இது ஆயிரத்தி ஒன்னாவது.

நான் சிறு வயதில் படித்த மாயாஜாலக் கதைகள் நினைவுக்கு வந்தது. ஒரு நாட்டில் இளவரசியை அரக்கன் தூக்கிக்கொண்டு போய்விடுவான். உடனே ராஜா தாண்டோரா போட்டு அறிவிப்பார், 'யார் இளவரசியை காப்பாற்றி அழைத்து வருகிறார்களோ அவர்களுக்கு இளவரசியை கல்யாணம் பண்ணி வைத்து நாடும் ஒப்படைக்கப்படும்'.

நமது ஹீரோ இளவரசியைக் காப்பாற்றக் கிளம்புவார். அப்போது அவருக்குத் தெரியவரும் அரக்கனை நேருக்கு நேர் போரிட்டு ஜெயிக்க முடியாது. ஏனென்றால் ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டி ஒரு கூண்டுக்குள் இருக்கும் கிளியின் உடலில் அரக்கனின் உயிர் இருக்கும். அந்தக் கிளியைக் கொன்றால்தான் அரக்கன் சாவான். அந்த ஏழு மலை, கடலை தாண்டும்போது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான இடர்பாடுகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். ஒவ்வொரு இடங்களின் இடர்பாடுகளையும் கடந்து ஹீரோவுக்கு தேவதைகள், மந்திரவாதி, நல்ல பூதம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு உதவி செய்து அந்தக் கிளியை அடைய உதவுவார்கள். கடைசியில் கிளியைக் கொன்று இளவரசியை திருமணம் செய்து பல்லாண்டு நல்லாட்சி நடத்துவான் ஹீரோ.



இந்தப் படத்தில் அதேபோல் அந்த ஏழு இடர்பாடுகள் வந்தபோது எனக்கு இந்தக்கதைகள்தான் ஞாபகத்திற்கு வந்தன. அதனால் என்னால் படத்தை ஆர்வத்துடன் பார்க்க முடிந்தது. இடைவேளைக்கு பின்னர் வரும் காட்சிகள் புரியவில்லை என்று பெரும்பாலோர் கூற்று. இடைவேளைக்குப் பின் வரும் காட்சிகளில் வசனம் மிகக் குறைவு. அதுவும் 12ம் நூற்றாண்டுத் தமிழ். ஒரு பாதி படத்தை வசனமே இல்லாமல் பார்த்து புரிந்துகொள்ளுங்கள் என்றால் நமக்கு இது புது விசயம். ஒரு காட்சியை விளக்க பக்கம் பக்கமாக வசனம் பேசுவார்கள். அல்லது கொஞ்சமாவது வசனம் இருக்க வேண்டும். காட்சியைப் பார்த்து நீயே புரிந்து கொள்ள வேண்டும் என்பது நமக்கு ரொம்பப் புதிது. அதுதான் இதில் பிரச்சனை.

செட் போட்டு படம் எடுக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட்டு, முதன் முதலில் நிஜமான கிராமங்களை நோக்கி பாரதிராஜா சென்றபோது சந்தோஷமாக வரவேற்றவர்கள் நாம். அடுத்து பக்கம் பக்கமாக பேசும் வசனங்களை சுருக்கி சின்னச் சின்னதாக மணிரத்தினம் கொடுத்தபோது அதையும் வரவேற்று ஏற்றுக்கொண்டவர்கள் நாம். இப்போது அடுத்த கட்டத்திற்குச் சென்று சீன்களைப் பார்த்து உன் மூளைக்கு வேலை கொடுத்து நீயே புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்வதையும் நாம் ஏற்றுக்கொள்வோம். இது நிச்சயமாக அடுத்தகட்ட வளர்ச்சி என்றே நான் நினைக்கிறேன்.

படத்திலும் அந்த பல நூற்றாண்டுகளாக வஞ்சம் வைத்து ஒரு இனத்தையே அழிப்பதைப் பார்க்கும்போது நம் பக்கத்தில் சமீபத்தில் பார்த்த இன அழிப்பே ஞாபகத்திற்கு வந்து மனதை கனக்கச் செய்கிறது. அழிப்பு என ஒன்று நடக்கும்போது அது நிச்சயம் அத்துடன் முடியாது என்பதை படத்தின் முடிவு காட்டுகிறது, அடுத்த அழிப்பு நிச்சயம் இருக்கிறது என்பதை. மனிதனாக பிறந்த நாம் வாழப் போவது ஒரு பிறவிதான். அந்த வாழ்க்கையை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து சந்தோஷமாக வாழ்வோம் என்ற எண்ணம் எப்போது அனைவருக்கும் வருகிறதோ அப்போதுதான் நாம் பரிணாமத்தில் முழுமை அடைகிறோம் என்று நினைக்கிறேன்.
|
This entry was posted on 2/27/2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On February 27, 2010 at 5:33 PM , அண்ணாமலையான் said...

பாத்தீங்களா? சந்தோஷம்

 
On February 28, 2010 at 7:09 AM , Anonymous said...

"ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து சந்தோஷமாக வாழ்வோம் என்ற எண்ணம் எப்போது அனைவருக்கும் வருகிறதோ அப்போதுதான் நாம் பரிணாமத்தில் முழுமை அடைகிறோம் என்று நினைக்கிறேன்"
enta ennangala ellarukum eruntha evlo nala erukum..neenga elthina vasikumpothu rumba santhosma eruntchu..ungapola nala athamakalum entha ulagil valavathalthan ulagam needthukonduerukirathu enpathu enthan panivana ennam."

then
ada ponga neenga veara
vitukuduthu vallatium atleast matavangala kastpaduthama valathaley pothumnga...

Pesuvatharkey kasu ketkum entha kalathiyila
manithargali matikum manithargali nanum thedikonduthan erukiren.

hm nanraga ullathu unga vimarsanam.

valga valamudan.
innum enta thiraipadam parkkavillai.parthuvitu cholkiren.

 
On March 9, 2010 at 8:38 PM , ஜெயந்தி said...

நன்றி அண்ணாமலையான்!

நன்றி காம்ளான் சூர்யா!
அடுத்தவர்களை கஷ்டப்படுத்தாமல் இருந்தாலே போதும். நீங்கள் சொல்வது ரொம்ப சரி. உங்கள் பெயரில் உள்ள அடைமொழி அது என்ன காம்ளான் சூர்யா?