எனது யோகா...
10/20/2009 | Author: ஜெயந்தி
குழந்தைகளைப் பார்த்தாலே மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும். அவர்கள் பேசினாலோ கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். அவர்கள் பாடினால்...?

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 நிகழ்ச்சியில் அவர்கள் பாடுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.
நிகழ்ச்சி துவங்குவதற்கு சற்று முன் என் நிலை என்ன என்பதை சொல்கிறேன். இடுப்பு வலியின் காரணமாக எதைப் பார்த்தாலும் எரிச்சல், எல்லோர் மீதும் எரிச்சல் வந்துகொண்டிருந்தது. நேரம் ஆக ஆக எரிச்சல் கூடிக்கொண்டே போனது.

அப்போதுதான் நிகழ்ச்சி துவங்கியது.
இரண்டு குழந்தைகள் பாடியவுடனேயே மனதில் அத்தனை அமைதி. தியானம், யோகா பண்ணினால் அமைதி கிடைக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். குழந்தைகளின் பாட்டைக்கேட்டு என் மனது அமைதியானது.
சின்ன குழந்தைகளிடம் எவ்வளவு திறமை. பழைய மெலடி பாடல்களை எவ்வளவு அருமையாக பாடுகிறார்கள். நல்ல நிகழ்ச்சி.

This entry was posted on 10/20/2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: