நேற்று போபால் விஷ வாயு தாக்கிய நாள். ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியான நாள். லட்சக்கணக்கான மக்கள் இன்னும் அதன் பாதிப்புகளுடனேயே வாழ்கிறார்களாம். குழந்தைகளும் ஊனத்துடனேயே பிறக்கிறதாம். அங்குள்ள நிலத்தடி நீர் மாசுபட்டுவிட்டது. இதற்கான வழக்கு இன்னும் நடக்கிறதாம். அப்படியே நிதியுதவி கிடைத்தாலும் 1200 ரூபாய் மட்டுமே கிடைக்குமாம். விஷ வாயு தாக்கியதில் இருந்து அனைத்து தேசியக் கட்சிகளும் ஆட்சி செய்துவிட்டன. கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர. அந்த மக்கள் இந்த நிதியையும் ஆண்ட தேசியக்கட்சிகள் அனைத்திற்கும் நிவாரண நிதியாக வழங்க வேண்டும். அவர்கள் அப்போதாவது வெட்கப்படுவார்களா என்று தெரியவில்லை?
இதெல்லாம் நம் நாட்டிற்குள்ளேதான் நடந்தது. இன்னும் அதற்கான தீர்வு கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். எல்லா அரசியல்வாதிகளும் அரசியல் நடத்திக்கொண்தான் இருக்கிறார்கள். யாருக்காக நடத்துகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. உள் நாட்டுக்குள்ளேயே இந்த நிலை. இதில் பக்கத்து நாட்டில் வாழும் நம் இன மக்களை அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று நாம் நினைப்பது...
XXXXXXXXXX
மழை
உழவன் முதல் கிழவன் வரை திட்டியதால்
கோபம் கொண்டு பெய்து தீர்த்தது
ஊரே வெள்ளக் காடாய் மாறியது.
பெரிசு முதல் சிரிசு வரை திட்டியதால்
மறுபடியும் கோபம் கொண்டு
நான்கு வருடத்திற்கு வரவேயில்லை.
எப்படி அழைத்தால் இந்த மழை
தேவையான அளவிற்கு மட்டுமே பெய்யும்!
இதை கவிதை என்று நீங்கள் நினைத்துக்கொண்டு படித்தால் அதற்கு கம்பேனி பொறுப்பல்ல.
உழவன் முதல் கிழவன் வரை திட்டியதால்
கோபம் கொண்டு பெய்து தீர்த்தது
ஊரே வெள்ளக் காடாய் மாறியது.
பெரிசு முதல் சிரிசு வரை திட்டியதால்
மறுபடியும் கோபம் கொண்டு
நான்கு வருடத்திற்கு வரவேயில்லை.
எப்படி அழைத்தால் இந்த மழை
தேவையான அளவிற்கு மட்டுமே பெய்யும்!
இதை கவிதை என்று நீங்கள் நினைத்துக்கொண்டு படித்தால் அதற்கு கம்பேனி பொறுப்பல்ல.
0 comments: