை கபளீகரம் பண்ணிவிட்டது. அது சரி செய்வதற்கு ஒருவாரம் ஆகிவிட்டது. அது சரியானதும் கோயம்புத்தூருக்கு கல்யாணத்திற்கு போக வேண்டி அதில் ஒரு வாரம் ஓடிவிட்டது. பின்னூட்டத்திற்குக்கூட நன்றி சொல்ல முடியவில்லை. ப்ளாக்கர் வாழ்க்கைக்கு நேரும் கொடுமைகளைப் பாருங்கள்.

எப்படித்தான் எல்லாரும் ப்ளாக்கை மெயின்டெயின் பண்ணுகிறார்களோ? அடிக்கடி இடுகைகளையும் போட்டுக்கொண்டு வியூவர்சையும் பாலோயர்சையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு யப்பா நினைக்கும்போதே தலைசுற்றுகிறது. இதில் அடுத்தவருக்கு பின்னூட்டம் போடுவது வேறு. அவர்களைப் பார்த்தாலே பொறாமையாக இருக்கிறது (நற நற நற நற வேறு ஒன்றுமில்லலை பல் கடிபடுகிறது).

எங்களுக்கும் காலம் வரும். அப்போது நாங்களும் கலக்குவோம்ல (அப்டியெல்லாம் பாக்கப்படாது. அப்துல்கலாம் அய்யாதான் கனவு காணச் சொல்லியிருக்காரு).
|
This entry was posted on 2/24/2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

25 comments:

On February 24, 2010 at 6:10 PM , சந்தனமுல்லை said...

:-)அதான் வந்துட்டீங்களே! சீக்கிரம் கலக்குங்க மேடம்!

 
On February 24, 2010 at 6:32 PM , அண்ணாமலையான் said...

நீங்க நெனச்சது நடக்க வாழ்த்துக்கள்....

 
On February 24, 2010 at 7:07 PM , அன்புடன் நான் said...

கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்.

 
On February 24, 2010 at 7:08 PM , அன்புடன் நான் said...

கனவு மெய்ப்பட... வாழ்த்துக்கள்.

 
On February 24, 2010 at 9:58 PM , ஸ்வர்ணரேக்கா said...

நானும் நற நறக்கிறேன்..

இதே கஷ்ட்டங்கள் எனக்கும் இருப்பதால்..

 
On February 24, 2010 at 10:44 PM , தமிழ் உதயம் said...

யானைக்கொரு காலம் வந்தா, பூனைக்கொரு காலம் வராமலா போகும்.

 
On February 24, 2010 at 11:06 PM , உண்மைத்தமிழன் said...

இப்படியும் ஒரு பதிவா..?

முருகா..!

 
On February 24, 2010 at 11:09 PM , நினைவுகளுடன் -நிகே- said...

வந்துட்டீங்களே! சீக்கிரம் கலக்குங்க

 
On February 24, 2010 at 11:38 PM , Paleo God said...

On February 24, 2010 11:06 PM , உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
இப்படியும் ஒரு பதிவா..?

முருகா..!//

அதானே..::))

 
On February 24, 2010 at 11:52 PM , மதி சூடி said...

இதே தான் நான் மலடி ஆக இருக்கும் காரணம். மற்றவர்களின் பதிவுச் செல்வங்களை ரசிக்கவே நேரம் சரி ஆக இருக்கின்றது . என்ன தான் இருந்தாலும் நாமே பிரசவித்த பதிவுச் செல்வங்களை ரசிப்பதிலும் ஆனந்தமே!. வாழ்த்துக்கள்.

 
On February 25, 2010 at 9:42 AM , Anonymous said...

change to linux operating system and no virus hereafter.

 
On February 25, 2010 at 10:44 AM , எல் கே said...

கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்.
+1

namma pakkamum vaanga

 
On February 25, 2010 at 12:26 PM , CS. Mohan Kumar said...

ஆமுங்கோ!! எல்லாருக்கும் உள்ளது தான் இந்த பிரச்சனை!!

 
On February 26, 2010 at 10:13 PM , ஜெயந்தி said...

நன்றி சந்தனமுல்லை!

நன்றி அண்ணாமலையான்!

 
On February 26, 2010 at 10:15 PM , ஜெயந்தி said...

நன்றி சி.கருணாகரசு!

நன்றி ஸ்வர்ணரேகா!
இருவரின் முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி!

 
On February 26, 2010 at 10:19 PM , ஜெயந்தி said...

நன்றி தமிழ் உதயம்!
கண்டிப்பா வரும்.

நன்றி உண்மைத் தமிழன்!
தங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

 
On February 26, 2010 at 10:31 PM , ஜெயந்தி said...

நன்றி நினைவுகளுடன் -நிகே-!

நன்றி ஷங்கர்!
தங்கள் முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி!
எங்களைப் போல் புதியவர்களுக்கு இதுதானே கவலை.

 
On February 26, 2010 at 10:34 PM , ஜெயந்தி said...

நன்றி மதி சூடி!
நீங்கள் நிறைய எழுத வேண்டும். நீங்கள் ரசிப்பதைப் போல் மற்றவர்களும் உங்கள் அனுபவங்களை ரசிக்க வேண்டும். அதனால் எழுதுங்கள்.

நன்றி ஷீரடி சாய்தாசன்!
நீங்கள் சொல்வது போல் லினக்ஸ்ல் வைரஸ் வராதா? அது என்னவோ இந்த விண்டோஸ்தான் பழகிவிட்டது. தங்கள் ஆலோசனைக்கு நன்றி.

 
On February 26, 2010 at 10:35 PM , ஜெயந்தி said...

நன்றி எல்கே!

நன்றி மோகன் குமார்!
இருவரின் முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

 
On February 27, 2010 at 2:58 PM , R.Gopi said...

இதையெல்லாம் “ஜூஜூபி” மாதிரி தாண்டி வந்து வழக்கம் போல கலக்குங்க ஜெயந்தி...

வாழ்த்துக்கள்......

 
On February 27, 2010 at 4:22 PM , பா.ராஜாராம் said...

:-)

 
On March 8, 2010 at 2:19 PM , அமுதா கிருஷ்ணா said...

நல்ல கனவுகள் நிச்சயம் நடக்கும்...

 
On March 9, 2010 at 8:35 PM , ஜெயந்தி said...

நன்றி ஆர்.கோபி!

நன்றி பா.ராஜாராம்!

நன்றி அமுதா கிருஷ்ணா!

 
On March 9, 2010 at 9:05 PM , தேவன் மாயம் said...

இது!!!

இந்த யோசனை இருந்தால் போதும் பிரபல பதிவர் ஆகிவிடுவீர்கள்!

 
On March 24, 2010 at 9:22 PM , ஜெயந்தி said...

நன்றி தேவன் மாயம்!